பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 14, 2015

கும்மி

இந்த கும்மி பழந்தமிழ்ப் பாடல் அல்ல. சென்ற நூற்றாண்டில் இயற்றப்பட்டதாக இருக்க வேண்டும். மதுரை கோபுரம் எனக் குறிப்பு உள்ளதாலும், இதே சொற்றோடர், "மதுரை கோபுரம் தெரிந்திடச் செய்த மருதுபாண்டியர் பாருங்கடி" என்று காளையார்கோயிலைப் பற்றிய பாடலில் வருவதால், இது அவர் காலத்திய பாடலாகவும் இருக்கலாம்.படிக்க சுவாரசியமாக இருக்கிறது. படியுங்கள்.


நன்னன்னா கொட்டவும் நாளாச்சு - அம்மா
        நாணயமான ஏரிக்குள் ளேதான்
    ஏரிக்குள் ளேஒரு படகு போகுது
        ஏலேலம் கொட்டடி கூலிக்காரி. 
                 1
கல்லு மலைமேலே கல்லுருட்டி - அந்தக்
        கல்லுக்கும் கல்லுக்கும் அணைபோட்டு
    மதுரைக் கோபுரம் தெரியக் கட்டி - நம்ம
        மன்னவன் வாறதைப் பாருங்கடி. 
               2
இரும்பு நாற்காலி போட்டுக்கிட்டு - அவர்
        எண்ணெயும் தேச்சுத் தலைமுழுகி
    எல்லா வேலையும் முடிச்சுக்கிட்டு - அவர்
        எப்போ வருவாரு கச்சேரிக்கு?                   
3
வாறாரு போறாரு என்றுசொல்லி - அவள்
        வாழை யிலையிலே பொங்கல் வச்சால்
    வந்தாப் போலேதான் வந்துகிட் டிருந்து
        வெண்கலக் கூடாரம் அடிச்சாராம்.             
4
புற்றுமண்ணை வெட்டிப் பொங்கல்வைத்து - அவள்
        புள்ளை தவத்துக்குப் போகையிலே
    புள்ளையும் கொடுப்பார் புண்ணிய சாலி
        புன்னை மரமேநீ தான்சாட்சி.                     
5
வண்ணான் தப்புற கல்லுமேலே - அடா
        வழி நடக்கிற சேவகரே
    சித்திரை மாசம் கலியாணம் - நாங்கள்
        சொல்லிவிட்டுப் போனோம் பட்டாளம்.   
    6
     
கொண்டவனை அடிக்கிற பெண்டுகளா - உங்கள்
        தொண்டைக்கு என்னாங்கடி கம்மலு
    தொண்டை வலிக்குச் சாராயம் - அந்தத்
        தொடை வலிக்கு வெந்நீரு.                          
7
முத்தே முத்தேநீ கும்மியடி - அடி
        மோகன முத்தேநீ கும்மியடி
    கறுப்புக் கொசுவத்தைத் திருப்பிவச் சுக்கட்டும்
        கண்ணாடி முத்தேநீ கும்மியடி.                    
8
ஓடாதே ஓடாதே தொள்ளைக் காதா - நீ
        ஓட்டம் பிடிக்காதே இல்லிக்கண்ணா
    மாட்டு எலும்பை எடுத்துக்கிட்டு - நான்உன்
        மார்பெலும்பை யெல்லாம் தட்டிடுவேன்.    
9
பத்துப் பெண்களும் கூடிக்கிட்டு - நம்ம
        பட்டணம் மைதானம் போகையிலே
    பார்த்துக்கிட் டிருந்த பறப்பயல் ஒருத்தன்
        பட்டுமுந் தாணிமேல் ஆசைவைத்தான்.     
  10     
ஊரான் ஊரான் தோட்டத்திலே - அங்கே
        ஒருத்தன் போட்டது வெள்ளரிக்காய்
    காசுக்கு ஒண்ணொண்ணு விற்கச்சொல்லி - அவன்
        காயிதம் போட்டானாம் வேட்டைக்காரன்.   
11   

வேட்டைக்கா ரன்பணம் வெள்ளிப்பணம் - அது
        வேடிக்கை பார்க்குது சின்னப்பணம்
    வெள்ளிப் பணத்துக்கு ஆசைவச்சு- அவள்
        வீராயி வந்தாடி ஆராயி.                               
12
தேனும் உருளத் தினைஉருள - அந்தத்
        தேங்காய்த் தண்ணீரும் அலைமோத
    மாங்காய் கனிந்து விழுகுதுபார் - அந்த
        மகராசன் கட்டின தோட்டத்திலே.               
13
இந்தநல்ல நிலா வெளிச்சத்திலே - அம்மா
        என்னைக்கல் லாலே அடிச்சதாரடி
    அவர்தாண்டி நம்ம எல்லாருக்கும் மாமன்
        அன்று மாம்பழங் கொடுத்தவரு.                 
14
ஆற்று மணலிலே ஊற்றெடுத்து - அம்மா
        அஞ்சாறு மாசமாச் சண்டைசெய்து
    வேற்று முகப்பட்டு வாறாரே - அம்மா
        வெள்ளிசங் கங்கட்டி வீசுங்கம்மா.              
15
நாகப் பட்டணக் கடற்கரையில் - நம்ம
        நல்லவே ளாங்கண்ணித் தாயாரு
    ஆவணிமாசம் பதினெட்டாந் தேதியில்
        அம்மா புதுமையைப் பாருங்கம்மா.          
   16 
குச்சியும் குச்சியும் பொன்னாலே - அந்த
        ஆவாரங் குச்சியும் பொன்னாலே
    திருப்பத் தூரு தேவமா தாவுக்குத்
        திருமுடி கூடப் பொன்னாலே.                    
17
புலியைக் குத்திப் புலிவாங்கி - அந்தப்
        புலிவாயைத் திறந்து மிளகா யரிஞ்சு
    சோடிப் புலிகுத்தும் நம்மண்ணன் மாருக்குச்
        சுருளு வருவதைப் பாருங்கம்மா. 
                18
அக்காதங் கச்சிகள் ஏழுபே ருநாங்கள்
        ஆருக்கும் அடங்காத வேங்கைப்புலி
    வெள்ளிப் பிரம்பைத்தான் கையிலே பிடித்தால்
        எங்கேயும் பறக்கும் வேங்கைப்புலி.          
19
பாக்கு பட்டையிலே சோறாக்கி - அந்தப்
        பாலத்துக் குமேலே நெய்யுருக்கித்
    தேக்கிலையிலே தீனிபோட் டுத்தின்னத்
        தொரைமாரு எப்போ வருவாங்களோ? 
      20
நடுக்காட்டுக் குள்ளே தீயெரிய - நம்ம
        நாலு துரைமாரும் தீனிதின்ன
    இவள்தாண்டி மதுரை மீனாட்சி - சீலை
        இழுத்துப்போர்த் திக்கிட்டு வாறாளடி.        
21



No comments: