பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, June 17, 2013

பறக்கும் தட்டு

பறக்கும் தட்டைப் படமெடுத்த ராணுவ அதிகாரி


தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஒரு செய்தி. அந்த செய்தியின்படி கேரளத்திலுள்ள கண்ணூர் எனுமிடத்தில் வானில் பறந்த ஒரு பறக்கும் தட்டை ராணுவ அதிகாரியொருவர் தன்னுடைய கைபேசியின் மூலம் படமெடுத்ததாக அவருடைய மனைவி தெரிவித்திருக்கிறார்.

மேஜர் செபாஸ்டியன் சசாரியா என்பவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர். இவர் ஒரு புதிய கைபேசியை வாங்கினார். அதில் புகைப்படமெடுக்கும் வசதி இருந்ததால் கண்ணூரில் இவர் பல படங்களை எடுத்திருக்கிறார். அப்படி எடுத்த ஒரு படத்தில் பறக்கும் தட்டு ஒன்று காணப்படுவதைக் கண்டு இவர் அதிசயித்துக் குரல் எழுப்பியிருக்கிறார். முதலில் இவர் பறக்கும் தட்டை படமெடுத்ததாகச் சொன்னதை மற்றவர்கள் நம்பவில்லை. ஏதோ தமாஷ் செய்கிறார் என்று நினைத்தார்கள்.

மேஜர் செபாஸ்டியன் அந்தப் பறக்கும் தட்டைத் தன்னுடைய கண்களால் பார்க்கவில்லை. ஆனால் அவர் எடுத்த புகைப்படமொன்றில் அந்த பறக்கும் தட்டு காணப்படுவதைக் கண்டு மற்றவர்கள் ஆச்சர்யமடைந்தனர். ஊர் சுற்றி புகைப்படமெடுத்துவிட்டு வீடு திரும்பிய இவர்கள் மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்துப் பிரமித்துப் போய், இது குறித்த இணைய தளங்களையும், அமெரிக்க விண்வெளி நிலையம் நாசா குறித்த இணையதளங்களுக்கெல்லாம் தோண்டித் துறுவி ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள்.

எதிலும் சந்தேகம் தீராத இவர்கள் அந்த கைபேசியை உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்குத் தொலைபேசியில் பேசி, அந்த கைபேசியில் ஏற்கனவே இதுபோன்ற ஏதாவது உருவம் பதிவு செய்யப்பட்டிருந்ததா, அல்லது புதிதாக எடுத்தப் படத்தில்தான் அது வந்திருக்கிறதா என்றெல்லாம் விசாரித்திருக்கிறார்கள். அந்த நிறுவனம் அப்படியெல்லாம் எந்த படத்தையும் கைபேசியில் பதிவு செய்து வைத்திருப்பதெல்லாம் கிடையாது, புதிதாக நீங்கள் படமெடுத்த போதுதான் அது பதிவாகியிருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள்.

பிறகுதான் அவர்களுக்குப் புரிந்தது, தாங்கள் அதிசயத்தக்க ஒரு பறக்கும் பொருளை படமெடுத்திருப்பது. திரைப்படங்களில்தான் பறக்கும் தட்டு போன்றவைகளையெல்லாம் பார்த்திருந்த இவர்களுக்கு, இது ஒரு அதிசயமாகப் பட்டது. இதை இப்போது என்ன செய்வது, பார்த்தார்கள், அந்தப் படத்தை எடுத்து பத்திரிகையாளர்களிடம் கொடுத்து விட்டார்கள். இந்தப் படத்தைத் தாங்கள் வைத்துக் கொண்டு, அதில் பறக்கும் தட்டு பதிவாகியிருக்கிறது என்று சொல்லப்போக, அதைக் கேட்பவர்கள் இது பொய் என்றும், அப்படியொரு பொருள் கிடையாது என்றும் விவாதித்துத் தங்களை சங்கடத்தில் ஆழ்த்திவிடுவார்களோ என்று பயந்து அது தங்கள் கையைவிட்டுப் போனால் சரி என்று பத்திரிகாளர்கள்தான் இதற்குச் சரி என்று அவர்களிடம் கொடுத்துவிட்டார்கள். படத்தை எடுத்தவர் ராணுவ அதிகாரி என்பதால் அவர் இதுகுறித்து எந்த சர்ச்சையிலும் ஈடுபட விரும்பவில்லை.

இந்த விஷயத்தை பெங்களூரிலிருக்கும் வான்வெளி ஆராய்ச்சி மையத்துக்குத் தெரிவித்த போது, அங்கிருந்த பேராசிரியர் ஜெயந்த் மூர்த்தி என்பவர் இதெல்லாம் சும்மா, பறக்கும் தட்டுகள் என்பதெல்லாம் கிடையாது என்று அறிவித்து விட்டார். ஏதோவொரு பொருளின் பிரதிபிம்பம் இதுபோல ஒரு உருவத்தை உருவாக்கிக் காட்டி படத்தில் பதிந்திருக்கலாம், உண்மையாக அப்படி எதுவும் பறந்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். எது உண்மை? பறக்கும் தட்டு இருந்தது உண்மையா? அதை படம் எடுத்தபோது அது பதிவானது உண்மையா? அல்லது அது ஒரு பொருளின் பிரதிபிம்பமாக இருந்து அதிர்ஷ்ட வசமாக படத்தில் பதிவானதா, எது உண்மை? தெரியவில்லை.

செய்தி: நன்றி: தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் 18 ஜூன் 2013, திருச்சி பதிப்பு.


The beginning of Tamil journalism

The beginning of Tamil journalism
S. MUTHIAH
C.R. Srinivasan bought the Whiteaway's building shortly after Independence and linked the Swadesamitran's fortunes with it. He named it Victory House, marking the success of the `Quit India' movement. It is here that one saw the birt h of Tamil journalism.

