பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, June 17, 2011

மானம் காத்த மாவீரன் வாஞ்சிநாதன்

மானம் காத்த மாவீரன் வாஞ்சிநாதன்

1911ஆம் வருடம் ஜூன் மாதம் 17ஆம் நாள்.

தமிழகத்தின் தென்கோடியில் மணியாச்சி ரயில் நிலையத்தில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்ட தினம். அந்த நிகழ்ச்சிக்காக நினைவில் வைத்திருக்க வேண்டிய நாள் அல்ல இது. அந்த ஆஷைச் சுட்டுக் கொன்ற வீர வாஞ்சி தன்னையும் மாய்த்துக் கொண்டு இந்த பூமியை சிவப்பாக்கித் தன் தியாகத்தை மண்ணில் இரத்தத்தால் எழுதிய நாள் இது. அதனால் இந்த நாளை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

என் நண்பர் பேராசிரியர் தேவராஜ் கோயம்பத்தூரிலிருந்து நேற்று மாலை (16-6-2011) தொலைபேசியில் பேசினார். வீரவாஞ்சியின் தியாக நாளான ஜூன் 17இல் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருக்கிறது. அதற்குத் தானும் முன்னாள் மாவட்ட கலெக்டரும் தியாகி எல்.கிருஷ்ணசாமி பாரதி அவர்களின் புதல்வனும், தானே சுதந்திரப் போரில் ஈடுபட்டுச் சிறைசென்ற தியாகியுமான கி.லட்சுமிகாந்தன் பாரதி, I.A.S. அவர்களுடன் அங்கு செல்வதாகக் குறிப்பிட்டார். அந்த வீர புருஷனுடைய தியாகம் இந்த மண்ணில் நடைபெற்று நூறு ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது. ஆனால், அந்தத் தியாகத்தின் விலை நம் மக்களுக்குத் தெரிந்திருக்கிறதா? இந்த நாடு அந்த வீரமகனுக்கு உரிய மரியாதையைச் செய்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மையான பதில். என்ன செய்வது? பொய்யும், போலியும், வெளிச்சம் போட்டு நாட்டைக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்க எப்போதோ, நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது மரியாதைக்குரிய தலைவரான தூத்துக்குடி வழக்கறிஞர் ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சிறைவாசத்துக்குக் காரணமாக இருந்தவனும், அவர் சிறையில் கல்லுடைக்கவும், செக்கிழுக்கவும் வைக்கக் காரணமாக இருந்த ஆஷ் துரையை பழிவாங்கி இந்தியரின் குறிப்பாகத் தமிழனின் மானத்தைக் காக்க, அந்த ஆஷின் உயிரை மட்டுமல்ல, தன் உயிரையும் ஆஹூதியாகக் கொடுத்த நாள் என்பதை இந்த நாடே ஒன்று சேர்ந்து நினைவுகூர்ந்திருக்க வேண்டாமா?

இன்றாவது நமது இளைய தலைமுறை அந்த வீர இளைஞனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? தமிழகத்தில் எத்தனையோ நாளிதழ்கள் வெளியாகின்றன. எனக்குத் தெரிந்து "தினமணி" நாளிதழ்தான், தான் ஒரு தேசிய நாளிதழ் என்பதை நிலைநிறுத்தி இன்றைய இதழில் "வீர வாஞ்சிநாதன்" எனும் கட்டுரையைப் பிரசுரித்து அவனுக்கு மரியாதை செய்திருக்கிறது. "தினமணி"க்கும் அதன் ஆசிரியருக்கும் தலை வணங்குவோம். மா.வீரபாண்டியன் என்பவர் எழுதிய அந்தக் கட்டுரையின் கடைசி பாராவில் குறிப்பிட்டுள்ள செய்திதான் மிக முக்கியமானது. அதில்:--

"சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய மாணவ சமுதாயம் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து வகுப்புகளிலும் பாடத் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய மண்ணில் சிந்திய ரத்தத்தின் வலிமையை மாணவ சமுதாயம் அறிய முடியும்"

இந்த வரிகள்தான் நம்முடைய இந்தக் கட்டுரையின் நோக்கமும் ஆகும். வீர வாஞ்சியின் நினைவாக, நம்முடைய மற்றொரு வலைப்பூவான www.tamilnaduthyagigal.blogspot.com என்கிற வலைப்பூவில் நாம் ஏற்கனவே வெளியிட்டிருக்கிற வீர வாஞ்சியின் வாழ்க்கைக் குறிப்பை மீண்டும் இந்த கட்டுரையிலும் கொடுக்க ஆசைப் படுகிறேன். இதோ அந்த கட்டுரை:


வீர வாஞ்சி
தொகுப்புதஞ்சை வெ.கோபாலன்
உலக நாடுகளில் பல வன்முறைப் புரட்சிகளின் மூலம்தான் விடுதலையடைந்திருக்கின்றனபிரெஞ்சு புரட்சியில் மாண்ட உயிர்கள் எத்தனைரஷ்யப் புரட்சியில் மாண்டவர்கள் எத்தனை பேர்அமெரிக்க உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்இப்படி உலகம் முழுவதும் போர் மூலமாகத்தான் சுதந்திரம் பெற்றிருக்கின்றனர்இந்தியாவில் மட்டும்தான் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டம்சத்தியாக்கிரகம் மூலம் நெடுநாள் போராட்டத்துக்குப் பிறகு சுதந்திரத்தைக் காணமுடிந்ததுகாந்தியடிகளின் இந்தப் போரை "கத்தியின்றிரத்தமின்றிநடந்த போராக எடுத்துக் கொள்ளலாம்அதாவது ஆங்கிலேயர்களின் ரத்தத்தை சிந்த வைக்காமல்அடிபட்டுஉதைபட்டுதுப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு நம் இந்திய ரத்தத்தைச் சிந்தி இந்த சுதந்திரத்தைப் பெற்றோம் என்பதை மறுக்கமுடியாதுஅதுதான் அகிம்சை வழி. 
மகாத்மா காந்தியடிகள் இந்திய அரசியலில் ஆழங்கால் படுவதற்கு முன்பு பால கங்காதர திலகர் காலத்தில் இந்த அகிம்சை வழியெல்லாம் நடைமுறையில் இல்லைஅதுமட்டுமல்லாமல் எந்த வழியிலாவது ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்தியாவிலிருந்து விரட்டிவிட வேண்டுமென்கிற துடிப்புதான் நம் மக்கள் உள்ளங்களில் இருந்த கருத்துஅப்படிப்பட்ட சூழ்நிலையில் வாஞ்சிநாதன் எனும் தேசபக்த இளைஞன்கொடுமைக்காரனும்இந்தியர்களை புழுவிலும் கேவலமாகக் கருதக்கூடியவனும்தேசபக்த சிங்கம் ..சிதம்பரம் பிள்ளைக்குக் கிடைத்த கொடிய தண்டனைக்குக் காரணமாக இருந்தவனுமான ஆஷ் என்பவனை சுட்டுக் கொன்றான் என்பது எந்த வகையில் நாம் எடுத்துக் கொள்வதுஇது தேசபக்தியின் வெளிப்பாடா இல்லையாஇது தவறு என்று சொல்வதற்குஇதற்கு மாற்று வழி ஏதேனும் அந்த காலகட்டத்தில் இருந்ததாஇதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் கண்ட பிறகுதான் இந்த வீர இளைஞனின் தியாகத்தை மதிப்பிட வேண்டும்.
சரித்திர காலத்தில் ஒரு நாட்டுப் படையும்எதிரி நாட்டுப் படையும் நேருக்கு நேர் போரிட்டுக் கொண்டார்கள்அதில் இரு தரப்பிலும் வீரர்கள் உயிரிழக்க நேரிடுகிறதுஇதையெல்லாம் கொலையாகக் கருதுவதில்லைஅதுமட்டுமல்லாமல் கொடியவர்களும்சர்வாதிகாரிகளும் கொலை செய்யப்பட்ட வரலாறு நமக்கு நிறையவே கிடைக்கின்றனஇத்தாலியில் ஃபாசிஸ்ட் தலைவன் முசோலினியும் அவனோடு பல ஃபாசிஸ்ட்டுகளும் மிலான் நகரில் கொல்லப்பட்டு ஒரு பெட்ரோல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்தனர்அப்படிச் செய்தவர்கள் இத்தாலி