பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, April 28, 2012



The beauty of a woman lies IN HER SILENCE
rather than her speech.


The beauty of a woman lies IN HER VEIL
rather than her face.


The beauty of a woman lies IN HER SUBMISSION
rather that her leadership.


The beauty of a woman lies IN HER SMILE
rather than her laughter.


The beauty of a woman lies IN HER PATIENCE
rather than her inquisitiveness.


The beauty of a woman lies IN HER ABOD
rather than her adventure.


The beauty of a woman lies IN HER OFFSPRING
rather than herself.


The beauty of a woman lies IN HER EXPERIENCE
rather than her age.


The beauty of a woman lies IN HER HEART DEPTH
rather than in skin deep


The beauty of a woman lies IN HER KITCHEN
rather than in cubicles.


The beauty of a woman lies IN HER PERSPIRATION
rather than her perfumes.


The beauty of a woman lies in her LORD because HE is the creator of such a beautiful thing called Woman...!!! 


Friday, April 27, 2012


கோடைக்காலப் பயிலரங்கம்.

தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷனும், இண்டாக் அமைப்பின் தஞ்சாவூர்க் கிளையும் இணைந்து பள்ளி மாணவிகளுக்கான பயிலரங்கம் ஒன்றினை நடத்த உள்ளன. ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரை இப்பயிலரங்கம் தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷனில் நடைபெறும். எட்டாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் இதில் கலந்து கொள்ளலாம். இப்பயிலரங்கில் மூச்சுப் பயிற்சி, ஓவியம், கணினி, அடிப்படைத் தையல், நடைமுறை ஆங்கிலம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நேரம் முற்பகல் 9-30 மணி முதல் மாலை 5 மணி வரை

முற்றிலும் இலவசமான இப்பயிலரங்கில் கலந்து கொள்ள விரும்பும் மாணவிகள் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்:

94437 40303 / 98424 55765
26-4-2012                                                       மரபுவுண்டேஷன,           இண்டாக்.
"பாரத நாடு பார்க்கெலாம் திலகம், நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்". நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமைப் படு என்கிறார் பாரதியார். பெருமைப் படலாமா? பாருங்கள் படங்களை, பிறகு பெருமைப் படலாம்.

விளையாட இது நேரமா? இது தகுமா?

புனித அன்னையர் அரட்டைக்கு இடமா இது?

காவலர்களுக்கழகு காக்கியும் தொப்பியும் மட்டும்தானா?


Sunday, April 22, 2012

கையூட்டு

ஆசிரியரிடம் அடிவாங்க கை நீட்டிய பழக்கத்தால் செய்யும் பணியில் கையூட்டு வாங்க கை நீண்டதாம், சொல்கிறார் புருனெய் தனுசு. அப்படியும் இருக்குமா? சே! சே! ஆசிரியர் அடித்தது நம்மை நல்வழிப்படுத்த. நாம் கை நீட்டுவது தீமைக்கு வழிகாட்ட. இருந்தாலும் தனுசு அவர்களின் கற்பனையை ரசிப்போம் வாரீர்.

கையூட்டு 
+++++++++

அன்று 
சிறுவனாய் இருந்த போது
பள்ளி நாட்களில்
கணக்குப் பாடத்தை 
சரியாக செய்யாததால் 
வாத்தியாரிடம் கையை நீட்டுவேன் பிரம்படிக்காக.

அடி உதவியது போல்
அண்ணன் தம்பி உதவ வில்லை எனக்கு.
கையை நீட்டிப் பிரம்படி வாங்கியதால் 
கை நீட்டுவது வழக்கமாகி

இன்று
அலுவலகத்தில் பழக்க தோஷத்தில் 
கையை நீட்டுகிறேன் வரும்படிக்காக!
வாழ்கையை எட்டிப் பிடித்து விடுவேன்
வாழ்க என் கணக்குப்பாடம்!
வளர்க தொட்டில் பழக்கம்!

-தனுசு-

Wednesday, April 18, 2012

நான் படித்த பத்திரிகைகள்

நான் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்து வருகிறேன். ஐம்பதுக்குப் பிறகு நான் படித்த பத்திரிகைகள் நினைவில் இருக்கின்றன. அதற்கு முன்பாகவும் ஆனந்த விகடன் படித்த நினைவுகள் உண்டு. ஐம்பதில் "கல்கி" பத்திரிகையை மிகவும் விரும்பிப் படித்து வந்தேன். அதில் வந்த ஆசிரியர் கல்கியின் தொடர்கதைகளே அதற்குக் காரணம். அது தவிர ஒவ்வோராண்டும் கல்கி தீபாவளி மலரில் கல்கியின் ஒரு நெடுங்கதை வெளியாகும். அவை ஒவ்வொன்றும் அமரத்துவம் பெற்ற கதைகள்.

1950க்குப் பிறகு நான் படித்த வார இதழ்களில் "ஆனந்த விகடன்", "கல்கி", "குமுதம்" இவைகளே பிரதானமான இதழ்கள். அப்போதைய ஆனந்த விகடனின் அமைப்பே மிகவும் வித்தியாசமாக இருக்கும். அட்டைப் படத்தில் ஒரு நகைச்சுவைத் துணுக்கு படமாக வரையப் பட்டிருக்கும், கீழே அந்த படத்தின் வசனங்கள் காணப்படும். பொதுவாக அப்போதெல்லாம் அட்டைப் படங்களை ஓவியர் கோபுலு வரைந்திருப்பார். அவருடைய படங்கள் தனி முத்திரை பதித்தவை. ஒவ்வொரு பாத்திரப் படைப்பின் சிறப்புகளை அவர் வரையும் படங்கள் அழகாக வெளிப்படுத்தும் வண்ணம் இருக்கும். நகைச்சுவைப் படங்களை அவர் போல வரைந்தவர் வேறு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. ராஜு என்ற பெயரிலும் பல பழைய படங்கள் உண்டு. சீமா சீரிஸ் எனும் பெயரில் கார்ட்டூன் படங்கள் இருந்தன. அரைகுறை படமும் அவசர பிச்சுவும் என்ற தலைப்பில் ஒரு படம் பாதி வரைந்து கொண்டிருக்கும்போது ஒரு அவசரக் குடுக்கை இது என்ன படம் என்பார், உடனே அதை வேறு மாதிரி வரைந்து முடிப்பார். இந்த சீரியல் படங்களும் சிறப்பாக இருந்திருக்கின்றன.

ஆனந்த விகடனின் முகப்பிலும், தலையங்கப் பகுதியிலும் 'விகடனின்' விசித்திரமான உருவம் காணப்படும். தலை உச்சியில் உச்சிக் குடுமி போல சிறிது உயர்ந்து காணப்படும். கழுத்தைச் சுற்றி தோளில் படரும் ஒரு பட்டைக் கரைப் போட்ட அங்கவஸ்த்திரம் இருக்கும். இவர்தான் விகடன். விகடனின் தலையங்கங்கள் நச்சென்று சுருக்கமாகவும், உறைக்கும்படியாகவும் இருக்கும். தலையங்கத்துக்கு எதிர்ப்புறம் ஒரு முழுப் பக்க கார்ட்டூன். பொதுவாக அன்றைய நாட்டு நடப்படி விளக்கும்படியான கருத்துப் படங்கள் அவை. பின்னாளில் கோபுலுவுக்குப் பிறகு அவர் இடத்தைப் பிடித்தவர் ராஜு. அதன் பின்னர் ஸ்ரீதர். அப்போதெல்லாம் ஆனந்த விகடனின் சிறப்பு அம்சம் என்னவென்றால், கலை, இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட விமரிசனக் கட்டுரைகளும், சிறு கதைகளும். நிச்சயம் ஓரிரு தொடர்கதைகள் உண்டு. லட்சுமி எழுதிய தொடர்கதைகள் குடும்பப் பெண்களின் கதைகளாக இருக்கும். பின்னர் ஸ்ரீ வேணுகோபாலன் எழுதிய கதைகள் என்று வெளிவந்தாலும், அறுபதுகளில் ஜெயகாந்தன் அவர்களுடைய முத்திரைக் கதைகள் வரத் தொடங்கிய பிறகுதான் அதன் மவுசு உச்சத்துக்குப் போனதாகச் சொல்லலாம்.

ஜெயகாந்தன் ஆனந்தவிகடனில் எழுதத் தொடங்கிய கதையே ஒரு கதை. ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் ஜெயகாந்தனை ஆனந்தவிகடனுக்குக் கதை எழுதித்தரக் கேட்டார். அப்போதெல்லாம் ஜெயகாந்தன் ஒரு தீவிர பொதுவுடமைக் கட்சி தோழராக விளங்கினார். அவரைப் பொறுத்து இந்த பத்திரிகைகள் எல்லாம் பூர்ஷ்வா பத்திரிகைகள். மேலும் அப்போது ஏதோ தொழிலாளர் பிரச்சினை வேறு விகடனில் இருந்தது. ஆகவே "ஓவர் டைம்" எனும் பெயரில் தொழிலாளர் சார்புடைய கதையை எழுதி அனுப்பினார். அது வெளியானது, அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து மாதம் ஒரு முத்திரைக் கதை எழுதிவரலானார். முத்திரைப் பதித்த பல கதைகள் அப்போது வெளியாகின. "அக்னிப்பிரவேசம்" அதில் ஒன்று. "யாருக்காக அழுதான்", "எனக்காக அழு", "ரிஷிமூலம்", "பாரிசுக்குப் போ", "சினிமாவுக்குப் போன சித்தாளு", "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" இப்படிப் பல.
இப்படி எண்ணற்ற கதைகள். ஒவ்வொன்றும் மிக உன்னதமான கதைகள்.