ACROSS FROM D'Angeli's Hotel were two Indo-Saracenic buildings that were landmarks in Madras throughout the 20th Century. The former no longer exists, replaced by a typical tasteless highrise, but in its loss only a bit of the city's architectural heritage has been lost. The latter underwent one remodelling, and is in the throes of another, but neither marks the significance of what flourished behind its once-handsome façade, namely, the beginnings of Tamil Journalism.
The building that vanished was first known as Tawker's Building. The Tawkers from Gujarat - a family that still calls Madras home - were the city's leading jewellers in the 19th Century, their business having been established in the city in 1761, shortly after they arrived here. The family was equally renowned for its philanthropy. A trust endowed by two women of the family built the Sri Kasi Viswanathar Temple in 1805 and the neighbouring Tawker's Choultry in Ayyanavaram and endowed several other charities. The Choultry was being used as a students' hostel the last I heard of it, but the tradition of the Tirupati umbrellas taken to Tirumala from Madras being kept in the Kasi Viswanathar Temple for the night still continues.
T.R Tawker and Sons bought the Mount Road site in 1893 and had Henry Irwin design them a showroom worthy of their jewellery and gem collection. T. Manavala Chetty, the contractor, built a building to last; little did he dream that in 80 years, it would be deliberately pulled down. When the golden era of Tawker's began to dull, the firm sold the building to the Rajah of Venkatagiri in 1926 who, in turn, sold it to Kasturi Estates five years later. The South Indian Cooperative Insurance Society, founded in 1932, bought the property in 1948 and, on the nationalisation of insurance in 1956, it became the Life Insurance Corporation's. From 1953, Indian Airlines occupied its ground floor in considerable spaciousness, but when it moved into its more modern offices in 1979, the LIC, an organisation not the most sympathetic to heritage or architecture, decided to pull it down. And so the building came down in 1980 - a classical Irwin design with a clock almost as famed as P.Orr's lost forever.
Next door remains the building that VGP, those pioneers of consumer durables' hire purchase, keep remodelling as they refurbish what has become a giant showroom. Interestingly, the building's beginnings go back to another merchandiser of consumer products. In the 1890s, Whiteaway, Laidlaw's, `Furnishers and General Drapers', were as much into textile retailing and tailoring as they were into selling a whole range of household requirements. The firm had branches throughout British India as well as in the capitals of many of the other British colonies in the East. Looking very much like its neighbour, the Whiteaway's building could very likely have been built around the same time as the Tawker's Building by the same team. But where it got the name it became known by, Victory House, is something I have not been able to discover with any certainty.
A story I've heard is that when C.R. Srinivasan bought the building shortly after Independence and linked the Swadesamitran's fortunes with it he named it Victory House, marking the success of the `Quit India' movement. Others hold that it's an older name, going back to Whiteaway's commemorating the Allied victory in the Great War. Whatever the reality, it is as the home of the Swadesamitran that I knew Victory House, even if most of the activities of that pioneering Tamil daily took place well behind the handsome Mount Road façade.
Rajavritti Bodhini and Dina Varthamani in 1855 and Salem Pagadala Narasimhalu Naidu's fornightlies, Salem Desabhimini in 1878 andCoimbatore Kalanidhi in 1880, were the earliest Tamil journals. But in 1882 there arrived on the Tamil publishing scene a journal that would transform Tamil Journalism. It was started by G. Subramania Aiyer, the Founder-Editor of The Hindu, while he was still with the paper he had founded. He was more familiar with English, but he was to hone his Tamil with the Swadesamitran; in the event he was never to become a great Tamil writer, but he created a whole new Tamil political vocabulary. His foray into Tamil journalism was to be later explained by Narasimhalu Naidu so: "(He) was conscious that those with a knowledge of English are a small number and those with a knowledge of Indian languages the vast majority. He felt that unless our people were told about the objectives of British rule and its merits and defects in the Indian languages, our political knowledge would never develop." Subramania Aiyer, an Anglophile in his early years, saw himself as a bridge of understanding and communication between the ruler and the ruled.
When Subramania Aiyer quit The Hindu 1898, feeling so fettered by his partner that he could not wage his impassioned campaigns for social reforms, he made the Swadesamitran his full-time business. Operating from premises at the rear of Whiteaway's, he made it a thrice-weekly paper, then, in 1899, the first Tamil daily. It was to enjoy this status for 17 years - and even thereafter did not meet any real challenge till Swararajya started in 1925, Tamil Nadu in 1927 andDinamani in 1934, but they too were unable to shake theSwadesamitran's primacy till the 1950s.
Subramania Aiyer's "pugnacious style, never qualifying words to soften the sharp tenor of a sentence," his use of words "dipped in a paste of extra pungent green chillies," made the Swadesamitransought by the zamindars and the plutocrats by the "Sanga Boyans and the Rama Boyans" as well as women and Tamils wherever they lived in the world. And the daily became even more popular when Subramania Bharati joined it in 1904. But with two heavyweights, something had to give way and Bharati left in 1906 to start his weekly, India. The next year, when Lala Lajpat Rai was arrested and agitation followed in the Punjab, Subramania Aiyer's attitude to the British changed and he became a trenchant political critic of the Raj. Arrested in 1908 for sedition, he broke when faced with hard labour and was a beaten man thereafter. Nevertheless, Bharati in 1914 wrote of him, "unaided he has made Tamil Journalism a fact of the world in spite of his imperfect early training in Tamil. ... They win who dare; Mr. Aiyer dared and he has succeeded in establishing a Tamil daily journal which, with all its faults, is the most useful paper in the Tamil country. His whole political gospel can be summed up in these words: `Peaceful but tireless and unceasing effort.' Let us sweat ourselves into Swaraj, he would seem to say."
Seriously ill in 1915, Subramania Aiyer persuaded A. Rangaswami Iyengar, Kasturi Ranga Iyengar's nephew and right-hand man at The Hindu, to take over the paper and he made the Swadesmitran "a new force, potent and pervasive... (changing) the placid atmosphere of Tamil Journalism". Rangaswami Iyengar brought in his kin C.R. Srinivasan to manage the business end of the paper and Bharati, back from Pondicherry, rejoined the paper in 1920. The three made the Swadesamitran " a literary masterpiece of political analysis."
When Rangaswmi Iyengar returned to The Hindu in 1928 to become a memorable editor, Srinivasan bought him out. And the readers of theSwadesamitran discovered what a trenchant writer Srinivasan could be. He made the paper such a success that he could buy the Whiteaway's building and make it better remembered as the home of the Swadesamitran. But after his death in 1962, the paper began to fade, especially in the face of the `new journalism' introduced by theDina Thanthi. And by the 1970s, the end was inevitable, a sad end to a paper that had created Tamil Journalism. 

(Courtesy: The Hindu 23rd July 2003)


Tuesday, June 11, 2013

தனிப்பாடல்கள்

தமிழில் பல தனிப்பாடல்கள் இருக்கின்றன. அதில் மூன்றை மட்டும் இங்கு தருகிறேன். எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

ஆற்றங்கரை பிள்ளையாரின் திருமணத்துக்கு யார் பெண் தருவார்?

ஆற்றங்கரை படித்துறைகளில் எல்லாம் அனேகமாக ஒரு அரசமரமும், அருகில் ஒரு பிள்ளையாரும் நிச்சயம் காணலாம். பிள்ளையார் பாவம் இப்படி தனிமையில் உட்கார்ந்திருக்கிறாரே, அவருக்கு யாராவது பெண் கொடுத்துத் திருமணம் செய்வித்து அவரைக் குடியும் குடித்தனமுமாகப் பார்த்தால் என்ன. ஒரு புலவருக்கு அவர் மீது பரிதாபம் ஏற்பட்டுவிட்டது. ஆவர் பாடுகிறார் இப்படி:

"வீரம் சொரிகின்ற பிள்ளாய்
உனக்குப் பெண் வேண்டுமென்றால்
ஆரும் கொடார், உங்கள் அப்பன்
கபாலி; அம்மான் திருடன்
ஊரும் செங்காடு; நின்தன் முகம்
யானை; உனக்கு இளையோன்
பேரும் கடம்பன்; உன் தாய் நீலி
நிற்கும் பெருவயிறே."

வீரம் ததும்பும் முகமுடைய விநாயகப் பெருமானே! இப்படி ஆற்றங்கரையில் வந்து உட்கார்ந்திருக்கிறீரே? உனக்குப் பெண் கொடுக்க எவரும் தயாராயில்லையே, யாரும் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே. காரணம் என்ன தெரியுமா விநாயகா? உன்னுடைய தந்தை கையில் கபாலம் ஏந்தி பிக்ஷை எடுக்கிறார். உன் மாமன் கிருஷ்ணன் ஒரு வெண்ணை திருடி. உன் தந்தை இருக்குமிடமோ இடுகாடு. உன்னுடைய முகமோ யானை முகம். உன் தம்பியோ காட்டில் வாழும் கடம்பன். உன் அன்னை பார்வதியோ கருமை நிறம் படைத்த நீலி. உனக்கோ பானை வயிறு? பின்பு யார் பெண் கொடுப்பார். இதைக் கேட்டு விநாயகர் எழுந்தார், எதிரில் நிற்கும் புலவருக்கோ கண் தெரியாது. அந்தகக் கவி. என்ன செய்வது, ஒழிந்துபோ என்று விட்டுவிட்டார்.



பொய் சொல்லலாமா? யாரிடம் சொல்லலாம்? எங்கு சொல்லக்கூடாது?

"பொய்யருக்குப் பொய் உரைத்தால் வெற்றியாம்;
அவருக்குப் பொய்யாகாத
மெய்யருக்குப் பொய்யுரைத்தல் தேய்பிறைபோல்
தவம் குறையும், மிடியுண்டாகும்
துய்ய தாய் தந்தையர்க்குப் பொய்யுரைத்தால்
வறுமை பிணி தொலையா; என்றும்
உய்யவருள் தேசிகற்குப் பொய் உரைத்தால்
நரகமது உண்மைதானே."

அந்தகக் கவி வீரராகவர் பாடியுள்ள கவிதை இது. பொய் பேசுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவனிடம் பொய் சொன்னால் வெற்றி உண்டாகும்; பொய் சொல்வதை விரும்பாத ஒருவனிடம் போய் பொய் சொன்னால் நாம் செய்த புண்ணியங்கள் தேய்பிறை போல் மெல்ல தேய்ந்து போகும்; அதோடு விட்டுவிடுமா வறுமைப் பிணி பீடிக்கும்; தூய்மையான பெற்றோர்களிடம் போய் பொன் சொன்னால், நம்மைப் பீடித்திருக்கிற வறுமையும் பிணியும் நீங்கவே நீங்காது; வாழ வழிகாட்டும் ஆசிரியரிடம் பொய் சொன்னால் நரகத்துக்குச் செல்வது நிச்சயமாம்.


கல்வி மட்டும்தான் சதமென எண்ணினேனே!

"அட கெடுவாய்! பல தொழிலும் இருக்கக் கல்வி
அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல்
திட முளமோ கனம் ஆடக் கழைக் கூத்தாடச்
செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லை;
தட முலை வேசையராகப் பிறந்தோமில்லை
சனியான தமிழை விட்டுத் தையலார்தம்
இட மிருந்து தூது சென்று பிழைத்தோமில்லை;
என்ன சென்மம் எடுத்துலகில் இரக்கின்றோமே!"

தமிழ் படித்து புலமை மிகுந்தோம் எனும் பெருமையோடு செல்வம் மிகுந்தாரிடம் சென்று ஈயென்று இளித்துப் பல்லெல்லாம் தெரியக் காட்டி இரந்து நிற்கும் கேடுகெட்ட ஜென்மமே! (தன்னையே சொல்லிக் கொள்வது) என்ன ஜென்மம் எடுத்தாய் நீ! உலகத்தில் பிழைப்புக்காக செய்யக்கூடிய தொழில்களா இல்லை. அத்தனை வழிகள் இருக்கும்போது அதையெல்லாம் விடுத்து கல்விதான் உயர்ந்தது, அறிவுக் கண்ணைத் திறக்க வல்லது என்று அறிவில்லாமல் கல்வி கற்றாயே! மாறாக நடுத் தெருவில் மக்கட் கூட்டத்தின் மத்தியில் உயர்ந்த கம்பங்களை நட்டு அவற்றைக் கயிற்றால் பிணைத்து அந்தக் கயிற்றின் மீது ஏறிநின்று ஆடுகின்ற கழைக்கூத்தை ஆடத் தெரிந்து கொள்ளவில்லை; தெருவில் ஒரு கூடையைக் கவிழ்த்து அதில் மாங்கன்றை முளைக்க வைத்துக் காட்டும் செப்பிடுவித்தையைக் கற்று தேரவில்லை; அதெல்லாம் போகட்டும் உடல் அழகை உள்ளபடி காட்டி ஆண் மனங்களைச் சலனப்படுத்தி அவர்களிடமிருந்து காசைப் பறிக்கும் வேசியாகவும் பிறக்கவில்லை; இந்தச் சனியன் பிடித்த தமிழை உயிர் என்றும், உணர்வென்றும், மூச்சு என்றும், செல்வம் என்றும் எண்ணி தமிழைப் படித்ததற்குப் பதிலாக கணிகைப் பெண்களுக்குத் தூது போயாவது பிழைக்கவும் முடியவில்லை, என்னடா ஜென்மம் எடுத்து இப்படி கால் காசுக்கும் அரைக் காசுக்கும் லோலோ வென்று அலைந்து பிச்சை எடுக்கிறேனே! என்ன பிறவி என் பிறவி என்று ஏங்கித் தவிக்கும் ஒரு ஏழைப் புலவனின் ஓலக் குரல் இது.



Monday, June 10, 2013

வெற்றிவேற்கை (8)


வெற்றிவேற்கை (8)

வெற்றிவேற்கை விளக்கக் கட்டுரையின் நிறைவுப் பகுதி இது. சிறார்களுக்கான இலக்கியம் என்று இதுபோன்ற இலக்கியங்களை நாம் அலட்சியப் படுத்திவிடக் கூடாது. சின்னஞ்சிறிய வயதில் மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய முக்கியமான கருத்துக்களை இதுபோன்ற இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. படிக்கின்ற காலத்தில் இதன் முக்கியத்துவம் தெரியாமலே படித்து பின்னர் மறந்தும் போய்விடுகின்றோம். அதனால்தான் இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்க வேண்டும். இராமாயணக் கதை தெரியாதவர் எவரேனும் நம்மில் இங்கு உண்டோ? அப்படி இருந்தும் ஒவ்வொரு ஊரிலும் எத்தனை முறை இராமாயணம் சொல்லும் போதும் நாம் திரும்பத் திரும்பப் போய்க் கேட்கிறோமே, ஏன்? நல்ல விஷயங்களை அப்படி பலமுறை கேட்பதால் அவை நம் அடிமனதில் பதிந்து தவறு செய்யாமல் நம்மைக் காக்கும் என்பதால்தான். அதுபோலவே இதுபோன்ற நீதிநூல்களை அடிக்கடிப் படித்து நினைவில் கொள்ள முயற்சி செய்வோமே!

71. தன் ஆயுதமும் தன் கையிற் பொருளும்
பிறன் கையிற் கொடுக்கும் பேதையும் பதரே.

ஒருவன் தன் வாழ்க்கையை நடத்த ஏதேனும் ஒரு தொழில் புரிந்தே ஆகவேண்டும். அப்படி ஒரு தொழில் செய்ய என்னென்ன தேவை. தொழில் நடத்த ஒரு இடம் தேவை. மூலதனம் தேவை, உழைக்க ஆட்கள் தேவை, அவர்களை வழிநடத்த முதல் போடுபவனின் உழைப்பு தேவை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தொழில் நடத்த விரும்புகின்றவன் தன்னிடமுள்ள இடம், தளவாடங்கள், மூலதனம் இவை அனைத்தையும் வேறொருவன் கையில் கொடுத்துவிட்டு தான் நிம்மதியாகப் படுத்து உறங்குவானானால், அவனால் என்ன சாதிக்க முடியும்? அப்படிப்பட்டவன் சோம்பேறியாக எதற்கும் பயனின்றி வீணில் பொழுதைக் கழிக்கும் அறிவிலியாக இருப்பான். அவன் இந்த சமூகத்தில் ஒரு பதரைப் போன்றவன்.

72. வாய்ப்பறை ஆகவும் நாக்கடிப்பு ஆகவும்
சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்.

இப்போது போல தொலை தொடர்பும், ஒலி பெறுக்கி, வானொலி, தொலைக்காட்சி இவைகள் வராத காலத்தில் ஊர்மக்களுக்கு ஒரு செய்தியை அறிவிக்க பறை அறைந்து ஒருவன் தெருத்தெருவாகப் போய் சொல்ல வேண்டிய செய்தியை "இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்ன வென்றால் ......." என்று தொடங்கி சொல்ல வந்த செய்தியைச் சொல்லிக் கொண்டே செல்வான். அதற்கு அவனுக்குப் பயன்படுவது பறையும், கையில் இரு குச்சிகளும்தான். குச்சிகளைக் கொண்டு பறையை அடித்துக் கொண்டு செய்தியை பரப்புவது அவன் தொழில். பறையொலி கேட்டதும் மக்களும் ஏதோவொரு செய்தி சொல்ல வந்து கொண்டிருக்கிறான், என்னவென்று கேட்போம் என்று கவனமாக இருந்து செய்திகளை அறிந்து கொள்வார்கள். அதுபோலவே அந்தக் காலத்தில் பெரியோர்கள் மக்களுக்கு ஏதேனும் நல்ல செய்திகளை, அறிவுரைகளை, வழிகாட்டுதல்களைச் சொல்ல வேண்டுமானால், தங்களது வாயைப் பறையாகவும், நாக்கை குச்சிகளாகவும் பயன்படுத்தி செய்திகளை, அறிவுரைகளைச் சொல்லுவார்கள். அப்படி அவர்கள் சொல்லும் நல்ல செய்திகளை மக்கள் கவனத்துடன் கேட்டு நடந்து கொள்ள வேண்டும்.

73. பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால்
மெய்போலும்மே மெய்போலும்மே.

சிலருக்குப் பொய் பேசுதல் என்பது இயல்பானது. வாயைத் திறந்தால் பொய்கள் வந்து கொட்டும். பொய் பேசுபவனுக்கு, பொய் பேசாமல் சிறிது நேரம்கூட இருக்க முடியாது. யாரிடமாவது ஏதாவதொரு பொய்யை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருப்பான். அப்படி அவன் பொய் பேசுவதில் அவனுக்குக் கொஞ்சம் கூட கூச்சமோ, அவமானமோ கிடையாது. அவனுக்குத் தொழில் பொய் பேசுதல். அப்படிப்பட்டவர்களை நாம் அடையாளம் கண்டு கொண்டு அவனைக் கண்டதுமே இவன் இனி பேசப்போகின்றவை அனைத்தும் பொய்களே, அவற்றை நம்பிவிடக்கூடாது என்று மனத்தை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். சாதாரண மக்களைக் காட்டிலும் இதுபோன்றவர்கள் அதீத திறமைசாலிகளாக இருப்பர். அவர்கள் சொல்லும் பொய் உண்மை போலவே இருக்கும். சந்தர்ப்பங்களை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் சொன்னது மெய்யோ என்று எண்ணத் தோன்றும், அத்தகைய வாசாலகர்கள் அவர்கள். அவர்களைப் போன்றவர்கள் சொல்லும் செய்திகளை நன்றாக ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

74. மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே.

சிலர் உண்மையை மட்டுமே பேசுவார்கள்; பொய் பேசத் தெரியாதவர்கள். ஆனால் அவர்களுக்குப் பொய் பேசுபவனைப் போல வாசாலகமாகப் பேசி பிறரை நம்ப வைக்கவோ, சரளமாகப் பேசவோ தெரியாது. அதனால் அவன் உண்மையைத் தட்டுத் தடுமாறி சொல்லும் முறையைப் பார்த்து, இவன் பொய் சொல்லுகிறானோ என்று எண்ணத் தோன்றும். பொய் பேசுபவனுக்குத்தான் நல்ல திறமை வேண்டும். உண்மை பேசுபவன் எதார்த்தவாதி, ஆகையால் அவன் வெகுஜன விரோதியாகவே இருப்பான். பேசும் திறன் இல்லாமையால் அவன் பேசும் உண்மை கூட பொய் போலத் தெரியும். அதற்காக அவன் பேசுவதெல்லாம் பொய் என்று எண்ணிவிடாமல், அவன் சொல்பவைகளை நன்கு ஆராய்ந்து பார்த்து அதிலிருக்கும் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

75. இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கிழந்தவர் தாம்
மனம் உற மறுகிநின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாள் ஆகும்மே.

நெடிய வரிகள் இவை. இதன் பொருளைப் பார்ப்போம். ஒருவர் மற்றொருவர் மீது ஏதோவொரு காரணத்தை முன்னிட்டு வழக்குத் தொடர்கிறார். வழக்கைத் தொடர்பவர் வாதி, வழக்குத் தொடுக்கப்பட்டவர் பிரதிவாதி. இவ்விருவரும் நீதிபதியிடம் செல்கின்றனர். அந்த நீதிபதி இவ்விருவரும் சொல்லும் கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். பின்பு அவர்கள் சொன்னவற்றில் இருக்கும் உண்மையை, நியாயத்தை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். பின்னர் அவ்விருவரும் ஒப்புக்கொள்ளும் விதத்தில் தன்னுடைய தீர்ப்பை நியாயம், நடுநிலை தவறாமல் அளிக்க வேண்டும். அப்படிக்கின்றி நீதிபதி நடுநிலை தவறி தீர்ப்புக் கூறிவிடுவாராயின் நியாயம் தன் பக்கம் இருப்பவர் வருந்தி கண்ணீர் சிந்துவர். அப்படி பாதிக்கப்பட்டவர் நீதி தவறிவிட்டதே என்று கண்ணீர் வடித்தால், அந்தக் கண்ணீர் தவறான தீர்ப்பை அளித்த நீதிபதியை மட்டுமல்ல, அவருடைய சந்ததி முழுவதையும் அறுத்து அழித்துவிடுகின்ற வாளாக மாறிவிடும். அவரைக் காக்க பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவருமே வந்து நின்றாலும் அவரைக் காப்பாற்ற முடியாது. தவறான தீர்ப்பைக் கொடுத்தவரும் அவருடைய சந்ததியினரும் அழிவது திண்ணம்.

76. பழியா வருவது மொழியாது ஒழிவது.
சிலர் உணர்ச்சிப் பெறுக்கில் பழிவரும் சொற்களைப் பேசிவிடுவர். உதிர்த்த சொல்லைத் திரும்பப் பெறமுடியாது. ஒரு பழமொழி உண்டு, 'வடக்கே போன மேகமும், பறத்தையர் வீட்டுக்குப் போன செல்வமும் திரும்ப வராது'. சொல்லுக சொல்லை அச்சொல்லை பிறிதோர் சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து. கோபமோ, மகிழ்ச்சியோ எந்த உணர்வில் இருக்கும்போதும் நாம் சொல்லுகின்ற சொல் நம் மனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருத்தல் வேண்டும். வீண் பழியை உண்டாக்கும் சொற்கள் தவிர்க்கப் படவேண்டும். நம்மை மறந்த நிலையில் கூட நம் வாயில் பழிச்சொற்கள் வரக்கூடாது; அப்படி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக பேசுகின்ற போதே நல்ல சொற்களை மட்டுமே பேசிப் பழக்கப்படுத்திக் கொண்டால், விரும்பினால்கூட தீய சொற்கள் நம் வாயில் வராது. கெட்ட, தீய சொற்களைச் சொல்லாமல் விடுதல் நன்று.

77. சுழியா வருபுனல் இழியாது ஒழிவது.
ஆற்றில் புதுவெள்ளம் வருகிறது. அந்த புதுவெள்ளத்துக்கு வேகம் அதிகம். அதனை உணராமல் அந்த ஆற்று சுழலில் ஒருவன் இறங்கினால் அது அவனை மூழ்கடித்துவிடும். மனமும் ஒரு ஆற்றைப் போன்றதுதான். அது கோபம், ஆத்திரம் அடையும்போது, சுழன்று வரும் காட்டாற்று வெள்ளம் போல வேகமாக வரும். அப்படி நம்மை அறியாமல் அந்த கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் ஆட்பட்டு அதில் இறங்கிவிடுவோமானால் அது நம்மை அடித்துக் கொண்டு போய் மூழ்கடித்து விடும். இந்த ஆபத்தை உணர்ந்து செயல்படுதல் விவேகமான செயல்.

78. துணையோடு அல்லது நெடுவழி போகேல்.
வாழ்க்கையில் நாம் எந்த முடிவையும் எடுக்கும் முன்பாக நம்மீது உண்மையான அக்கறையும் பற்றும் உள்ள ஒருவரிடம் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வது நல்லது. எல்லா நேரங்களிலும் நம் மனம் சரியாக சிந்தித்து முடிவெடுக்கும் என நம்பமுடியாது. சில சந்தர்ப்பங்களில் நாம் தனித்து எடுக்கும் முடிவு தவறானதாகக்கூட இருந்து விடலாம். அதனால் ஏற்படும் விளைவுகள் நமக்குப் பாதகமாக அமைந்துவிடும். நெடுவழிப் பயணம் மேற்கொள்ள விருக்கிறோம். அப்படி நெடும்பயணம் போகும் போது வழியில் என்னென்ன இடையூறுகள் வரலாம், என்னென்ன தடைகள் ஏற்படும், ஆபத்துக்கள் வந்தால் எப்படி சமாளிப்பது போன்ற பலவற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எப்படியானாலும் தனித்து அவற்றைச் சமாளிப்பதைக் காட்டிலும் உடன் ஒருவன் துணையாக வந்தால் நம் பயணம் இனிதாக முடியும் அல்லவா. ஆகவேதான் நெடுவழியில் பயணம் செய்யும்போது ஒரு துணையையும் கூட்டிச் செல்வது நலம். அந்தப் பயணம் வாழ்க்கைப் பயணம் என்றால், வாழ்க்கைத் துணைவி, மனைவி துணையாக வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

79. புணை மீது அல்லது நெடும்புனல் ஏகேல்.
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நமக்குத்தான் நீச்சல் தெரியுமே என்று அதில் இறங்கிவிடக் கூடாது ஆற்று நீரின் வேகம் பொதுவாக ஆபத்தானதாக இருக்கும். ஆகவே ஆற்றைக் கடக்க படகு, பரிசல்  அல்லது தெப்பம் இவற்றைக் கொண்டு கடக்க வேண்டுமே தவிர நீந்திப் போய்விடலாம் என்று ஆற்றில் இறங்கிவிடக் கூடாது. எந்த வேலையில் இறங்கும் போதும் அதிலுள்ள சாதக பாதங்களைக் கணக்கிட்டு, பாதகமாக இருக்குமென்றால் அதற்குத் தேவையான பாதுகாப்புகளைப் பலப்படுத்திக் கொண்டு அந்த காரியத்தில் ஈடுபடவேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வு தேவை என்பதை இந்த வரி நமக்குக் கூறுகிறது.

80. எழில் ஆர்முலைவரி விழியார் தந்திரம்
இயலாதன கொடு முயல்வு ஆகாதே.