தேசபக்தர்களாகக் கருதப்பட்டார்களேயன்றி கொலைகாரர்களாக அல்லஅவர்களுக்கு முன்பாக அதே இத்தாலியில் மாஜினியும் வன்முறை அரசியல் நடத்தியவர்தான்கொடுங்கோன்மை கட்டுக்கடங்காமல் போகிறபோது 'வன்முறை'யும் ஒரு ஆயுதமாகப் பயன்பட்டிருக்கிறது என்ற கோணத்தில் இந்த வீர வாஞ்சியின் வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்க்கலாம்தாங்கமுடியாத தருணத்தில் வன்முறையில் ஈடுபடும் தேசபக்தர்கள் எத்தகைய தியாகங்களைப் புரிகிறார்கள்அவையெல்லாம் அவர்களது சொந்த நலனுக்காகவாநாட்டின் நலன் கருதியாதன்னை அழித்துக் கொண்டு இந்த நாடு நல்ல நிலை அடையவேண்டுமென்று அவர்கள் செய்த தியாகங்களுக்கு அளவுகோல் உண்டாசைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒரு வெள்ளைக்கார சார்ஜெண்ட் சாண்டர்ஸ் என்பான் அடித்த அடியின் காரணமாகப் பாஞ்சால சிங்கம் லாலா லஜபதி ராய் இறந்து போனார்அன்று லாகூர் பல்கலைக் கழக மாணவர்களாக இருந்த ஷாகீத் பகத் சிங்சுக்தேவ்ராஜகுரு ஆகியோர் அந்த வெறிபிடித்த வெள்ளையனைச் சுட்டுக் கொன்றனர்அது கொலையாதேசபக்தனின் பழிவாங்கும் செயலா? 24 வயதில் அந்த இளைஞர்கள் நாட்டுக்காகத் தமது இன்னுயிரை நீத்த செயலை என்னவென்று சொல்லலாம்குதிராம் போஸ்மதன்லால் திங்க்ரா போன்ற மாவீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது யார் பொருட்டுஇதையெல்லாம் நம் மனதில் கொண்ட பிறகே வீரன் வாஞ்சிநாதனின் செயலை எடைபோட வேண்டும்.
வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியார்பொருட்களை விற்கவும் வாங்கவும் என்று வந்த வேலையை விட்டு இங்கு நாடுபிடிக்கும் வேலையில் இறங்கினர்அவர்களது சூழ்ச்சிக்கு இரையான ராஜ்யங்கள் எத்தனை எத்தனைவாரிசு இல்லாமல் ஒரு அரசன் இறந்தால் அந்த ராஜ்ஜியத்தைத் தங்களதாக எடுத்துக் கொண்டது பிரிட்டிஷ் சூழ்ச்சிராஜ்யத்தை நல்லபடி நடத்துவதாகவும்தகுந்த பாதுகாப்புக் கொடுப்பதாகவும் உத்தரவாதமளித்துப் பிடுங்கிக் கொண்ட ராஜ்யங்கள் எத்தனைஇந்தியர்கள் ஏமாளிகள் இவர்கள் தொடைகளில் திரித்த வரையில் லாபம் என்று கருதியது வியாபாரம் செய்யவந்த கிழக்கிந்திய கம்பெனிஅதில் ஆளவந்தவர்கள் ராபர்ட் கிளைவ் போன்றவர்கள் ஈவு இரக்கமற்ற முரடர்கள்இந்தியர்களை மனிதர்களாகவே நினைக்கத் தெரியாதவர்கள்இந்தப் பின்னணியில் வாஞ்சியின் வரலாற்றைப் பார்ப்போம்.
அமைதியாகவும்வெள்ளையனின் அடக்குமுறைக்குக் கட்டுப்பட்டும் தென்னகம் முழுவதும் வாய்பேசாத மெளனிகளாக இருந்த சமயம் உரக்கக் குரல் கொடுத்த தேசிய வாதிகள் ..சிதம்பரம் பிள்ளைசுப்பிரமணிய சிவா மற்றும் அவர்களோடு தோளோடு தோள் நின்ற மாடசாமி போன்ற வீரர் பெருமக்கள்இவர்களைக் கைது செய்து பொய்யான வழக்கில் சிக்க வைத்து இந்த வீரப்பெருமக்களைச் சிறைச்சாலைக்குள் கொண்டு வந்து அடைத்த பின் பிரச்சினை ஒன்றும் இருக்காது என்று இருமாந்திருந்த வெள்ளை ஆதிக்கமும்அதன் பிரதிநிதியாகத் திருநெல்வேலி ஆக்டிங் கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பானும் எதிர்பாராத அதிர்ச்சிக்கு உள்ளான சம்பவம் ஒன்று மணியாச்சி ரயில் சந்திப்பில் நடந்ததுஆம்! 1911ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி காலை 10-40 மணிக்கு மணியாச்சி சந்திப்பில் அந்த சம்பவம் நடந்தது. 