இவர் கதைகளில் அதிகம் பிரச்சினைக்கு உள்ளானது "அக்னிப் பிரவேசம்" கதைதான். இந்த கதையின் முடிவை ஏற்றுக்கொள்ள விரும்பாத பலரில் ஒருவர் முடிவை மாற்றி ஒரு கதையை எழுதி வெளியிட்டார். ஜெயகாந்தன் சிறுகதை மன்னன் என அறியப் பட்டவர். இந்த கதையின் தொடர்ச்சியாக "சில நேரங்களில் சில மனிதர்கள்" எனும் தொடர்கதையை எழுதினார். அமரத்துவம் பெற்றுவிட்ட அந்தக் கதை திரைப்படமாகவும் வெளிவந்தது. "யாருக்காக அழுதான்" கதையையும் சந்திரபாபுவை நடிக்க வைத்து திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படி பத்திரிகையில் வெளிவந்த கதையும், திரைப்படங்களுமாக ஒருங்கிணைந்து செயல்பட்டது சிறப்பான காலம். அதற்கு முன்பு நாற்பதுகளில் கல்கி எழுதிய "தியாக பூமி" கதை வெளியான போதே திரைப்படம் எடுக்கப்பட்டு, அந்த படத்தின் ஸ்டில்கள் கதையோடு பிரசுரமானது ஓர் புதுமை அந்தக் காலத்தில்.

பின்னாளில் ஆனந்த விகடனிலிருந்து விலகி "இதயம் பேசுகிறது" எனும் பத்திரிகையைத் தொடங்கி நடத்திய மணியன் அவர்களுடைய கதைகளும் ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தன. அவருடைய தொடர்கதைகளில் சிலவும் திரைப்படங்களாக வெளிவந்தன. அவரே சில படங்களையும் எடுத்தார். நாற்பதுகளில் ஆனந்த விகடனில் குறுக்கெழுத்துப் போட்டி பிரபலமாக இருந்து வந்தது. ஐம்பதுகளுக்குப் பிறகு அந்தப் பகுதி கிடையாது. 

அடுத்ததாக "கல்கி" பத்திரிகை, இது ஆசிரியர் கல்கி ஆனந்தவிகடனை விட்டுப் பிரிந்து வந்த பிறகு ஆசிரியராக இருந்து வெளியிட்ட பத்திரிகை. திருமதி எம்.எஸ்.சுப்பலட்சுமி, திரு சதாசிவம் ஆகியோருடைய கூட்டு முயற்சியாலும், ராஜாஜியின் ஆசியோடும் நடந்த பத்திரிகை. இந்த பத்திரிகையின் உயிர் நாடி என்பது கல்கியின் தொடர்கதைகள். அவர் எழுதிய அமரத்துவம் பெற்ற "பொன்னியின் செல்வன்" பல முறை தொடராக வெளிவந்தது. "அலை ஓசை" இந்திய சுதந்திரப் போர் காலத்தில் நடந்த மதக் கலவரம் குறித்தெல்லாம் மிக அபூர்வமான செய்திகள், கராச்சியில் நடந்தவை போன்றவைகள் எல்லாம் படித்துப் பார்க்க வேண்டியவை. சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணனை ஆசிரியர் கல்கிக்குப் பிடிக்கும். அவரைப் போன்ற ஒரு கதா பாத்திரம் இதில் படைக்கப்பட்டது. அந்தப் பாத்திரம் தான் "சூர்யா". கிராமத்தில் உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் எனும் கருத்துடைய இந்த சூர்யா முடிவில் தன் தந்தையின் நிலங்களை உழவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் செய்தியும் இதில் உண்டு. பட்டாமணியம் கிட்டாவையர், சீதா, லலிதா, ராகவன், சூர்யா, துரைசாமி ஐயர் என்று இதில் வரும் கதாபாத்திரங்கள் உயிரோடு நடமாடுவது போன்ற பிரமையை ஏற்படுத்தும். 

இந்த "அலைஓசை" தொடர் கதையில் பத்திரிகை வாயிலாக சாஸ்திர விசாரம் ஆசிரியருக்குக் கடிதங்கள் மூலம் நடத்தும் இரு பெரியவர்கள் உண்டு. இவற்றை அவசியம் படித்துப் பார்க்க வேண்டும். இவர் மாற்றி அவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வர், ஒரு கட்டத்தில் ஆசிரியர் தன் குறிப்பில் இத்தோடு இந்த விவாதம் முற்றுப் பெறுகிறது என்று எழுதி முடித்து வைப்பார். நிஜத்திலும் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்ததை நினைவு படுத்தும் விதத்தில் கல்கி எழுதியது சுவையானது.

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் அகிலன். இவருடைய "வேங்கையின் மைந்தன்", "பாவை விளக்கு" போன்ற அரிய படைப்புகள் வெளிவந்ததும் இந்த கல்கி பத்திரிகையில்தான். அகிலனுடைய கதைகளில் எல்லாம் இரு மனைவியர் அமைந்த குடும்பமும், பிரச்சினைகளும் மிக நளினமாகச் சொல்லப்படும். பாவை விளக்கில் சிதம்பரம் ஜெயராமன் தனது வெண்கலக் குரலில் பாடிய "காவியமா, இல்லை ஓவியமா" எனும் பாடலை இன்று மட்டும் கேட்டு ரசிப்பவர்கள் ஏராளம். அஞ்சல் துறையில் பணியாற்றிக் கொண்டு எழுத்துலகிலும் ஆட்சி செலுத்தியவர் அகிலன். 'கலைமகள்' மாதப் பத்திரிகையின் செல்லப் பிள்ளை இவர். இவர் தொடர்கதைகள் கல்கியில் வெளியான காலத்தில் அவைகளைப் படிக்கத் துடித்த இளம் உள்ளங்க்கள் ஏராளம். மிக எளிமையானவர் அகிலன். புதுக்கோட்டையை அடுத்த பெருமகளூர் ஆலயத்தில் இவர் தாய்மாமன் பணியாற்றியிருக்கிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் அந்த நாளில் இருந்தது.

தமிழ், தமிழிசை, சங்கீதம், இலக்கியம், கம்பன் போன்ற பல விஷயங்களுக்குக் கல்கி முக்கியத்துவம் அளித்து வந்தது. ரசிகமணி, ராஜாஜி, ம.பொ.சி.,ஜஸ்டிஸ் மகராஜன், எம்.எம்.இஸ்மாயில் போன்றவர்களின் எழுத்துக்கள் பெரிதும் கல்கியில் வெளியாகும். கம்பன் விழாச் செய்திகள் அதிகம் இடம்பெறும். திருமதி எம்.எஸ். பல ஊர்களில் நிதியுதவி கச்சேரிகள் நிகழ்த்தும் விளம்பரம் வெளியாகும். ஆகமொத்தம் கல்கி வீட்டில் அனைவரும் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கும் பத்திரிகையாக மிளிர்ந்தது என்றால் மிகையல்ல.

அடுத்து "குமுதம்" இதழ். ஆசிரியர் எஸ்.ஏ.பி., பிரசுரகர்த்தர் எம்.ஏ.பார்த்தசாரதி, எம்.ஏ.,பி.எல்., என்ற இருவரின் கூட்டு முயற்சி இது. விற்பனையில் முதலிடம் பெற்று பல காலம் சிறப்பிடம் பெற்று விளங்கிய பத்திரிகை. ஆசிரியர் எஸ்.ஏ.பி. எழுத்துலகத்தாராலும், இலக்கியத் துறையினராலும் ஒருசேரப் பாராட்டப் பட்டவர். அவருடைய குண விசேஷங்களை அவர் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தவரும் மிகச் சிறந்த எழுத்தாளருமான திரு ரா.கி.ரங்கராஜன் பலமுறை எழுதியிருக்கிறார். இணை பிரியாமல் இருந்த ஆசிரியர், வெளியிடுபவர் உறவு பெரிதும் பொற்றப்பட்டது தமிழ் நாட்டில். இந்த பத்திரிகையின் விசேஷம் என்னவென்றால் இதில் ஓவியங்கள் வரைந்த ஒருவரின் இளமை ததும்பும் படங்கள். முதலில் இதில் படம் வரைந்து வந்தவர் 'வர்ணம்' என்று அறியப்பட்ட பஞ்சவர்ணம். பின்னர் ஜெயராஜ். இவ்விருவரின் படங்களிலும் இளமை துள்ளி விளையாடும். திரைப்பட நடிகைகளின் புகைப்படங்களைப் பார்த்து ஏங்கிய இளம் உள்ளங்கள் இவர்கள் இருவரின் படங்களைப் பார்த்தும் ஏங்கத் துவங்கின. அன்றைய இளசுகளின் (அடியேன் உட்பட) மனதைக் கவர்ந்த படங்களை வரைந்த இவ்விருவரையும் மறக்க முடியுமா? ராகி என்றொரு சித்திரக்காரர். ராதாகிருஷ்ணன் என்று பெயர். இவருடைய படங்களும் கார்ட்டூங்களும் சிறப்பானவை. அனைத்திலும் "குமுதம்" இதழின் சிறப்புக்குக் காரணமானவர்கள் என்றால் அவர்கள் அதன் துணை ஆசிரியர்களாக இருந்த திரு ரா.கி.ரங்கராஜனும், திரு ஜ.ரா.சுந்தரேசனும் ஆவார்கள். இவ்விருவரும் எழுதிக் குவித்து வரலாற்றில் இடம் பிடித்த செய்தியை தமிழ் பேசும் அனைவரும் அறிவர்.