இது மிக முக்கியமான அறிவுரை. பொதுவாக ஆண், பெண் இருபாலரிலும் ஆண்களே, பெண்களைக் கண்டு மயங்கி, தன்வயம் இழந்து, புத்தி கெட்டு பொருந்தாத செயல்களைச் செய்யத் துணிபவர்கள். சபலம், அல்லது பெண்களின் அழகிய மார்பு, செவ்வரி படிந்த மயக்கும் கண்கள், சாகசமான பேச்சு இவற்றால் மதிமயங்கி செய்யக்கூடாதவற்றையும் செய்யத் துணிந்துவிடுவார்கள். இது உலக இயற்கை. இறைவன் படைப்பில் பெண்களுக்கு அத்தகைய சாகசத்தைக் கொடுத்து, ஆணுக்கு பலவீனத்தையும் கொடுத்து படைத்திருக்கிறான். அழகிய பெண்கள் என்பதற்காக, அவள் சாகசமாக இன்பம் தரும் சொற்களைக் கொஞ்சிக் கொஞ்சிச் சொல்கிறாள் என்பதற்காக ஏமாந்துவிடாமல் இருப்பவனே ஆண்மகன். ஒரு பெண்ணுக்கு மிகவும் சிரமமான காரியமொன்று ஆகவேண்டியிருக்கிறது. அவள் அடுத்த பெண்ணிடம் சொல்வாள், அதோ பார் அங்கு ஒரு அசடு, பெண்களைப் பார்த்து வழிந்து கொண்டிருக்கிறது. அதனிடம் சொன்னால் போதும் ஓடிப்போய் இந்தக் காரியத்தை செய்துமுடித்துவிட்டு வந்து நிற்கும், அதனிடம் சொல்லி இந்தக் காரியத்தை முடித்துக் கொள்ளலாம் என்பாள். புரிந்து கொண்டால் சரி! இதற்கு மேல் சொல்லி நமக்கு ஏன் வீண் வம்பு.

81. வழியே ஏகுக வழியே மீளுக.
எந்தவொரு செயலைச் செய்ய வேண்டியிருந்தாலும், அதற்குரிய நேர்வழியில் சென்று அந்தச் செயலை முடிக்க முயற்சி செய்தல் வேண்டும். எதற்கும் குறுக்கு வழி தேடக்கூடாது. நமக்கென்று சிலர் அமைவார்கள். இந்த செயலுக்கு ஏன் இப்படி அலைகிறாய், எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார், அவரிடம் சொன்னால் போதும் காரியம் முடிந்துவிடும் என்று குறுக்கு வழி காண்பிப்பார். வேண்டாம். எதையும் நேர் வழியில் சென்று சாதிப்போம். அதனால் கால தாமதம் ஆனாலும், செலவு ஆனாலும் பரவாயில்லை. ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு தேவை. அவசரமாகப் போக வேண்டியிருப்பதால் ஒரு பயண ஏஜண்டிடம் சென்று யார் பெயரிலோ பதிவான ஒரு டிக்கெட்டில் பயணம் செய்கிறோம். சில நேரங்களில் அந்த ஏஜெண்டே டிக்கெட் பரிசோதகரிடம் போட்டுக் கொடுத்து விடுவார். பாதி வழிப் பயணம் செய்கையில் அந்த பரிசோதகர் வந்து உன்னுடைய பெயர், முகவரி அனைத்தையும் துறுவித் துறுவிக் கேட்டு உண்மையை வரவழைத்து தண்டம் அழ வைத்துவிடுவார். தேவையா இந்த அவமானம். ஆகவே நேர்வழி செல்லுதலே வாழ்க்கையை நேர்மையாக நடத்தும் வழி. நம் போக்கும், வரத்தும் நேர்மையாக இருத்தல் அவசியம்.

82. இவைகாண் உலகிற்கு இயலாம் ஆறே.
இதுவரை எண்பத்தியோறு அறவுரைகளைப் பார்த்தோம். பிறருக்கு புத்திமதி சொல்வதி எளிது. அதனைப் பின்பற்றுவது மிகவும் கடினம். இருந்தாலும் சொல்லுவதைச் சொல்லி வைத்தால், கேட்பவர்கள் கேட்டுக் கொண்டு அதன் வழி நடக்கட்டும், இல்லையேல் விதிவிட்ட வழி, நாம் என்ன செய்ய முடியும் என்று வாய்மூடி இருக்கத்தான் வேந்தும். இவ்வுலகத்தில் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய நீதிகளை இதுவரை பார்த்தோம். கடைபிடித்தல் அவரவர்க்குரிய உரிமை.

83. வாழிய நலனே! வாழிய நலனே!!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதல்லால் வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர். அதுதான் எந்த இலக்கியமும் கூறும் சுப வாக்கியம் (ஸ்வஸ்தி வசனம்) . வாழி உலகம், வாழி மக்கள், வாழிய நலங்கள் எல்லாம்.

இதுவரை வெற்றிவேற்கை வாக்கியங்களைப் பார்த்தோம். நமக்குத் தெரிந்த வகையில் அதற்கு விளக்கங்களைக் கொடுத்தோம். பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி! வாழ்க!




வெற்றிவேற்கை (7)

வெற்றிவேற்கை (7)

இதுவரை 60 வரிகளுக்குப் பொருள் கண்டோம். இந்தப் பகுதியில் அடுத்த பத்து வரிகளுக்கு விளக்கம் பார்ப்போம். இதுபோன்ற நீதிகள் எந்தக் காலத்துக்கும் பொருந்துவதாக இருப்பதை கவனிக்க வேண்டும். நமது பண்டைய நீதிநூல்களை தொடர்ந்து விடாமல் படித்துக் கொண்டிருக்க வேண்டும். அந்தவொரு வாய்ப்பு இந்தப் பகுதிமூலம் நிறைவேறினால் மகிழ்ச்சியடைவேன்.

61. குன்றுடை நெடுங்காடு ஊடே வாழினும்
புல்தலைப் புல்வாய் புலிக்கு அஞ்சும்மே.

புல்வாய் எனும் சொல்லுக்குக் கலைமான் அதாவது Antelope என்பர். அந்து குன்றுகள் நிறைந்த அடர்ந்த காட்டில் பிறந்து அந்த சூழ்நிலையிலேயே வளர்கிறது கூட்டம் கூட்டமாய். அப்படி கொடிய மிருகங்கள் வாழும் காட்டைத் தன் பிறந்த இடமாகக் கொண்டிருந்த போதிலும் அந்த எளிய மான்கள் புலியைக் கண்டால் அஞ்சுகிறது. காரணம் மான்களுக்கு புலிதான் எதிரி. மான் எத்தனை வேகமாக ஓடித் தப்ப முயன்றாலும், புலி அதனினும் வேகமாக ஓடி குறிவைத்து ஒரு மானைப் பிடித்துக் கழுத்தைக் கடித்து உணவாகக் கொள்ளும் காட்சிகளை நாம் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறோம். மான் எளிய ஜீவன். புலி கொடிய மிருகம். அதற்காக மானைக் கோழை என்று சொல்ல முடியுமா? அதன் இயல்பு அது. புல்லைத் தின்று அமைதியாக வாழும் பிராணி. அதுபோல எளிய இயல்புடையோர் மிகவும் பாதுகாப்பாக இருந்த போதிலும், கொடிய மனிதர்களைக் கண்டு அஞ்சுவர். தீயவர்களைக் கண்டால், சாதுவான மக்கள் அஞ்சுவது இயற்கை.

62. ஆரையாம் பள்ளத்து ஊடே வாழினும்
தேரை பாம்பிற்கு மிக அஞ்சும்மே.

முந்தைய பாடலின் அதே கருத்தை வெறொரு எடுத்துக்காட்டு மூலம் விளக்க முயல்கிறார் இதில். தவளை வகையில் ஒன்று தேரை என்பது. மனிதரில் நோஞ்சானாக இருப்பவனைப் பார்த்து தேரை அடித்துவிட்டது என்பர். அவன் அப்படி உடல் ஒட்டி தேரை போல காட்சியளிப்பான். அந்தத் தேரை ஆழம் மிகுந்த கோட்டையைச் சுற்றிய அகழிகளில் வாழ்கின்றது. அங்கு யாரும் அத்தனை எளிதாக வந்துவிட முடியாது, அத்தனை பாதுகாப்பு உள்ள இடம், அப்படிப்பட்ட இடத்தில் தேரை வாசம் செய்கிறது. அப்படி பாதுகாப்பு இருந்தாலும் அந்தத் தேரை பாம்பைக் கண்டால் அஞ்சுகிறது. தீயவர் எங்கிருந்தாலும் மற்றவர்கள் அவர்களைக் கண்டு அஞ்சுவார்கள்.

63. கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்
கடும்புலி வாழும் காடு நன்றே.

பழைய திரைப்படங்களில் இந்த வசனத்தைப் பலமுறை கேட்டிருக்கிறோம். சில சந்தர்ப்பங்களை விளக்க இதுபோன்ற வரிகள் பயன்பட்டிருக்கின்றன. ஒரு நாட்டில் நீதியும் நேர்மையும் இருந்தால்தான் மக்கள் அமைதியாக அங்கு வாழ முடியும். தவறு நடந்தால் தண்டனை கிடைக்கும் என்கிற பயமும் இருக்கும். அப்படியில்லாமல் நீதிதவறிய மன்னன் கொடுங்கோலாட்சி செய்வானானால் அவன் நாட்டில் மக்கள் அமைதியில்லாமல் நித்திய கண்டம் பூர்ணாயுசு என்று வாழ்வார்கள். மக்கள் தாங்கொணா துன்பத்தை அனுபவிப்பார்கள். அப்படிப்பட்ட கொடுங்கோல் ஆட்சியில் வாழ்வதைவிட கொடிய புலிகள் வாழும் காடு வாழ்வதற்கு நல்லது என்ற முடிவுக்கும் வருவார்கள். கொடிய மிருகங்களைக் காட்டிலும், கொடுங்கோல் அரசர்கள் கொடியவர்கள்.

64. சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்
தேன்தேர் குறவர் தேயம் நன்றே.

எந்த ஊராக இருந்தாலும் அங்கு கல்வி, அறிவு, ஒழுக்கம் இவற்றில் சிறந்த, மக்களால் மதிக்கப்படுகின்ற சான்றோர் இருத்தல் வேண்டும். எந்தவொரு காரியமாயிருந்தாலும் அவர்களுடைய வழிகாட்டுதல், ஆலோசனை இவற்றோடு மக்கள் செயல்படுவார்களானால் அந்த ஊர் சிறப்புற்று விளங்கும். அப்படிப்பட்ட நாடே நல்ல நாடு; அறிவுசால் நாடு என போற்றப்படும். அத்தகைய பெரியோர்களோடு சார்ந்து இருப்பதால் அங்கு இருக்கும் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் கைகூடும். அப்படிப்பட்ட சான்றோர்கள், வாழிகாட்டி நடத்திச் செல்லும் பெரியோர்கள் இல்லாத நாட்டில் மக்களுக்குத் தீமைகளே விளையும். ஆகவே நற்சான்றோர் இல்லாத நாட்டில் வாழ்வதைக் காட்டிலும் தேன் எடுக்க அலைந்து கொண்டிருக்கும் காட்டுவாசிகள் வாழும் காடே சிறப்பாக இருக்கும்.

65. காலையும் மாலையும் நான்மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே.

அந்தணர் என்போர் அறவோர், மற்றெல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் என்றெல்லாம் பெரியோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அப்படி ஒருவன் அந்தணனாக வாழவேண்டுமானால் அவன் வேதங்களை முறையாக ஓதியும், அந்த வேதங்கள் காட்டும் நெறிமுறைகளையொட்டி வாழ்ந்து கொண்டும் இருத்தல் வேண்டும். வேதம் நான்கு. அவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம். இந்த வேதங்கள் பல கிளைகளைக் கொண்டவை. அவற்றைப் படித்து முடிக்க பல ஆண்டுகள் ஆகும். இந்த வேதங்களை முறையாக குருவால் கற்பிக்கப்பட்டு அதனை மனனம் செய்து, அதாவது காதால் கேட்டு மனதில் பதித்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படும். வேதங்கள் எழுத்தில் வடிக்கப்படாதவை. ஆகையால் இதனை கற்கும் காலத்தில் காலையில் எழுந்ததும் ஒரு முறை, மாலையில் ஒரு முறை அதனை மனனம் செய்து வாய்விட்டு ஒப்பித்தல் வேண்டும். அப்படி வேதங்களைப் படிக்காதவன் இருவேளைகளிலும் வேதங்களை ஓதாதவன் அந்தணனே அல்ல, அவர்கள் நெல்லுக்கிடையே புகுந்து கிடக்கும் பதர் போன்றவர்கள்.

66. குடிஅலைத்து இரந்து வெங்கோலோடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே.

ஒரு நாட்டின் அரசன் என்பவன் அந்த நாட்டுக் குடிமக்கள் உயிர்கள் என்றால், மன்னன் உடலாக இருத்தல் வேண்டும் என்று கம்பர் தன் இராமகாவியத்தில் தசரதனைப் பற்றி குறிப்பிடுவார். உயிரெல்லாம் உறையும் உடம்பும் ஆயினான் என்கிறார். அப்படிப்பட்ட அரசனே செங்கோல் பிடித்த அரசன். மாறாக மக்களை துன்புறுத்தி, அவர்கள் இன்ப துன்பங்களைக் கணக்கில் கொள்ளாமல் அநியாய வரிவிதித்து அவர்களைத் தவிக்க விட்டு, கட்டாயமாகப் பொருட்களை அபகரித்துக் கொள்ளும் அரசன் முடியரசன் அல்ல, அவன் ஒரு மூர்க்கன். அத்தகைய மன்னனும் நெல்லுக்கிடையே இருக்கும் பதர் போன்றவனே. அரசன் மக்களின் மனங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றவன்; மக்களின் மகிழ்ச்சியே மன்னனின் மகிழ்ச்சி என இருப்பவன் நல்ல அரசன், மூர்க்கர்கள் அரசாண்டால் அவர்கள் பதர் போன்றவர்கள்.

67. முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து
அதன்பயன் உண்ணா வணிகரும் பதரே.

மக்களுக்குத் தேவையான பண்டங்களை கொள்முதல் செய்து, முதலீடு செய்து, அவற்றை மக்கள் உபயோகத்துக்காக விற்பனை செய்வது வணிகரின் தொழில். அப்படி வாணிபம் செய்ய முதலீடு தேவை. முதல் இல்லாமல் வியாபாரம் செய்ய முடியுமா? அப்படி தொழிலில் ஏராளமாக முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து தானும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து, மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருத்தல் ஒரு வணிகனின் கடமை. நேர்மையான வாணிபத்தில் வரும் லாபத்தில் மகிழ்வோடு வாழும் வணிகன் நல்ல வணிகன். அப்படி இல்லாமல் நேர் மாறான முறையில் நடந்து கொள்பவர்கள் வணிகரில் பதர் போன்றவர்கள்.

68. வித்தும் ஏரும் உளவாய் இருப்ப
எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே.

ஒரு விவசாயிக்கு என்னென்ன வேண்டும். உழுது பயிரிட சிறிது நிலம் வேண்டும். உழவுத் தொழிலுக்கு ஏர் வேண்டும். நிலத்தை உழுதபின் விதைக்க விதைகள் வேண்டும். அங்கு பயிர் முளைத்தபின் அவனுடைய உழைப்பு வேண்டும். இத்தனையும் செய்தபின் அவனுக்குக் கிடைக்கும் பலன் அவன் சுகமாக வாழ வகுத்துக் கொடுக்கும். ஆனால் நிலமிருந்தும், ஏரும் விதை நெல்லும் இருந்தும் உழைக்க பயந்து, சோம்பேரியாய் தூங்கி தானும் கெட்டு சமூகத்தையும் கெடுக்கும் உழவன் நெல்லினுள் பதர் போன்றவன்.

69. தன் மனையாளைத் தாய் மனைக்கு அகற்றிப்
பின்பு அவள் பேணாப் பேதையும் பதரே.