17-6-1911 
கலெக்டர் ஆஷ் அவனது மனைவி ஆகியோர் கொடைக்கானலில் படிக்கும் தங்களது பிள்ளைகளைப் பார்ப்பதற்காக நெல்லை பாலம் ரயில் நிலையத்தில் காலை 9-30 மணிக்குக் கிளம்பினார்கள்அவர்கள் பயணம் செய்த ரயில் மனியாச்சியில் நின்றதுஅங்கு தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலுக்காக இருவரும் முதல் வகுப்புப் பெட்டியில் காத்திருந்தார்கள்அந்த நேரத்தில் அந்த ரயிலில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து கொண்டு வந்த வண்டியை விட்டு இறங்கி ஆஷ் இருந்த முதல் வகுப்புப் பெட்டிக்குள் ஏறினார்வாஞ்சியைப் பார்த்த ஆஷ் பதறினான்யார் நீ என்று கத்தினான்உடனே தன் கைத்துப்பாக்கியால் ஆஷை நோக்கிச் சுட்டார்குண்டு அவன் மார்பில் பாய்ந்ததுஅந்த நிலையிலும் ஆஷ் தன்னைச் சுட்டவனைப் பிடிக்க முயன்றான்அவன் மனைவி அதைத் தடுத்து விட்டாள்.
ஆஷைச் சுட்டுவிட்டு பெட்டியை விட்டுக் கீழே இறங்கிய வாஞ்சிநாதனைப் பிடிக்க சிலர் முயன்றனர்அவர்களை உதறித் தள்ளிவிட்டு அருகிலிருந்த கழிப்பறைக்குள் சென்றுவிட்டார் வாஞ்சிஉள்ளே நுழைய பயந்துகொண்டு ஒரு மணி நேரம் நின்றவர்கள் கழிப்பறையிலிருந்து குண்டு வெடித்த சப்தம் கேட்டு உள்ளே போய் பார்த்தார்கள்அங்கே வாஞ்சி தனது கைத் துப்பாக்கியைத் தன் வாயினுள் சுட்டுக்கொண்டு இறந்து வீழ்ந்து கிடந்தார்குண்டடிபட்டுக் காயமடைந்த ஆஷ் திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லும் வழியில் கங்கைகொண்டான் எனுமிடத்தில் இறந்து போனார்.
கழிப்பறையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து கிடந்த வாஞ்சிநாதன் உடலைப் போலீசார் சோதனையிட்டனர்அவர் காட்டிலாகாவில் வேலை பார்த்தவராதலால் உறுதியான துணியால் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்தார்ஒரு பையில் தமிழில் எழுதப்பட்டுதமிழிலும் ஆங்கிலத்திலும் கையெழுத்திடப்பட்ட தேதியில்லாத ஒரு கடிதம் இருந்ததுஅவர் அணிந்திருந்த கோட்டில் ஒரு மணிபர்சும்ராணி விக்டோரியாவின் படமும்இரண்டாம் வகுப்பு ரயில்வே டிக்கட் ஒன்றுஐந்து அணா நாணயங்கள் இவை இருந்தன.
யார் இந்த வாஞ்சிஅன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட செங்கோட்டையில் கோயில் மணியமாக இருந்த ரகுபதி ஐயர் என்பவரின் மகன்இவருக்கு நான்கு சகோதரிகள்இரண்டு ஆண் பிள்ளைகளில் இவர் இளையவர்இவர் செங்கோட்டையில் ஆரம்பக் கல்வி பயின்றார்திருவனந்தபுரம் மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி..படித்தார்தனது 23ஆம் வயதில் முன்னீர்ப்பள்ளம் சீதாராமையரின் மகள் பொன்னம்மாளைத் திருமணம் செய்து கொண்டார்அங்கிருந்து பரோடா சமஸ்தானத்துக்குச் சென்று மரவேலை செய்யும் தொழில்துறைப் படிப்பைப் படித்துத் தேறினார்பிறகு புனலூரில் காட்டிலாகாவில் பாரஸ்ட் கார்டாக வேலைக்குச் சேர்ந்தார்.