"பட்டாம்பூச்சி" எனும் மொய்பெயர்ப்புத் தொடர், ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்த்தது. ஒரு சரித்திரம் படைத்தது. ஹென்றி ஷாரியர் எனும் பிரெஞ்சு நாட்டுச் சிறைக்கைதி பிரெஞ்சு கயானாவில் சிறை வைக்கப்பட்டு அங்கிருந்து பலமுறை தப்ப முயற்சித்த வரலாற்றுச் சித்திரம் இது. புத்தகமாக வெளிவந்து நல்ல விற்பனையானது இந்த நூல். 'இது சத்தியம்' என்ற ரா.கி.ர. அவர்களின் கதையும் சினிமாவாக எடுக்கப்பட்டு நன்கு ஓடியது. ஜ.ரா.சுந்தரேசன் எழுதிய பல கதைகள் அமரத்துவம் பெற்றவை. இவருடைய சில கதைகள் சினிமாவுக்கும் சென்றன. "அப்புசாமி சீதாப்பாட்டி"யை யாராலும் மறக்க முடியுமா? ஆப்பிரிக்க அழகி இடிலி என்ற ஒரு பாத்திரம் படைத்த வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் இவர். இளம் உள்ளங்களைக் கிரங்க அடிக்கும் சில வர்ணனைகள். ஒரேயொரு மாதிரிக்கு. "டீச்சர்" என்ற ஒரு கதை. அதில் எதேச்சையாக டீச்சரின் மார்பில் கை பட்டுவிடுகிறது ஒரு மாணவனுக்கு. பட்டுத் துணியில் அரைத்துக் கட்டிய சந்தனத்தைத் தொட்டது போல உணர்ந்தான் என்று எழுதியதை அன்றைய இளசுகள் மறக்கவில்லை.

'குமுதம்' இதழுக்கு பெருமை சேர்த்த கதாசிரியர்களில் எஸ்.ஏ.பி.யும் முக்கியமானவர். இவருடைய தொடர்கதைகளும் ஆர்வத்துடன் படிக்கப்பட்டன. ஜாவர் சீத்தாராமன் குமுதத்தின் ஒரு நிரந்தர எழுத்தாளர். சுஜாதா மற்றொருவர். இவர்களுடைய கதைத் தலைப்புகளே வித்தியாசமாக இருக்கும். ஆக மொத்தம் 'குமுதம்' இதழ் பல காலம் முதலிடம் பெற்று விளங்கியது.

நான் முன்பே குறிப்பிட்டபடி ஆனந்த விகடனிலிருந்து பிரிந்து சென்ற மணியன் வெளியிட்ட பத்திரிகை "இதயம் பேசுகிறது". இதே தலைப்பில் இவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதி வந்ததையே தன் பத்திரிகையின் பெயராக வைத்து விட்டார். இளமைக்குத் தீனி போடுவதில் இவரும் வல்லவர். இளமை கொஞ்சும் இவர் பத்திரிகை இவர் இருந்த வரை சிறப்பாக நடந்தது. தொலைக்காட்சி தமிழகத்தில் பரவலாக வந்து விட்ட காலகட்டத்தில் பொதிகை, சன், ஜெஜே போன்றவற்றில் செய்திகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கின. அதில் நல்ல தோற்றமும், தெளிவான உச்சரிப்பும் உடைய சிலர் செய்தி வாசிப்பாளர்களாகப் பணியாற்றினர். அதில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் அணியும் உடை, ஆபரணங்கள் இவைகளும் பெண்கள் மத்தியில் பிரபலாம விளங்கின. ஆண் செய்தி வாசிப்பாளர்களும் உண்டு. இதில் ஈரோடு தமிழன்பன் என்பவர் உச்சரிப்பு அழுத்தம் திருத்தமாக இருக்கும். பெண்களில் ஷோபனா ரவி பிரபலமானவர். இளமை ததும்பும் தோற்றத்தில் அப்போது அறிமுகமானவர் பாத்திமா பாபு. அப்போது "இதயம் பேசுகிறது" இதழில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார் என்று ஒரு கவிதைப் போட்டி வைத்தார்கள். அதில் அடியேனும் ஒரு கவிதை எழுதி அனுப்பி வைத்தேன். அது தேர்வாகி பிரசுரமானது. அப்படி நான் புகழ்ந்த அந்த செய்தி வாசிப்பாளர் யார் தெரியுமா? இன்றைக்கும் செய்தி வாசித்து வரும் பாத்திமா பாபு தான். 

மணியன் அவர்களின் கதைகள் சினிவாக்கும் சென்றன. அவரும் எம்.ஜி.ஆரை. வைத்து படம் தயாரித்தார். அவருக்குப் பிறகு அந்தப் பத்திரிகை நின்று போய்விட்டது. கல்கியில் உதவி ஆசிரியராக இருந்த பகீரதனும் விந்தனும் கூட பின்னர் தனியாக பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார்கள். வெகு ஜன பத்திரிகைகளைப் பற்றி பார்த்தோம். இவை அனைத்தும் வாரப் பத்திரிகைகள், இனி மாதம் இருமுறை வெளியான பத்திரிகைகள், மாதாந்தர பத்திரிகைகள், அரசியல் பத்திரிகைகள், சினிமா பத்திரிகைகள் இவைகளைப் பற்றியும் அடியேனுக்குத் தெரிந்த அளவில், பார்த்துப் படித்த அளவில் ஒரு சில விவரங்களைத் தருகிறேன். இவை அனைத்தும் என் நினைவில் இருந்தபடி கொடுத்திருக்கிறேன். சில முக்கியமான நபர்கள், கதைகள் இவை விட்டுப் போயிருக்கலாம். பொருத்தருள்வீர். 

இனி வாரப் பத்திரிகைகளில் அரசியல் பத்திரிகைகளையும் அதிகம் படித்திருக்கிறேன். அவற்றில் முதலிடம் வகிப்பது சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் "செங்கோல்" பத்திரிகையைச் சொல்லலாம். செங்கோல் பத்திரிகையை அவர் தமிழரசுக் கழகத்தின் கெசட் என்பார். அவருடைய கொள்கை முழக்கங்கள் அனைத்தும் அதில் இடம்பெறும். அவருடைய கட்டுரைகள் மட்டுமே பத்திரிகை முழுவதும் இருக்கும். பல பிரச்சினைகள் குறித்து அவருடைய கருத்துக்களை இந்த செங்கோல் வாயிலாகத்தான் வெளியிடுவார். இவர் கட்டுரைகளைப் படித்தால் அவருடைய பொதுக்கூட்டப் பேச்சைக் கேட்பது போல இருக்கும். ஒவ்வொரு வாக்கியமும் அவர் பேசும்போதும் இலக்கணத்துக்குட்பட்டே அமையும். அவர் பத்திரிகைகளை நான் வாய்விட்டுப் படிப்பதுண்டு. நண்பர்கள் கேலி செய்தாலும் கவலைப்படுவதில்லை. அவர் கட்டுரைகளை அப்படி வாய்விட்டுப் படித்து வந்த காரணத்தினாலோ என்னவோ, அவருடைய நடை அப்படியே எனக்கு அமைந்து விட்டது. ஒரு வகையில் அவர்தான் எனக்குத் தமிழுக்கும், தமிழார்வத்துக்கும் ஆசான். சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயணத்தையும், மகாகவி பாரதியையும் அவர் எழுத்தின் தாக்கத்தால்தான் படிக்க நேர்ந்தது. ம.பொ.சி.யின் தாசனாகத்தான் நான் என்னை நினைத்துக் கொண்டேன்.

1954 அல்லது 1955 என்று நினைக்கிறேன், சென்னையை அடுத்த ஆவடியில் அகில இந்திய காங்கிரஸ் மகா நாடு நடந்தது. அதன் தலைவர் யு.என்.தேபர் என்பவர். நமது கர்ம வீரர் காமராஜ் அவர்கள் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து மகா நாட்டை நடத்தினார். அப்போது ம.பொ.சி. அவர்கள் காங்கிரசில் இல்லை. முந்தைய ஆண்டே அவரை காங்கிரசிலிருந்து வெளியேற்றி விட்டனர். அந்த மகா நாட்டில்தான் ஜவஹர்லால் நேரு சோஷலிச மாதிரியான சமுதாயம் அமைப்பது குறித்த தீர்மானம் கொண்டு வந்தார். அதைக் குறித்து ம.பொ.சி. அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார் "ஆவடியில் ஆண்டியப்பன்" எனும் தலைப்பில். நேருவின் இந்த சோஷலிச மாதிரியிலான சமுதாய அமைப்பு சாதாரண அடிமட்ட ஏழைக்கு உதவப் போவதில்லை என்பது அவருடைய கருத்து. பின்னர் பல வருஷங்கள் கழிந்தபின் அவரைச் சந்தித்த போது நான் கேட்டேன், "ஐயா! உங்கள் கட்டுரை படியே ஆண்டியப்பன் கள் சோஷலிசத்தால் பயனடையவில்லை அல்லவா?" என்றேன். ஆம், அதுதான் உண்மை என்றார் அவர்.

நல்ல தமிழ் எழுத, பேச அவருடைய நூல்களைப் படித்தால் போதும். கடினமான பண்டித நடையும் இல்லாமல், பாமரத் தமிழும் இல்லாமல், சாதாரணமான நல்ல தமிழில் பேசுவார், எழுதுவார். செங்கோலைப் படித்து பயன் பெற முடியாதவர்கள், இப்போது அவருடைய பேத்தியும், பேரங்களும் அவருடைய செங்கோல் இதழ்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார்கள், படிக்கலாம். 