ஆண் ஒரு வீட்டிலும், பெண் ஒரு வீட்டிலும் பிறந்து, பின்னர் அவர்கள் வளர்ந்து மணப்பருவம் எய்தியபோது இரு வீட்டாரும் திருமணம் பேசி இவ்விருவருக்கும் திருமணம் செய்துவைத்தபின் அவர்கள் கணவன் மனைவியாக ஒரே வீட்டில், நல்லது கெட்டது அனைத்தையும் பங்கிட்டுக் கொண்டு வாழ்தலே மண வாழ்க்கை. மாறாக ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை நரகமாக ஆக்கிக் கொண்டு பொழுது விடிந்தால் போதும் யுத்தம் என்று இவ்விருவர்க்குள்ளும் எப்போதும் அண்டை அயலார் பார்த்து நகைக்கும்படியாக சண்டை செய்துகொண்டு, பின்னர் மனைவியை அவள் பிறந்த வீட்டுக்குத் துரத்திவிட்டு, அவளை ஏறெடுத்தும் பாராமல் இருக்கும் பேதை சமூகத்தில் ஒரு பதரே.

70. தன் மனையாளைத் தனிமனை இருத்திப்
பிறர்மனைக்கு ஏகும் பேதையும் பதரே.

கணவன் மனைவி இருவரும் ஒத்த கருத்துடன் கூடி இன்பமாக வாழ்தலே குடும்ப வாழ்க்கை. காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பமாகும். அப்படிப்பட்ட இன்பமான இல்லற வாழ்க்கையை நரகமாகத் தாங்களே ஆக்கிக் கொள்ளும் சில மனிதர்களும் இருக்கிறார்கள். கண்ணுக்கு அழகான மனைவி இல்லத்திருக்க, பார்க்கச் சகிக்காத பெண்ணானாலும் அயலொருவன் இல்லாள் மீது மோகம் கொண்டு அவள் வீடே கதியென்று கிடக்கும் வீணனும் சமூகத்தில் ஒரு பதரே.

வெற்றிவேற்கை (6)


வெற்றிவேற்கை (6)

ஐம்பதைத் தாண்டிவிட்டோம். அறுபதின் வரிகள் நாம் அதிகம் கேள்விப் படாதவை. இவ்விலக்கியத்தின் ஒருசில வரிகள் நன்கு பரிச்சயமானவைகள், பல நாம் கேள்வியே பட்டிராதவை. அவைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான செய்திகளை மாற்றி மாற்றி சொல்வதாக இருந்தாலும், ஒரு கருத்தை வலியுறுத்த வேண்டுமானால் அதனை ஒருமுறைக்குப் பலமுறை சொல்ல வேண்டியிருக்கிறது. அதனால்தானோ என்னவோ, ஒரு சில கருத்துக்கள் மீண்டும் மீண்டும் இங்கு வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இனி ஐம்பத்தியொன்று முதலான பத்து வரிகளைப் பார்ப்போம்.

51. சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்.
நேற்று செல்வச் செழிப்பில் மாட மாளிகையில், தங்கத் தாம்பாளத்தில் பாலன்னம் சாப்பிட்டு வளர்ந்த செல்வர் இன்று வெறுந்தரையில் படுத்து வெட்ட வெளியில் நீலவானத்தில் நீந்துகின்ற வெண்ணிலவைப் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விடுவதை பார்த்துத்தானே இருக்கிறோம். காலம் ஒரு சக்கரம் என்பதைப் பார்த்தோம். அது மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் சுற்றும்போது இப்படிப்பட்ட குழப்பங்கள் நேரத்தான் செய்யும். பாலும், தேனும் அருந்தி பஞ்சபரமான்னம் எனச் சொல்லப்படும் விருந்தினைச் சுவைத்தவர்கள் அன்னசத்திரத்தின் வாயிலில் நிற்கும் ஆண்டிகள் வரிசையில் நிற்கும் காலமும் வந்திருக்கிறது, இனியும் வரும். இந்த உண்மையை, படைப்பின் ரகசியத்தைப் புரிந்து கொண்டால் மனம் இடியைக்கூடத் தாங்கும், இல்லையேல் உடைந்து சுக்கு நூறாகிவிடும். வாழ்க்கை என்பது ஒரு சில ஆண்டுகள் இந்த பூமியில் வந்து பிறந்து மறைந்து போவது. அதில் ஏற்றமோ, இறக்கமோ எதுவும் வரலாம்; அத்தனைக்கும் மனத்தினைத் திடப்படுத்திக் கொண்டவன் வாழ்வு எதனாலும் பாதிக்கப்படாது. இருக்கும்வரை அறவழியில் நல்லவைகளையே நினைந்து, நல்லவைகளையே செய்து முடிவதே மேல். மகாகவி பாரதி சொன்னது போல் "எண்ணிய முடிதல் வேண்டும், நல்லதே எண்ணல் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல் அறிவு வேண்டும், பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போல நசித்திடல் வேண்டும்" என மனத் தெளிவு பெறுவோம்.

52. அறத்து இடு பிச்சை கூவி இரப்போர்
அரசோடு இருந்து அரசு ஆளினும் ஆளுவர்.
பிச்சை எடுப்பது என்பது அனைவரும் செய்யும் ஒரு செயலே. இது ஏதோ தெருவில் இரந்துண்போர் வயிற்றுப் பசிக்கு அன்னமிட வேண்டி குரல் கொடுக்கும் பிச்சை மட்டுமல்ல. மனிதனின் ஒவ்வொரு நிலையிலும் பிறரிடம் ஏதோவொன்றுக்குக் கையேந்தி பிச்சை எடுப்பது என்பது நமக்கெல்லாம் நடைமுறை வாழ்க்கையாகிவிட்டது. இவை எதுவுமே இல்லையென்றால் கடவுளிடம் போய் கையேந்தி பிச்சை கேட்பது என்பது நிலைபெற்றுவிட்டது. இறைவன் என்பவன் பரம்பொருள். அவனிடம் கையேந்தி எனக்கு இதைக் கொடு, அதைக்கொடு, நான் தேர்வில் வெற்றி பெற அருள் கொடு, உடல் நலம் தேற வரம் கொடு, அடுத்தவன் கெட சாபம் கொடு என்றெல்லாம் பிச்சை எடுப்பதும் நடந்து கொண்டிருக்கத்தான் செய்கிறது. ஒரு அரசன் காட்டிற்கு சென்றவிடத்தில் ஒரு மகான் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு அவரைத் தன் நாட்டிற்கு அழைத்து வந்தான். அவருக்குத் தேவையானதைத் தான் தருவதாகச் சொல்லி அவரை தன் அரன்மனையில் உட்காரவைத்துவிட்டு, சற்று இருங்கள் இறைவனை வணங்கிவிட்டு வருகிறேன் என்று மண்டியிட்டு வேண்டத் தொடங்கினான். இறைவா! நான் இவர் போன்ற மகான்களுக்கு உதவிட எனக்கு நல்ல மனத்தைக் கொடு, என் நாடும் மக்களும் நல்வாழ்வு வாழ வரம் கொடு, என் செல்வம் மேலும் பொங்கிப் பெருக ஆசி கொடு என்றெல்லாம் இறைஞ்சினான். மகான் எழுந்து நடக்கத் தொடங்கினார். அரசன் ஓடிப்போய் ஏன் ஐயா என்னிடம் எதையும் பெற்றுக் கொள்ளாமல் போகிறீர்களே என்றான். தவசி சொன்னார், ஐயா பிச்சைக்காரனிடம் நான் எதையும் பெற்றுக் கொள்வதில்லை என்றார். மன்னனுக்குச் சுரீரென்று வலித்தது. தான் இதுவரை இறைவனிடம் பிச்சை கேட்டதை இவர் இப்படிச் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான். இறைவனுக்குத் தெரியாதா, நாம் பிச்சை கேட்டா நமக்கு நன்மைகளைச் செய்ய வேண்டும். நாம் நல்வழியில் நடந்தால் அவனுக்கு எப்போது எதைத் தருவது என்பது தெரியும் அல்லவா? பிச்சை யெடுத்துத் தெரித்தெருவாக அலையும் நபர்கூட ஒரு நாள் அரண்மனையில் கோலோச்சும் காலம் வந்தாலும் வரும், அதுவும் இந்த ஜனநாயக நாட்டில் அந்த அதிசயம் நிச்சயம் நடக்கும், இதைத்தான் இந்த வரிகள் சொல்கின்றன.