அந்த காலகட்டத்தில் தென் தமிழ்நாட்டில் பாரதமாதா சங்கம் என்றொரு இயக்கம் வேகமாக வளர்ந்து வந்ததுஇதனை நிறுவியவர் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி என்பார்இவர் சீர்காழியை அடுத்த எருக்கூர் கிராமத்தில் பிறந்தவர்தேசபக்தியின் காரணமாக வெள்ளை அரசுக்கும்வெள்ளைக்காரர்களுக்கும் எதிராக ஒரு மாபெரும் புரட்சி செய்ய எண்ணி வங்கத்திலிருந்து வந்திருந்த சில புரட்சிக்காரர்களின் தீர்மானப்படி பாரதமாதா சங்கம் தோற்றுவிக்கப்பட்டதுநீலகண்டனுக்கு ஏற்கனவே புதுச்சேரியில் வந்து தங்கியிருந்த .வெ.சு.ஐயரின் தொடர்பு இருந்ததுஇந்த பாரதமாதா சங்கம் என்பது ஒரு ரகசிய இயக்கம்இதில் உறுப்பினர்களாக இருப்போர் ரகசியமாக ஒன்று கூடிகாளியின் படத்திற்கு முன்னால் குங்குமம் கலந்த தண்ணீரை வெள்ளையரின் குருதி என்று எண்ணிக் குடிப்பர்கத்தியால் தங்கல் கை விரல்களில் கீறிக்கொண்டு அந்த ரத்தத்தால் ஒரு வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வர்என்ன ஆபத்து நேர்ந்தாலும்சங்கத்தைப் பற்றிய ரகசியங்களை வெளியாருக்குச் சொல்வதில்லைஎதிர்பாராத ஆபத்து எதுவும் ஏற்பட்டால் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள வேண்டும்எப்படியும் ரகசியம் வெளிவரக்கூடாது என்றெல்லாம் இந்தச் சங்கத்தின் நிபந்தனைகள் ஆகும்.
வாஞ்சிநாதன் நீலகண்ட பிரம்மச்சாரியோடு நேர்ந்த ஏதோ மனவருத்தத்தால் அவரை ஒதுக்கிவிட்டு புதுச்சேரியிலிருந்த .வெ.சு.ஐயரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டார்செங்கோட்டையிலிருந்து புதுச்சேரி சென்று அங்கு ஐயரைச் சந்தித்தார்அப்போது ஐயர் சிலருக்குத் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை அளித்து வந்தார்அதில் வாஞ்சிநாதனும் சேர்ந்து கொண்டு துப்பாக்கிச் சுடும் பயிற்சியைப் பெற்றார்வாஞ்சிநாதன் ஆஷ் என்பானைக் கொல்ல ஏன் முடிவெடுத்தார்?
தூத்துக்குடியில் 1906இல் ..சிதம்பரம் பிள்ளை அவர்கள் தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனியை அழித்து ஒழிப்பதற்கு இடைவிடாமல் பாடுபட்டவன் அப்போது தூத்துக்குடியில் சப் கலெக்டராக இருந்த இந்த ஆஷ் என்பான்அங்கு இவன் இருந்த காலத்தில் இவன் செய்த அக்கிரமங்களுக்கு அளவே இல்லைநாடு போற்றும் சிதம்பரம் பிள்ளையை அவமதித்தான்அவர் மீது பொய் வழக்குகளைப் போட்டான்இவரை ஒழிப்பதுதான் தனது வாழ்க்கை லட்சியம் என்பது போல நடந்து கொண்டான்.
குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளைக்காரர்கள் குள்ளிப்பதற்காக அங்கு இந்தியர்கள் யாரும் நீராடக்கூடாது என்று உத்தரவு போட்டான் ஆஷ்..சிதம்பரம் பிள்ளை இரண்டு தீவாந்தர தண்டனை பெறக் காரணமாக இருந்தவனும்உத்தமத் தலைவராக இருந்த சுப்பிரமனிய சிவாவை அவரது தகுதியறியாமல் அவமானப் படுத்திய இந்த அன்னியனை இனியும் உலாவ விடக்கூடாது என்று முடிவெடுத்தார் வாஞ்சிரகசியக் கூட்டத்தில் சீட்டுக் குலுக்கிப் போட்டு பாரதமாதா சங்கத்தினர் வாஞ்சியின் பெயர் வரவே இந்தப் பணியை முடிக்க வாஞ்சியை ரத்தத்தால் வீரத் திலகமிட்டு வழியனுப்பி வைத்தனர்வாஞ்சியும் திட்டமிட்டபடி ஆஷையும் கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்டார்.
வாஞ்சியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கிலக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்ன? "ஆங்கிலச் சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசத்தின் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தித் தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான்எங்கள் ராமன்சிவாஜிகிருஷ்ணன்குருவோவிந்தன்அர்ஜுனன் ஆகியோர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் எருது மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சயனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறதுஅவன் எங்கள் தேசத்தில் கால் வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம்அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று செய்கை செய்தேன்இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை."
இந்தக் கொலை நாடு முழுவதும் பரபரப்பை ஊட்டியதுஎங்கு பார்த்தாலும் போலீசின் அத்து மீறல்கெடுபிடிபுனலூரில் ஒரு வக்கீல் தான் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்செங்கோட்டையில் வாஞ்சிநாதனுக்கு நெருங்கியவர்கள் வீடுகள் போலீசாரால் சூறையாடப்பட்டனகைதுக்குத் தப்பி தலைமறைவானார் மாடசாமி என்பார்தர்மராஜ ஐயர் வீடு சூறையாடப்பட்டவுடன் சித்திரவதைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

23 
வயதே ஆன வாஞ்சிநாதனின் இளம் மனைவி பொன்னம்மாள்பருவமடைந்த நாள் முதலே விதவையானாள்தேசபக்தனை மணந்து கொண்டால் என்ன கிடைக்கும் என்பதை அவள் உலகுக்கு அறிவிப்பது போல எல்லாம் நடந்தனஇந்த வழக்கில் மாடசாமி தப்பிப் போய்விட்டாலும்அழகப்ப பிள்ளைதென்காசி மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்சாவடி அருணாசலம் பிள்ளை எனும் மாணவர் கல்லூரி விடுதியிலேயே கைது செய்யப்பட்டார்இவர்கள் தவிர இந்த வழக்குக்காக தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளைவக்கீல் குமாஸ்தா சோமசுந்தரம் பிள்ளைசுந்தரபாண்டியபுரம் சோமசுந்தரம் ஐயர் ஆகியோரும் கைதானார்கள்இவர்களில் சிலர் அப்ரூவர்களாக ஆனார்கள்புதுச்சேரியில் இருந்த போது மாடசாமி மூலம் வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொல்லப் போகிறான் என்ற செய்தி கேட்டதும்இதுபோன்ற தனிப்பட்ட கொலைகளில் நம்பிக்கை இல்லாதஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு புரட்சி செய்ய ஒரு இயக்கத்தை நடத்தி வந்த நீலகண்ட பிரம்மச்சாரிபழி தன் மீது விழுந்துவிடும் என்பதால் தப்பிக் காசி நகருக்குச் சென்று விட்டார்ஆனால் விதி அவரை அங்கு சென்னை மாகாண ரகசியப் போலீசார் உருவில் துரத்திக் கொண்டு சென்றதுஅவர் அங்கிருந்து கல்கத்தா சென்று விட்டார்ஆனால் காசியில் இவருக்கு அடைக்கலம் கொடுத்த செட்டியாரை போலீஸ் துன்புறுத்தியது.
தன்னைக் கைது செய்ய போலீசார் அலைகிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் நீலகண்ட பிரம்மச்சாரி கல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சரணடைந்தார்அங்கிருந்து அவர் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார்இவரை நீதிபதியின் முன்பு கொண்டு வந்து நிறுத்தியபோது விலங்கிடப்பட்டுக் கொண்டு வரப்பட்டார்இவரது தேஜசைப் பார்த்த நீதிபதிஇவரது விலங்குகளை நீக்கச் சொல்லி உத்தரவிட்டார்பின்னாளில் ஓம்கார் சுவாமிகளாக நீலகண்ட பிரம்மச்சாரி கர்நாடக மாநிலம் நந்தி மலையடிவாரத்தில் வசித்த காலம் வரை அந்த நீதிபதி இவருடைய சீடனாக விளங்கி வந்தார்.
ஆஷ் கொலை வழக்கு நீண்ட நாட்கள் நடைபெற்றதுஇறுதியில் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும்கிருஷ்ணாபுரம் சங்கரகிருஷ்ணன் 4 ஆண்டுகள்ஆலப்புழை ஹரிஹர ஐயர் 3 ஆண்டுகள்தூத்துக்குடி முத்துக்குமாரசாமி பிள்ளைசுப்பையா பிள்ளைசெங்கோட்டை ஜெகநாத ஐயங்கார்புனலூர் பாபு பிள்ளைசெங்கோட்டை பிச்சுமணி ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததுமேலும் சிலர்சாவடி அருணாசலம் பிள்ளைகஸ்பா அழகப்ப பிள்ளைஎட்டயபுரம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் விடுதலையானார்கள். 