செங்கோல் தவிர சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் "தமிழன் குரல்" எனும் பத்திரிகையை சிலகாலம் நடத்தினார். நல்ல தமிழ், சிலப்பதிகார விளக்கம் முதலான நல்ல விஷயங்களோடு தமிழக அரசியலையும் அதில் எழுதி வந்தார். காங்கிரசில் இருந்து கொண்டே இவர் தமிழரசுக் கழகம் எனும் கலாச்சாரக் கழகத்தை நடத்தி வந்தார். இது பிடிக்காமல் காங்கிரசார் இவரை வெளியேற்றி விட்டனர். அதன் பின்னர் இவர் தமிழரசுக் கழகத்தை ஒரு நல்ல அரசியல், கலாச்சார இயக்கமாகவே நடத்தி வந்தார். பல போராட்டங்களைத் தமிழ் நாட்டு மக்களுக்காக நடத்தினார். திராவிட இயக்க எதிர்ப்பு மகா நாடுகளை நடத்தினார். இவர் ஒருவர்தான் அரசியல் மகா நாட்டுக்கு முதல் நாள் இலக்கிய மகா நாடுகளை நடத்தியவர்.

இவர் கட்சியைச் சேர்ந்தவர் கவி கா.மு.ஷெரீப். மிக அற்புதமான, பண்பான தலைவர், எழுத்தாளர், பேச்சாளர். இவர் சென்னை தேனாம்பேட்டை ஜானிஜாங்கான் தெருவில் இருந்து " தமிழ் முழக்கம்" எனும் வாரப் பத்திரிகையை நடத்தினார். அன்றைய தமிழ் நாட்டு அரசியலில் திராவிட இயக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து எழுதிய தேசிய எழுத்தாளர் கவி.கா.மு.ஷெரீப். இவர் திரைப்படங்களில் பாடல்கள் எழுதி வந்தவர் என்ற முறையில் இவர் பிரபலமானவர். தமிழ் முழக்கம் உண்மையிலேயே தமிழுக்காக எழுப்பப்பட்ட முழக்கமாகவே அமைந்திருந்தது. அப்போது திரைப்படங்களில் பிரபலமாகத் தொடங்கினார் ஏ.பி.நாகராஜன். அவருடைய 'நால்வர்', 'பெண்ணரசி', 'நல்ல தங்கை', 'வடிவுக்கு வளைகாப்பு', 'மக்களைப் பெற்ற் மகராசி", 'டவுன் பஸ்', 'சம்பூர்ண ராமாயணம்' போன்ற பல படங்கள் வெற்றி பெற்றிருந்தன. இவரை ஆசிரியராகக் கொண்டு "சாட்டை" எனும் அரசியல் வார இதழையும் கவி கா.மு.ஷெரீப் வெளியிட்டார்.

அப்போது கண்ணதாசன் ஆசிரியராக இருந்து வெளியான "தென்றல்" பத்திரிகையில் "ராஜ தண்டனை" எனும் தொடர் வெளியாயிற்று. உடனே 'சாட்டை'யில் "தண்டனைக்குத் தப்பியவர்கள்' என்று தொடர் வெளியாயிற்று. இப்படி திராவிட இயக்கத்துக்கு எதிரான தமிழ் இயக்கமாக கவி கா.மு.ஷெரீப், ஏ.பி.நாகராஜன் பத்திரிகைகள் வெளியாகின. கவி கா.மு.ஷெரீப் போன்றவர்களை தமிழ் நாடு உரிய முறையில் போற்றவில்லை என்பது மிகவு வருத்தத்துக்குரிய செய்திதான். என்ன செய்வது. நல்ல பொருட்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை.

தேசிய பத்திரிகைகளைப் பற்றி மட்டும் சொல்லக் காரணம் எனக்கு அவற்றின் மீது இருந்த பற்றும், அவற்றை படித்த நினைவும் தான். திராவிட இயக்கப் பத்திரிகைகளும் ஏராளமாக வெளிவந்தன. அப்படி வந்த அனைத்தையும் நான் படித்ததில்லை. ஓரிரு பத்திரிகைகள் என் கவனத்தைக் கவர்ந்திருக்கின்றன. அவற்றில் "முரசொலி" வார இதழும், "தென்றல்" வார இதழையும் சொல்லலாம். முரசொலியை நடத்தி வந்தவர் மு.கருணா நிதி. வெளியீட்டாளர் என்று முரசொலி மாறன் பெயர் இருக்கும். இதில் அதிக சூடான தி.மு.க.செய்திகள் கருத்துக்கள் தான் இருக்கும். எனக்கு அந்த இயக்கத்தின் பால் ஈர்ப்பு இல்லாததால் நான் அதிகம் அவற்றைப் படித்ததில்லை.

ஒரு வேடிக்கை என்னவென்றால் பட்டுக்கோட்டையில் நான் ம.பொ.சியின் "செங்கோல்", "தமிழன் குரல்" ஆகிய பத்திரிகைகளுக்கும் கவி கா.மு.ஷெரீப்பின் "தமிழ் முழக்கம்", ஏ.பி.நாகராஜனின் "சாட்டை", ஏ.கரீீம் அவர்களின் "தமிழ் சினிமா" ஆகியவற்றுக்கு முகவராக இருந்த காலம் அது. அதே காலகட்டத்தில் என்னுடைய நெருங்கிய நண்பரும் என்.ஜி.ஓ.சங்கத்துக்கு பின்னாளில் மானில தலைவராக இருந்தவருமான சிவ.இளங்கோ அவர்கள் "முரசொலி", "தென்றல்", "முத்தாரம்" ஆகிய பத்திரிகைகளுக்கு முகவர். நாங்கள் இருவருமே பத்திரிகைகள் வரும் நாளில் அவற்றை வாங்கிக் கொண்டு வந்து சின்னக்கடை வீதியில் மணிக்கூண்டு எதிரில் உள்ள கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்து விடுவோம். நாங்கள் இருவரும் அவரவர் கருத்துக்களை ஆரோக்கியமாக விவாதித்துக் கொண்டாலும் சண்டை எதுவும் வந்ததில்லை. அவர் எழுதிய நாடகத்தில் நானும் நடித்திருக்கிறேன். அவருடன் அப்துல் சுபான், தேசிகன், கோட்டாகுடி கோவிந்தசாமி போன்ற நண்பர்களும் ஒன்றாக இருந்தோம் என்பது இனிமையான நினைவுகள். 

"தென்றல்" பத்திரிகை கவிஞர் கண்ணதாசனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பத்திரிகை. இதில் முக்கியத்துவம் என்னவென்றால், கடைசி பக்கத்தில் வெண்பாப் போட்டி இருக்கும். ஒவ்வொரு வாரவும் வெண்பாவுக்கு ஈற்றடி கொடுத்து பாடல் எழுதச் சொல்லுவார். ஏராளமான கவிதைகள் வெளியாகும். அவை யாவும் அற்புதமான வெண்பாக்கள். தமிழ் இலக்கியத்துக்குச் செய்த மாபெரும் சேவையாக இந்த வெண்பா போட்டி அமைந்தது. இதிலும் பல வரலாற்றுத் தொடர்களை கண்ணதாசன் எழுதினார். அப்போது திராவிட இயக்கத்திலும், நாத்திக வாதத்திலும் ஈடுபட்டிருந்த கண்ணதாசனை அப்போது அவ்வளவாகப் பிடிக்காது. பின்னர் அவர் தேசியத்துக்கு வந்த பிறகுதான் அவர் கவிதைகளை ஊன்றி படிக்கத் தொடங்கியதோடு, அவன் எத்தகைய மாபெரும் கவிஞன் என்பதையும் புரிந்து கொண்டேன். ஓருக்கால் அவன் தேசியத்துக்கு வராமல் இருந்திருந்தால் அவன் பெருமையை தெரிந்து கொள்ளாமலேயே போயிருப்பேனோ என்னவோ. பாரதிக்குப் பிறகு வந்த அந்த மாபெரும் கவிஞனை மதிக்கிறேன், போற்றுகிறேன். 

"முத்தாரம்" என்பது மு.கருணா நிதியால் வெளியிடப்பட்ட மாதாந்திர பத்திரிகை. பல்சுவை கொண்டு ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிரியிலான பத்திரிகை. பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள இந்த பத்திரிகை உதவியது எனலாம். என்றாலும் அந்த முகாமின் பத்திரிகை என்பதால் அத்தனை ஆர்வமாகப் படித்ததில்லை நான்.

"தமிழ் சினிமா" என்பது ஏ.கரீம் என்பவரால் வெளியிடப்பட்ட பத்திரிகை. மாதமிரு முறை வந்தது. தமிழ் செய்தித் தாள் அமைப்பில் இருக்கும் இந்தப் பத்திரிகை. இதில் "தூரத்துப் பார்வை" எனும் தலைப்பில் ஒரு பெரிய கட்டுரை வெளியாகும். அது இன்றைய வம்பு பக்கங்களைப் போல பல நாட்டு நடப்புகளை விவாதிக்கும் பகுதி. அந்தப் பகுதிக்காகவே தமிழ் சினிமாவை வாங்குவார்கள். அந்த பத்திரிகை முகவரான எனக்கு வரும் தினத்தில் பலர் காத்திருந்து வாங்கிச் செல்வார்கள். அத்தனை மவுசு அந்த பத்திரிகைக்கு.

தமிழரசுக் கழக்த்தில் இருந்த பல தேசியத் தலைவர்களில் சின்ன அண்ணாமலையும் ஒருவர். இவர் 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது ஹீரோ வாக ஆனவர். இவர் தேவகோட்டையைச் சேர்ந்த செல்வந்தர். தேசிய வாதி. இளைஞர். காங்கிரசில் சேர்ந்து 1942இல் சிறைப்பட்டு திருவாடனை ஜெயிலில் அடைக்கப் பட்டார். அப்போது மக்கள் ஒன்று திரண்டு வந்து சிறையை உடைத்து இவரை வெளியே கொண்டு போய்விட்டனர். பின்னர் நடந்த அடக்குமுறையில் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். அந்த சின்ன அண்ணாமலை ம.பொ.சியின் தொண்டர். தமிழரசுக் கழகத்தில் தலைவர். இவர் சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டாளர். இவர் புத்தக வெளியீட்டகம் ஒரு மினி காங்கிரஸ் அலுவலகமாக இருந்தது. பல திட்டங்கள் அங்கு வகுக்கப் பட்டன. இவர் "சங்கப் பலகை" என்றொரு பத்திரிகை தமிழரசுக் கழகத்துக்காக வெளியிட்டார். அதில் இவரது கேலியும் கிண்டலும் நிறைந்த நடையில் கட்டுரைகள் வெளியாகும். பழமொழிகளை உதிர்ப்பதில் இவருக்கு நிகர் எவரும் இல்லை. "கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை", "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்" இப்படி பற்பல பழமொழிகள் அப்போது படித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

தமிழரசுக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரும், சென்னை மவுண்ட் சாலையில் உமா சினிமா தியேட்டரைக் கட்டியவரும் "ராஜராஜசோழன்" திரைப்படத்தைத் தயாரித்தவரும், மணிரத்தினத்தின் "அக்னி நட்சத்திரம்" படத்தில் வில்லனாக நடித்தவரும், பிரபல அட்டைப்பெட்டி தயாரிப்பாளருமான ஜி.உமாபதி "உமா" எனும் இலக்கியப் பத்திரிகையை நடத்தினார். இது அவருடைய பத்திரிகைதானே தவிர அதில் எழுதியதில்லை. அறந்தாங்கிக்கு அருகில் உள்ள பூவத்தங்குடி எனும் ஊரைச் சேர்ந்த பூவை ஆறுமுகம் என்பவர்தான் ஆசிரியர். இவர் மிக அற்புதமான எழுத்தாளர். நல்ல பல கதைகளை எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கிய உலகில் பாராட்டுப் பெற்றவர் இந்த பூவை எஸ்.ஆறுமுகம்.

திரு எம்.பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது நண்பர் சிவ இளங்கோ மானில என்.ஜி.ஓ. சங்கத் தலைவராக இருந்தார். இவர் சில காலம் பணியிலிருந்து சஸ்பெண்டு செய்யப் பட்டிருந்தார். நல்ல எழுத்தாளரான சிவ.இளங்கோவை ஆசிரியராகக் கொண்டு "திராவிட மணி" எனும் பத்திரிகை வெளிவந்தது. அதில் என் பெயரில் சில தலைப்புகளில் சிவ.இளங்கோ எழுதி வெளியிடுவார், எனக்கும் ஒரு பிரதியை அனுப்பி வைப்பார். எங்கள் நட்பு அவருடைய கடைசி காலம் வரையிலும் தொடர்ந்தது.

நல்ல தரமான மாதப் பத்திரிகைகளில் "கலைமகள்" பத்திரிகை தனியிடம் பிடித்திருந்தது. நாராயணசாமி ஐயர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த பத்திரிகைக்கு நெடுங்காலம் கி.வா.ஜகன்னாதன் ஆசிரியராக இருந்து வந்தார். நல்ல இலக்கியப் பத்திரிகை. இதில் நல்ல தரமான கதைகள் வெளிவந்தன. பல பெண் எழுத்தாளர்கள் இதில் எழுதி வந்தார்கள். அகிலன், ராஜம் கிருஷ்ணன், அனுத்தமா, சிவசங்கரி, கேப்டன் தி.சா.ராஜு போன்ற பிரபலங்கள் இதில் எழுதி வந்தனர்.

பழம்பெரும் எழுத்தாளரும் பல சரித்திரக் கதைகளின் ஆசிரியருமான விக்கிரமனை ஆசிரியராகக் கொண்டு "அமுதசுரபி" எனும் பத்திரிகை வந்தது. இப்போது அதன் ஆசிரியராக திருப்பூர் கிருஷ்ணன் இருந்து அதே பழைய பாரம்பரிய பெருமையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். நிறைவாக, முடிவாக அல்ல, "சரஸ்வதி" எனும் பத்திரிகையைப் பற்றி சொல்ல வேண்டும். விஜயபாஸ்கர் என்பவரை ஆசிரியராகக் கொண்ட இந்த பத்திரிகையில் ஜெயகாந்தன் தொடக்க காலத்தில் எழுதியிருக்கிறார். அந்தக் காலத்தில் ஜெயகாந்தன் எழுதிய சில வரிகள் என் நினைவுக்கு வருகிறது. அது:-- "சீனத்துக் கடை வீதி; இது எங்கோ பீகிங்கிலோ, ஷாங்காயிலோ இருப்பதாக எண்ண வேண்டாம். தாய்த் தமிழ் நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள இடம்தான் இது"....

இப்படி எனது பத்திரிகை நினைவுகளின் ஒரு பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். விட்டுப் போயிருந்தால் மீண்டும் வருவேன். நன்றி.








Sunday, April 15, 2012

ஒரு எலியின் கதை



ஒரு எலியின் கதை

மும்பையிலிருந்து இராமானுஜம் கிஷோர் என்பவர் என்னுடைய நண்பர் சி.ஆர்.சங்கரன் என்பவருக்கு அனுப்பியுள்ள கதை இது. அமெரிக்காவில் ஒரு கடையில் அவர் வாங்கிய எலியைப் பற்றிய கதை. அந்த எலியை இழந்த பின் அவருடைய தேவையைக் கடைக்காரரிடம் சொல்கிறார். கிடைத்ததா அவர் கேட்டது? அந்த எலிக்கு ஆன நிலைமை அவர் புதிதாகக் கேட்ட பொருளுக்கும் கிடைத்ததா? தெரியவில்லை. படியுங்கள் ப்ளீஸ்....

An Indian tourist walks into a curio shop in San Francisco. Looking around at the exotic, he notices a very lifelike, Life-sized bronze statue of a rat.  It has no price tag, But is so striking he decides he must have it.
He takes it to the owner: "How much for the bronze rat?"  "Twelve dollars for the rat, one hundred dollars for the Story," says the owner.

The tourist gives the man twelve dollars. "I'll just take the rat,you can keep the story."  As he walks down the street carrying his bronze rat, He notices that a few real rats crawl out of the alleys and sewers and begin following him down the street.  This is disconcerting; he begins walking faster. But within a couple of blocks, the herd of rats behind him grows to hundreds, and they begin squealing.  He begins to trot toward the Bay, looking around to see that the rats now numbered in the MILLIONS, and are still squealing and coming towards him faster and faster.

Concerned, even scared, he runs to the edge of the Bay and throws the bronze rat as far out into the Bay as he can.  Amazingly, the millions of rats all jump into the Bay after it, and are all drowned.
The man walks back to the curio shop.
"Ah ha," says the owner, "You have come back for the Story?"



*NOW SCROLL DOWN FURTHER.

*

*

*

*

*

*



"No," says the man, "I came back to see if you have a statue of an Indian politician in bronze!!  




Saturday, April 14, 2012

“Speak the truth, speak the pleasant, but do not speak the unpleasant truth,”


ஒரு நீதிபதியின் குரல்.

Bangalore: “
Speak the truth, speak the pleasant, but do not speak the unpleasant truth,” former judge of the Supreme Court and the Chairman of the Press Council, Markandey Katjuquoted shastras before revealing the unpleasant truth that 90 percent Indians are fools. “The country’s situation today requires that we say “Bruyat satyam apriyam”, i.e. “Speak the unpleasant truth” he wrote in The Indian Express which said, “The truth is that the minds of 90 percent Indians are full of casteism, communalism, superstition.”
Katju has been judgmental about a variety of aspect in the society and their many failings, and has been into many controversies in the recent times for his remarks on media, corruption etc. However, unlike his usual targets of criticism, this time Katju has attacked his best supporters, the middle class TV viewing public – when he said 90 percent Indians are fools.

Katju’s first point of justification is that – “when our people go to vote in elections, 90 percent vote on the basis of caste or community, not the merits of the candidate.” So are people such as Phoolan Devi with criminal backgrounds gets elected to the Parliament.  However, his precise number of 90 percent seems quite vague as there are no concrete data to suggest that 90 percent vote based on their caste and community. In fact, the recent UP elections show the number is incorrect as the figures suggest that all communities were divided between many political parties.

 
“90 percent Indians believe in astrology, which is pure superstition and humbug,” he further writes. “Even a little common sense tells us that the movements of stars and planets have nothing to do with our lives. Yet, TV channels showing astrology have high TRP ratings,” he justifies. In a reply to Katju’s article, R Jagannathan of Firstpost writes, “If belief in the unscientific is proof of foolishness, half the world is a fool. In a world where people clutch at all kinds of straws to make some sense of the madness around them, astrology is hardly the defining factor for foolishness.”

The media hype for cricket and Bollywood has always been Katju’s pet topic and this time and he came down very hard on Indian media’s obsession with the above mentioned and said, “cricket has been turned into a religion by our corporatised media, and most people lap it up like opium.” He says the real problems are the socio-economic issues such as unemployment, education, price rise, housing, poverty, malnourishment, lack of healthcare etc. that 80 percent of the population in the country faces. He laments over the media hypocrisy as it minimizes or sidelines these issues and gives greater importance for on the lives of film starts, cricket, fashion etc. He condemned the way how Indian media depicted events such as Sachin’s 100th century and Dravid’s retirement as the most important events of the country while facts like a quarter of a million farmers’ suicides and 47 percent Indian children being malnourished were severely sidelined.


The former SC judge then went on to comment on the media hype given to Anna Hazare’s anti-corruption agitation and said the media promoted the agitation as a solution to the problem of corruption. He says the Lokpal Bill will create a parallel bureaucracy.

Quoting different sections of the suggested Lokpal Bill, Katju says “There are about 55 lakh government employees (13 lakh in the Railways alone) and there will be several lakhs more in other categories coming under the definition of public servant according to the Prevention of Corruption Act. This will necessitate the appointment of thousands of Lokpals, maybe 50,000 or more, to supervise and decide on the millions of complaints that will pour in against the lakhs of public servants. “Considering the low level of morality prevailing in India, we can be fairly certain that most of them will become blackmailers,” he says. “It will create a parallel bureaucracy, which in one stroke, will double the corruption in the country.” He said the movement was not rationally analysed and termed it as a hysterical mob that gathered in Jantar Mantar and Ramlila grounds in Delhi thinking that corruption would be ended by shouting “Bharat Mata ki Jai” and “Inquilab Zindabad”.


Finally, Katju clarifies his stands and justifies why he calls the 90 percent fools. “When I called 90 percent of them fools my intention was not to harm them, rather it was just the contrary. I want to see Indians prosper, I want poverty and unemployment abolished, I want the standard of living of the 80 percent poor Indians to rise so that they get decent lives.”

The only way out for this to happen, the Indian minds have to come out of communalism, casteism and superstition and should start thinking scientific and modern.  “Having a modern mind means a rational mind, a logical mind, a questioning mind, a scientific mind,” Katju writes.



__._,_.___

Thursday, April 12, 2012

உலகம் மகிழ்வொடு வாழட்டும்!



மரியாதைக்குரிய திரு என்.வி.சுப்பராமன் அவர்கள் சிறந்த கவிஞர். அகில இந்திய கவிஞர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு கவிதைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும், மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வழங்கிக் கொண்டிருப்பவர். ஆயுள் காப்பீட்டுத் தாபனத்தில் மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர். நந்தன வருஷ தமிழ்ப் புத்தாண்டையொட்டி அவர் இயற்றியுள்ள இந்த கவிதையை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நந்தன ஆண்டு

நந்தன ஆண்டு பிறக்கட்டும்
நல்லன எல்லாம் மலரட்டும்
வந்தனை செய்து வரவேற்போம்
நிந்தனை தன்னை மறந்திடுவோம்!

அன்பும் அமைதியும் பெருகட்டும்
அறங்கள் அனைத்தும் வளரட்டும்
உழைப்பு நன்றாய் பெருகட்டும்
ஊழல்கள் அனைத்தும் மறையட்டும்!

நல்லவர் அரசு அமைக்கட்டும்
வல்லவர் நாட்டைக் காக்கட்டும்
தொல்லைகள் தொலைந்து போகட்டும்
அல்லவை தேய்ந்து மடியட்டும்!

உலகில் அமைதி ஓங்கட்டும்
பலரும் நேர்மை காக்கட்டும்
வளரும் கவிஞன் சிறக்கட்டும்
உலகம் மகிழ்வொடு வாழட்டும்!

என் வி சுப்பராமன்


Wednesday, April 11, 2012

வேற்று கிரகத்து மனிதர்களின் வருகை


வேற்று கிரகத்து மனிதர்களின் வருகை

"தினமணி" 12-4-2012 வியாழக்கிழமை இதழில் "ஒடிசா வந்தனர் வேற்று கிரக மனிதர்கள்!" என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதில் 'மறக்கப்பட்ட 1947 மே 31 சம்பவம்' என்று குறிப்பிட்டு கொல்கத்தாவிலிருந்து இந்த கட்டுரை வெளியாகியிருக்கிறது. ஆர்வத்தைத் தூண்டக்கூடிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள். நன்றி: "தினமணி".

கொல்கத்தா, ஏப் 11: 

வேற்று கிரகங்களில் மனிதர்கள் வசிக்கின்றனர், நம்மைவிட நாகரிகமும் அறிவியல் முன்னேற்றமும் உள்ள அவர்கள் ஓசையே இல்லாத வான ஊர்திகளில் வந்து பூமியில் இறங்கி சுற்றிப் பார்த்துவிட்ட்ச் செல்கின்றனர் என்றெல்லாம் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் அடிக்கடி பேசியும் எழுதியும் வருகின்றனர். 

ஆனால் திட்டவட்டமான நிரூபணங்கள் இல்லாததால் இவற்றையெல்லாம் கற்பனை என்றோ, கனவுகளின் வெளிப்பாடு என்றோ இதுவரை கூறி வருகிறார்கள்.

அதே வேளையில் இது சாத்தியம் இல்லை என்று எவராலும் கூற முடிவதில்லை. இந்தியாவைப் பிற நாடுகள் பார்த்த பார்வையைவிட இந்தியர்களான நம்முடைய பார்வையே அவநம்பிக்கையுடனும் அவமதிப்புடனும் இன்னமும் தொடர்வதால் இங்குள்ளவர்களின் கூற்று எதுவும் நம்பப்படுவதில்லை. 

அப்படித்தான் நாடு சுதந்திர அடைவதற்கு முன்னால் ஒடிசா (அப்போது ஒரிஸ்ஸா) மாநிலத்துக்குச் சில வேற்றுக்கிரக மனிதர்கள் வந்ததும் அங்கிருந்த ஒடிசா வாசிகளைத் தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சுற்றிக் காண்பித்ததும் நம்பப்படாததுடன் இகழ்ச்சியாகப் பேசப்பட்டது.

ஆனால் கிராமப்புறக்கலைஞர் ஒருவர் அதை பனையோலைச் சுவடியில் சித்திரமாகவே பதிவு செய்து குறிப்புகளும் எழுதியிருக்கிறார். நல்ல வேளையாக அது இன்னமும் அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது.

வேற்று கிரக வாசிகள்:

ஒடிசா மாநிலத்தின் நயாகர் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதியில் வேற்று கிரகவாசிகள் தங்களுடைய விசித்திரமான விண்கலத்துடன் 1947-ம் ஆண்டு மே 31ஆம் தேதி வந்து இறங்கினர். தீரமிக்க 2 இளைஞர்கள் அஞ்சி ஓடாமல் அந்த விண்கலத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளே இருந்தவர்கள் அந்த இரு இளைஞர்களையும் அழைத்து தங்களுடைய விண்கலத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். அவர்களையும் ஏற்றிக்கொண்டு விண்ணில் ஒரு சுற்று சுற்றி வந்தனர், பிறகு அவர்களை அந்த இடத்திலேஏ இறக்கிவிட்டுப் போய்விட்டனர்.

அவ்விரு இளைஞர்களும் அதை அக்கிராம வாசிகளிடம் தெரிவித்தனர். அதை யாரும் நம்பவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் 'பட்ட சித்திரக்காரர்' என்று அழைக்கப்படும் ஓவியரிடம் தங்கள் அனுபவத்தை அப்படியே விவரித்தனர். அவர் அதை அப்படியே கேட்டு ஓலைச்சுவடியில் சித்திரமாக வரைந்து வைத்துள்ளார்.

அந்தச் செய்தி பத்திரிகைகளில் வரவில்லை. ஆனால் ஒசியா வார இதழ் ஒன்று ஜுன் 15-ம் தேதி அச்செய்தியை ஒற்றைப் பத்திச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதுவும் எப்படி என்றால், கிராமவாசிகளின் அதீத கற்பனை என்ற காட்டமான விமர்சனத்தோடு.

இந்தச் செய்தி உண்மையாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையே இல்லாமல் அச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

எந்திர புருஷர்கள்:

கிராமவாசிகள் கூறக் கேட்டவர் வரைந்த சித்திரத்தில் வேற்றுக் கிரக மனிதர்கள் எந்திர புருஷர்களாக வரையப் பட்டுள்ளனர். அவர்களுடைய தலையில் அரைவட்ட வடிவில் சாதனங்கள் இருக்கின்றன. விண்வெளி வீரர்கள் அணிவதைப் போன்ற ஆடையையே அவர்கள் அணிந்துள்ளனர். கைகள் கூரான கத்தியைப் போல இருந்தன. ஆனால் அவர்கள் கையை உயர்த்தியிருந்த விதம் வாழ்த்து கூறுவது போலவே, ஆசிர்வதிப்பது போலவோ இருந்தது.

சிலருடைய கைகள் வட்ட வடிவில் பந்து போல உருண்டு இருந்தது. சிலருடைய கைகளில் 5 விரல்கள் இருந்தன.

இந்த விண்கலத்தையும் விண்வெளி மனிதர்களையும் பார்த்தவர்கள் சமீபத்தில்தான் இறந்தனர். ஆனால் அவர்கள் உயிரோடு இருந்த வரையில் அவர்கள் கூறுவதைப் பொறுமையோடு கேட்டு பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்கெல்லாம் அமெரிக்காவின் நியு மெக்சிகோ மாநிலத்தில் ரோஸ்வெல் என்ற இடத்தில் வேற்று கிரக மனிதர்கலின் கலம் ஒன்று பூமியில் வேகமாக வந்து மோதி சிதறியதாகப் பதிவாகியிருக்கிறது.

இப்போதும்கூட இதை நம்புகிறார்களோ இல்லையோ இதையும் வியாபார தந்திரத்தோடு சில நினைவுப் பொருள்களைத் தயாரித்து புரியில் விற்றுக் கொண்டிருக்கின்றனர்.