ஒருக்கால் வாஞ்சி உயிரை விடாமல் இருந்திருந்தால் அவருக்கு பிரிட்டிஷ் அரசு தூக்குத் தண்டனை விதித்திருக்கும்இவர்கள் கையால் மாண்டு போவதைவிட தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதையே அந்த மாவீரன் விரும்பி ஏற்றுக் கொண்டான்இத்தோடு இந்த வழக்கின் போக்கு நின்று போய்விடவில்லைஇந்த தண்டனையெல்லாம் கொடுத்து முடித்த பிறகும்வீர சாவர்க்கருக்கு இதில் பங்கு உண்டா என்று போலீசுக்கு மூக்கில் வியர்த்ததுஅவரையும் விசாரணை செய்தனர்இன்றும் கூட ஆஷ் கொலை எங்கு எவரால் திட்டமிடப்பட்டது என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லைவாஞ்சி புதுச்சேரி சென்று .வெ.சு.ஐயரைச் சந்தித்தது அறிந்து போலீஸ் ஐயரை மாட்டிவைக்க தன்னால் ஆனமட்டும் முயன்று பார்த்ததுஅதற்குச் சாதகமாக எந்த சாட்சியும் கிடைக்கவில்லைஐயரின் மீது வழக்குப் போட முடியவில்லை.
தேசபக்த சிங்கங்கள் இதற்கு முன்பு பல தடவை முயன்றனர்சில வெற்றி பெற்றனசில தோல்வியில் முடிந்தனகுதிராம் போஸ் முயன்றதில் இரு பெண்கள்தான் மாண்டனர்மதன்லால் திங்க்ரா யாரைக் கொல்ல திட்டமிட்டாரோஅவர் தப்பிவிடமற்றொரு குற்றவாளியான கர்சானைத் தாக்கியதுஆனால் மணியாச்சியில் வாஞ்சிநாதன் வைத்த குறி தப்பவில்லைஇதனை வெறும் கொலையாகப் பார்ப்பதை விட ஒரு தேசபக்தன் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கொள்வதுதான் சரியாக இருக்கும்காரணம்அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனியின் பானர்மன் எனும் ஆங்கில தளபதி வீரபாண்டிய கட்டபொம்மனைக் கயத்தாற்றில் தூக்கிலிட்டான்நூறு ஆண்டுகள் கழித்து அதே நெல்லை மண்ணில் வீரவாஞ்சி அதற்குப் பழிவாங்கிவிட்டான் என்றுதான் கொள்ள வேண்டும். 
வாஞ்சிநாதன் இந்தச் செயலைச் செய்த மணியாச்சி ரயில் நிலையத்துக்கு அவன் பெயரை வைக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்திலும்வெளியிலும் காங்கிரஸ் உறுப்பினர் குமரி அனந்தன் அவர்கள் பாடுபட்டுஇறுதியில் மணியாச்சி என்ற பெயரோடு வாஞ்சியின் பெயரையும் சேர்த்திடச் செய்தமைக்கு அவருக்கு தேசபக்தர்கள் நன்றிக்கடன் பட்டவர்களாகிறார்கள்வாழ்க வீர வாஞ்சியின் புகழ்!

இனி வரும் ஆண்டுகளிலாவது இந்த வீர இளைஞனின் நினைவு நாளில், நம் நாட்டு தேசிய சிந்தனையுள்ள தேசபக்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் கூடி இந்த நாட்டின் சுதந்திரத்துக்குத் தங்கள் இன்னுயிரைக் கொடுத்த வீரர்களை நினைவுகூர்வதோடு, இனி வரும் காலத்தில் தேசவிரோத, ஊழல் கூட்டத்தை அடியோடு ஒழிக்க சபதம் ஏற்போம். மகாகவியின் வார்த்தைப்படி இந்த சுதந்திரத்தை "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?" என்ற கேள்வி எழுப்பி, இந்த நாட்டைக் காக்க உறுதி ஏற்போம். வந்தேமாதரம்! ஜெய்ஹிந்த்!!

1 comment:

Anonymous said...

தினமணி எழுதியது போல் இது பள்ளிகளில் பாடமாக வைக்கவேண்டிய வரலாறு.
குலசை ஆ.கந்தசாமி