விண்வெளியியல் விஞ்ஞானிகள் அவ்விருவரைக் கேட்டு பதிவு செய்திருந்தால் வேற்று கிரகவாசிகள் பூமியில் உள்ளவர்களுடன் நேருக்கு நேர் "முதலில் சந்தித்த" வரலாற்று உண்மை வெளிவந்திருக்கக் கூடும்.

Sunday, April 8, 2012

ஐயாறப்பர் (ப்ரணதார்த்திஹரன்) ஆலயம்


பஞ்ச நதி தீரத்தில் அமர்ந்துள்ள ப்ரணதார்த்திஹரன்.

தஞ்சை மாவட்டத்தில் காவிரிக் கரையில் அமைந்திருக்கும் திருத்தலம் திருவையாறு. இங்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் (ப்ரணதார்த்திஹரன்) ஆலயம் இருக்கிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோயில் கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தான் காலத்தில் எழுப்பப்பட்டதாகத் திருத்தல வரலாற்றிலிருந்து தெரியவருகிறது. 

கரிகாலன் தேரில் வந்து கொண்டிருந்த போது வனப்பகுதியாக இருந்த ஓரிடத்தில் அவன் தேர் கீழிறங்கியதாகவும், அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது பூமிக்கடியில் அகப்பேய் சித்தர் நிஷ்டையில் இருந்ததாகவும், அவருடைய தவம் கலைந்ததால் என்ன செய்வாரோ என்று பயந்திருந்த மன்னனிடம் அவ்விடத்தை மேலும் தோண்டி அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஓர் ஆலயம் அமைக்கப் பணித்ததாகவும், அதுதான் இந்த ஆலயம் என்பதும் தெரிய வருகிறது. இந்த ஆலயத்தை கூர்ந்து கவனித்து வருகையில் தெரியவரும் உண்மை என்னவெனில் ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் மூலத்தானமும் அதன் மேல் அமைந்த விமானமும்தான் ஆதிகாலத்தியது என்பதும் அந்த மூலத்தானத்தைச் சுற்றியுள்ள மற்ற பகுதிகள் எல்லாம் பிற்காலத்தில் ஒவ்வொரு மன்னர்கள் எழுப்பியது என்பதும் தெரியவருகிறது. 

இந்த விமானத்தின் புனிதம் கருதியோ என்னவோ, பிற்காலத்தில் கட்டப்பட்ட மண்டபங்கள் இந்த விமானத்தோடு இணைக்கப்படாமல் சிறிது இடைவெளி விட்டே கட்டப்பட்டிருக்கிறது. இந்த விமானத்துக்கும் சுற்றுப்புற மண்டபங்களுக்குமிடையே மூன்றடி இடைவெளி காணப்படுகிறது.

இந்த ஆலயத்துக்கு 1971ஆம் ஆண்டு திருக்கயிலாய பரம்பரை திருத்தருமையாதீனத்தார் குடமுழுக்குச் செய்வித்திருக்கின்றனர். அதன் பின் இப்போது வருகிற தை மாதத்தில் (அதாவது 2013 ஜனவரி மாதத்தில்) குடமுழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வேலைகள் துரித கதியில் நடக்கின்றன. மூலத்தான விமானத்தையொட்டி அமைந்த மேற்கூரையின் மேல் தளம் முழுவதும் புதிய தட்டோடுகள் பதிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு விட்டன. மேல் மாடம் செல்ல படிகள் இருக்கின்றன. அதன் வழியாக மேல் கூரைக்குச் சென்று தளங்களையும் மூலத்தான விமானம் மற்றும் மற்ற விமானங்களைப் பார்க்கும்போது மூலத்தானத்து மேற்புறம் அமைந்துள்ள விமானம் முழுவதிலும் பல சித்தர்களின் உயிரோட்டமுள்ள சுதைச் சிற்பங்கள் இருப்பதைக் காண முடிகிறது. பொதுவாக தெய்வ விக்கிரகங்கள் மட்டுமே இருக்கக்கூடிய விமானங்கள் எங்கும் இருக்கும். ஆனால், இங்குள்ள விமானம் முழுவதும் பல சித்தர்கள், பல வடிவங்களில் உடல் ஒட்டி, எலும்புகள் தெரிய, வெற்றுடம்போடு, கெளபீனம் மட்டும் அணிந்து தலையில் ஜடாமுடிகளுடன், கழுத்தில் ருத்ராக்ஷ மாலைகள், மார்பில் பூணூல் துலங்க பற்பல தவக்கோலத்தில் இருக்கிறார்கள். அந்தச் சிற்பங்கள் நேரில் பார்ப்பதைப் போல மிக துல்லியமாக, அழகாக, அளவெடுத்தாற்போல உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமானம் சிறு செங்கற்களாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்டு சுதைவேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. சுற்றிலுமுள்ள மண்டபங்கள் அனைத்திலும் கருங்கற்கள் பயன்பட்டிருந்தாலும் இந்த கோபுரத்தில் மட்டும் சுண்ணாம்பு சுதை வேலைப்பாடுகளோடு, எண்ணற்ற சிறிய பெரிய சித்தர்கள் உருவம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் வரலாறும் உட்பொருளும் என்ன என்பதை ஆய்ந்தறிந்துதான் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக சித்தர்கள் உருவாக்கிய ஆலயங்களின் சாந்நித்யம் மிக சிறப்பாக இருக்குமென்பது பெரியோர்கள் கருத்து. எனவேதான் வெளியே அதிகம் தெரியாமல் பற்பல அற்புதங்கள் நிகழ்த்தி இங்கு வழிபடும் பக்தர்களுக்கு அரிய பெரிய சாதனைகளை ஐயாறப்பர் வழங்கி வருகிறார். இங்குள்ள ஐயாறப்பரின் லிங்க உருவம் பாறையில் செதுக்கப்பட்டது அல்ல சுயம்புவாக உருவானவர் மணலால் ஆனது என்கிறது தல வரலாறு.

இந்த கர்ப்பகிரகத்தைச் சுற்றியுள்ள ஒரு சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ள தக்ஷிணாமூர்த்தி சந்நிதி வரை மட்டும் செல்லலாம். அதனைத் தாண்டி செல்ல அனுமதி இல்லை. காரணம் அங்கெல்லாம் சிவனின் சடாமுடி பரந்து விரிந்து கிடக்கும் பகுதி என்கிறார்கள். இந்த ஆலயம் குறித்து பல சிறப்பான செய்திகள் வெளிவந்திருந்தாலும், மூலத்தானத்து விமானத்தில் இத்தனை சித்தர்களின் உருவங்கள் இருப்பது அவ்வளவாக வெளியே தெரிந்திருக்கவில்லை. மேலும் இப்படிப்பட்ட சித்தர்களால் உருவான இந்த ஆலயத்துக்குச் சிறப்புக்கள் உண்டு என்பதைப் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் திருவையாறு ஐயாறப்பர் ஆலயம் மிகவும் சிறப்புடையது. 

இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெறும் மராமத்துப் பணிகள் குறித்து சமீமாக சில பத்திரிகைகளிலும்  இந்த ஆலயத்தில் சோழர் கால சித்திரங்கள் அழிக்கப்பட்டு புதிதாக வரையப் படுகின்றன என்பது போல செய்திகளைப் பரப்பி பரபரப்பை உண்டாக்கி விட்டனர். இது குறித்து உண்மை நிலவரத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, இந்த ஆலயத்துக்கு தினமும் சென்று வருபவர்களும், இந்த ஆலய திருவிழாக்களில் முக்கிய பங்கு வகித்து சிறப்பாக நடைபெற பணியாற்றுகின்ற இயக்கங்கள் மூலமாகவும் உண்மை நிலைமையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. இனி விஷயத்துக்கு வருவோம்.

இந்த பழமையான ஆலயத்துக்கு குடமுழுக்கு செய்வதற்காக ஆலயத்தில் பல திருப்பணிகள் பல உபயதாரர்களின் உதவியோடு நடந்து கொண்டிருக்கின்றன. ராஜகோபுரம், மேல கோபுரம், போன்ற பெரிய கோபுரங்களும், ஆட்கொண்டார் எழுந்தருளியிருக்கும் தெற்கு கோபுர வாசல் முதலிய இடங்களும் புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தென் கயிலாயம் எனும் திருநாவுக்கரசர் சந்நிதி அமைந்த ஆலயம் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டு விட்டது. ஆலயத்தின் உட்புறம் எண்ணெய் பிசுக்கும், வண்ணக் கலவைகளும் மூடியிருந்த திருவோலக்க மண்டபம் உட்பட அனைத்துத் தூண்களும் சுத்தம் செய்யப்பட்டு அதற்கு மேல் ரசாயனப் பூச்சு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தூண்களில் எண்ணெயைய் தடவுவது, சிற்பங்களை சிதிலம் செய்வது போன்ற பல தீய பழக்கங்களால் இவை சீர்கேடு அடைந்திருந்தது. அவை இப்போது சரி செய்யப் படுகின்றன. 

உள்சுற்று பிரகாரத்தில் ஒரு மண்டபம் சுவர் வைத்து மூடப்பட்டிருந்தது. அந்த சுவர் இடிக்கப்பட்டு இப்போது அந்த விசாலமான மண்டபம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்டபத்தில் சுற்றுச் சுவருக்கு பதிலாக இரும்பு கிரில்கள் பதிக்கப்பட்டு இங்கு விக்கிரகங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவிருக்கிறது. இந்த மண்டபம் அமைந்துள்ள உள்சுற்றுப் பிரகாரத்தில் அமைந்துள்ள திருச்சுற்று மாளிகையின் தென்பகுதியில் உள்ள சுவற்றில் எழுதப்பட்டுள்ள சித்திரங்கள்தான் இப்போதைய பிரச்சினைக்கு மூலமாக விளங்குகிறது.

உள்நிலை பிரகாரத்தில் முச்சத்தி சந்நிதி, முருகன் சந்நிதி, நவக்கிரகம், ஆதி விநாயகர் ஆகியவை அடங்கிய பிரகாரத்தில் தென்புற திருச்சுற்று மாளிகையின் சுவற்றில் 1958ஆம் வருஷம் தல புராணம் முதலியவை வண்ணக் கலவையால் படங்களாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அது இப்போது அழிந்து வண்ணம் மங்கி (புகைப்படங்களைக் காண்க), உருத்தெரியாமல் போய்விட்டபடியால் இப்போது அங்கு புதிதாக வண்ணம் தீட்டும் பணி தொடங்கப் பட்டிருக்கிறது. இந்த திருச்சுற்று மாளிகை கீழ் புறம் தவிர மற்ற தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று பகுதிகளிலும் மேல் மாடத்தோடு அமைந்திருக்கிறது. கீழ் திருச்சுற்றில் நடப்பதைப் போலவே படியேறி மேல் சுற்றிலும் நடந்து பார்க்கலாம். அப்படி கீழ் சுற்றில் தெற்குப் பகுதியில் மட்டும்தான் 1958இல் தீட்டப்பட்ட சித்திரங்கள் காணப்படுகின்றன. மற்ற பகுதிகள் கீழ் சுற்று, மேல் சுற்று உட்பட மேற்குப் புறம், வடக்கு புற சுவர்கள் அங்கெல்லாம் சிமெண்ட் அல்லது சுண்ணாம்பு மேல்பூச்சு இல்லை கருங்கற்கள் முழுவதுமாக தெரியும்படி கட்டப்பட்டிருக்கின்றன. அனைத்தும் கருங்கற்கள் அடுக்கப்பட்டுக் கட்டப் பட்டிருக்கின்றனவே தவிர அதில் எந்த சித்திரங்களும் இல்லை. 

இந்த 1958இல் தீட்டிய சித்திரம் அழிந்துவிட்டதால் அதன் மீது புதிதாக வண்ணம் தீட்டப்படுகிறது. இதை சில பத்திரிகையினர், யார் கொடுத்த விவரங்களோ தெரியவில்லை, இங்கு சோழர் கால சித்திரங்கள் அழிக்கப்பட்டு புதிதாக வண்ணம் தீட்டுவதாக எழுதி கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அங்கு சோழர் கால சித்திரங்கள் இருந்திருந்தால் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கும், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கும் தெரியாமல் போயிருக்குமா? மேலும் இந்த ஆலயம் பழமையானது என்பது தவிர எந்த மன்னனின் தலை நகரத்திலும் அமைந்திருக்கவில்லை. இங்கு சோாழர்கால ஓவியங்கள் மட்டுமல்ல, பின்னர் வந்த நாயக்கர்கள், மராத்தியர்கள் கால ஓவியங்களும் காணக் கிடைக்கவில்லை. 

இந்த பிரகாரத்தில் நவக்கிரக மண்டபத்துக்கு முன்பாக விக்கிரகங்கள் பாதுகாக்க ஒரு மண்டபத்துக்குச் சுற்றுச் சுவர் எழுப்பி பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. அந்த மண்டபத்தில் இருந்த சுவர்களை இப்போது இடித்துவிட்டு கனமான கிரில் பாதுகாப்பு செய்யப்படுகிறது. அந்த மண்டபத்தின் மேல் பகுதியிலும் இதுபோன்ற சமீப கால வண்ண ஓவியங்கள் அப்படியே இருக்கின்றன. அதே மாதிரியான ஓவியங்கள்தான் தெற்குப் பகுதி திருச்சுற்று மாளிகையிலும் வரையப்பட்டிருக்கிறது. 

இந்த ஓவியங்களை 1958இல் வரைந்த ஓவியர் இப்போதும் உயிரோடுதான் இருக்கிறார். அந்த படங்களின் கீழே வரைந்த தேதியும் (வண்ணப்பூச்சு 27-11-1958) காணக் கிடைக்கின்றன. மேலேயுள்ள இந்த சித்திரங்களைச் சுரண்டிப் பார்த்தால் அடியில் வேறு பழமையான சோழர் கால ஓவியங்கள் இருக்கிறதா என்பதையும் கண்டுபிடித்து விடமுடியும். தஞ்சை பெரிய கோயிலின் விமானத்தில் மேல் தளத்தில் அப்படிப்பட்ட சோழர் கால ஓவியங்களும், அதன் மீது வரையப்பட்ட நாயக்கர் கால ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அப்படியெல்லாம் எந்த தகவலும் இல்லாமல் இங்கு நடைபெறும் திருப்பணி வேலைக்கு இடையூறு செய்வது போல சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருவதற்கு பதிலாக இந்தத் துறையில் வல்லுனர்கள் சிலரை அழைத்து வந்து காட்டி உண்மையை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். 

1971க்குப் பிறகு இப்போது குடமுழுக்கு நடைபெறும் இந்த நேரத்தில் அழிந்து சிதைந்து போன 1958இல் வரையப்பட்ட சித்திரங்களை, அதிலும் கையால் தொட்டால் கையோடு வரும்படியான சாயக் கலவையால் வரையப்பட்டவற்றை புதுப்பிக்காமல் அதே நிலையில் வைத்தா குடமுழுக்கு செய்ய முடியும்? இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஏனோதானோ வென்று தவறான செய்திகளைப் பரப்புவதால் பரபரப்புதான் ஏற்படுமே தவிர மக்களுக்கோ, இந்தப் பழம் பெருமை வாய்ந்த ஆலயத்துக்கோ எந்த நன்மையும் விளையப் போவதில்லை. ஆலயத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்கும் இது குறித்து அக்கறை இல்லாமல் போய்விடுமா? அப்படியே எதாவது தவறுகள் நடந்திருந்தால் உள்ளூர் மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா? இப்படி எதற்காக தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன என்பது தெரியவில்லை.

எனவே அதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தாமல் ஆலய திருப்பணி நல்ல முறையில் நடைபெற அனைத்துத் தரப்பினரும் ஒருமுகமாக பாடுபடவேண்டும். இந்த புகார்கள் வெளிவந்ததால் கடந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக இறை பணியும், சமூக பணிகளும், ஆலயத்தில் நாட்டியாஞ்சலி, ஆடி அமாவாசை கைலை காட்சி காணுதல், சித்திரைத் திருவிழா போன்றவற்றில் தீவிரமாக பங்குபெற்று வரும் திருவையாறு பாரதி இயக்கத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் சென்று ஆலயத்தை நன்கு ஆய்வு செய்த பிறகு உண்மை நிலைமையை விளக்கி பத்திரிகைகளுக்கு எழுதியிருக்கிறார்கள் திருவையாறு பாரதி இயக்கத்தார். இது குறித்து மேலும் உண்மை நிலைமையை அறிந்து கொள்ள விரும்புவோர் திருத்தருமையாதீனம் திருவையாறு கட்டளை விசாரணை முனைவர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகளைக் கண்டு பேசி தெளிவு பெறலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த ஆலயத்தின் பழமை, சித்தர்களால் நிறுவப்பட்டது என்கிற செய்தி, இந்த ஆலயத்தில் வழிபட்டு பல நன்மைகளைப் பெற்றிருக்கின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்களின் நல்லெண்ணம் இவற்றை மனதில் கொண்டு குடமுழுக்கு நடைபெறப் போகும் இந்த ஆலயத்துக்கு மக்கள் வந்து தரிசனம் செய்து பலனடைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். அருள்மிகு அறம்வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி அம்பாள்) சமேதராய் விளங்கும் ஐயாறப்பர் (பஞ்சநதீஸ்வர ஸ்வாமி, பிரணதார்த்திஹரர்) அனைத்து சம்பத்துக்களையும் வழங்குவார் என்பது திண்ணம்.

Issued by: Tiruvaiyaru Bharathi Iyakkam, 19, North Street, Tiruvaiyaru 613204  in the interest of the public at large.
அருள்மிகு ஐயாறப்பர் ஆலயம்

திருச்சுற்று மாளிகை ஓவியங்களின் நிலை

வரையப்பட்ட தேதியைப் பாருங்கள் 27/11/1958
பிரச்சினைக்குரிய ஓவியம் இருக்கும் திருச்சுற்றுச் சுவர்
புதிதாக வரையப்படும் ஓவியங்கள்
திருச்சுற்று மாளிகையின் தோற்றம்

விமானத்தில் இருக்கும் பல சித்தர்கள் சிலைகள்

அருள்மிகு ஐயாறப்பர் ஆலய முகப்பு
இரண்டாம் கோபுரம்
ஆலயத்தினுள் இருக்கும் திருக்குளம்
முச்சத்தி மண்டபமும் பின்புலத்தில் மேல கோபுரமும்
நூற்றுக்கால் மண்டபம்
நாட்டியாஞ்சலி நடக்கும் திருவோலக்க மண்டபம்
2ஆம் கோபுரம் 3ஆம் கோபுரம் இடைப்பட்ட பகுதி
அப்பருக்குக் கயிலைக் காட்சி கிடைத்த குளம்
வட கயிலாய ஆலயம்
தென் கயிலாய ஆலய கோபுரம்
அம்பாள் கோயிலுக்குச் செல்லும் வழி
ஆலய ஸ்தல புராணச் செய்திகள் தொகுப்பு புலவர் கோ.சுப்பிரமணியனார்

Those who are viewing this post may kindly express their opinion in the space provided for the same.