53. குன்று அத்தனை இருநிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்.
மலைபோன்ற மாபெரும் செல்வத்துக்கு அதிபதி. இருந்த இடத்திலேயே ஒரு தொலைபேசி மூலம் வியாபாரம் பேசி ஒரே நாளில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் ஆற்றல் படைத்தவன். ஒரே நாள், ஒரே ஒரு நாளில் அவனுடைய அத்தனை செல்வங்களையும் இழந்து ஓட்டாண்டியாக ஆனான் என்றால் நம்பித்தான் தீரவேண்டும். அதுதான் உலக நியதி. ஒரு பெரிய செல்வந்தர். மிகப் பெரிய நிறுவனங்களின் அதிபதி. கோடி கோடியாய் சொத்து. இத்தனை சுகங்கள் இருந்தும் உள்ளத்தில் ஒரு அரிப்பு. சூதாட்டம்! எதை வைத்து சூதாடலாம். தருமபுத்திரனாக இருந்தால் சகுனியோடு சூதாடலாம். இவரோ தொழிலதிபர். தான் உருவாக்கிய உருப்படியான தொழிலில் கவனம் செலுத்தாமல் ஒரு விளையாட்டில் கவனம் செலுத்தி, அதை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஏற்று நடத்தினார். அவருக்கு ஒரு நெருங்கிய உறவினன். அவனும் செல்வந்தன். இருக்கிற செல்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது. சூதாடினால் என்ன? ஆடினான், வீழ்ந்தான், பின்னர் சொன்னான் கோடி கோடியாய் சூதில் இழந்தேன் என்று. இல்லையா பின்னே! சூதில் கோடி கோடியாய் சம்பாதித்ததாய் யாராவது சொல்லி இருக்கிறார்களா? அப்படியே சூதில் வந்த செல்வம் நிலைத்து நிற்குமா, வீழ்ச்சி அடையாதா? ஒரே பகல் போதும், இமயம் போன்ற செல்வத்தை இழந்து அன்றே அவர் கதையும் முடியும் நிலைமை ஏற்படலாம். சொல்லவும் மனம் கூசுகிறது, நெஞ்சம் சுடுகிறது, என்ன செய்வது உண்மை சுடத்தான் செய்யும்.

54. எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்குக்
கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும்.
உலகம் மெச்ச வானை முட்டும் மாட மாளிகையில் சப்பரமஞ்சக் கட்டிலில் படுத்துறங்க, சேடியர்கள் சாமரம் வீச, உல்லாசமாக வாழ்ந்த இடம் அது. இன்று கழுதைகள் மேயும் கட்டாந்தரையாக போய்விட்டதே என்று ஊரார் கண்ணீர் சிந்த இடிந்து கிடக்கிறது. ஒன்றா இரண்டா, இதுபோன்ற பாழ் மனைகள். ஏன், இந்த நிலைமைக்கு என்ன காரணம். சிந்தித்துப் பார்த்தால் உண்மை புரியும். இருக்கும் காலத்தில் பிறரை நினைக்கத் தவறிவிட்டோம். இல்லாத காலத்தில் எல்லோருமே கண்ணுக்குத் தெரிகிறார்கள். என்ன பயன்? பூமியில் வாழ்வாங்கு வாழ நினைத்திருந்தால், அறவழியில் தான் உண்ணும் உணவில் ஒரு பகுதியை இல்லாதவனுக்குக் கொடுப்போம், உழைப்பவன் வியர்வை உலருமுன்னே அவனுக்கு உரிய கூலியை உடனே கொடுப்போம், கட்ட துணியில்லாதவனுக்கு நம்முடைய பழைய கிழிந்த உடைகளையாவது கொடுப்போம் என்று செல்வத்தை பகிர்ந்து கொண்டிருந்தால் இன்று வறியவனின் வறுமையைப் பகிர்ந்து கொள்ளும் நிலைமை வந்திருக்காதே. இடிந்த மாளிகைகள் சொல்லும் கதைகளைக் கேட்கும் சக்தி நமக்கிருந்தால் சுவையான கதைகள் பல நமக்குத் தெரிய வந்திருக்கும். கோபுரங்களும் ஒரு நாள் மண் மேடாகும், மண் மேடும் ஒருநாள் மாளிகையாக மாறும் என்பது உலக நியதி.

55. பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து
நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்.
தூரத்தில் இடிந்து செங்கல் மேடாகத் தெரியும் அந்த இடம் ஒரு காலத்தில் ஜமீன்தார் ஒருவரின் மாட மாளிகை. அதனருகில் இப்போது பளிச்சென்று தெரியும் பலமாடி மாளிகை முன்பு மண்மேடாக இருந்த இடம். இங்கு முன்பு கழுதைகளும், மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. இப்போது இந்த இடம் வளர்ந்து வரும் வேகத்தையும், செல்வச் செழிப்பையும் பார்த்தால் இங்கு வைர வளையல்கள் அணிந்த பெண்களும், வீரம் செறிந்த வாலிபர்களும், நெல்குவியல்களுக்கிடையே செழிப்போடு வாழும் இடமாக மாறிக் கொண்டிருப்பது தெரிகிறது. இதுதான் உலக இயற்கை.

56. மணஅணி அணிந்த மகளிர் ஆங்கே
பிணஅணி அணிந்து தம் கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை கோடி ஆக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.
தீ என்று சொன்னால் நாவைச் சுடவா போகிறது. மனித வாழ்க்கை நிலையற்றது. எப்போது எது நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. மங்களங்களைச் சொன்னால் மனம் இனிக்கிறது. அமங்கலத்தைச் சொன்னால் மனம் அதிர்கிறது. சோழன் அனபாயன் காலத்தில் சோழநாடு வளம் மிக்கதாய் இருந்தது. தானியங்கள் ஏராளமாக விளைந்து செல்வம் நெற்குவியல்களைப் போல குவிந்து கிடந்தது. மக்கள் ஜீவக சிந்தாமணி இலக்கியத்தைப் படித்து, மணநூல் என மகிழ்ந்து ஜீவகன் எத்தனை திருமணம் செய்து கொண்டான் என்று கேட்டு மகிழ்ந்திருந்தார்கள். மன்னன் பார்த்தான், மனம் வருந்தித் தன் அமைச்சர் சேக்கிழார் பெருமானிடம் சொன்னான், மக்கள் இப்படி வீண் பொழுது போக்காமலிருக்க நல்ல இலக்கியங்களைப் படிக்கக் கூடாதா என்று. அவர் சொன்னார் திருக்குறள் ஒன்று போதும் நீதிகளை போதிக்க, ஆனால் மக்கள் இன்ப சாகரத்தில் மூழ்கி, செல்வச் செழிப்பில் கதை கேட்கும் மனநிலையில் இருக்கின்றனரே என்றார். மன்னன் அப்படியானால் நல்வழிப்படுத்தும் கதைகளை நீங்களே எழுதுங்கள் என்றான். பெரியபுராணம் எனும் திருத்தொண்டர் புராணம் உருவானது. அதுபோல மகிழ்ச்சி, மங்களம், செல்வம், சுபம் என்றே கேட்டு பார்த்து வாழ்ந்த மக்கள் சற்று மறுபக்கத்தையும் பார்க்கத்தான் வேண்டும். தன்னுடைய திருமண உடைகளும், அணிகளும் அணிந்த பெண்ணின் மணவறையேகூட சில நேரங்களில் மணமகன் இறந்துவிட அது பிணவறையாக மாறும் செய்திகளைக் கேட்டிருக்கிறோம். திருமண ஆடையே கைம்பெண் உடுத்தும் கோடியாகவும் ஆக வாய்ப்பு ஊண்டு. திருமணத்துக்காக அலங்கரிக்கப்பட்ட அவளுடைய கூந்தலை விரித்துப் புலம்பவும் செய்வர். ஆக எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பதை உணர்வது வாழ்வின் தத்துவத்தைப் புரிந்து கொள்வதாகும்.

57. இல்லோர் இரப்பது இயல்பே இயல்பே.
ஏன் பிச்சை எடுக்கிறாய் என்று பல நேரங்களில் பிச்சைக்காரர்களை நாம் கேட்கிறோம். தன்னிடம் இல்லை பிச்சை கேட்கிறேன் என்பான் அவன். இல்லாதவன் பிச்சைக் கேட்பதில் என்ன அதிசயம். இருப்பவன் கேட்டால் அதுதான் உன்னிடம் இருக்கிறதே எதற்காகக் கேட்கிறாய் என்போம். இல்லாதவன் கேட்டால் உன்னிடம்தான் இல்லையே இதை வாங்கி என்ன செய்யப் போகிறாய் என்போம்.

58. இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே.
தன்னிடம் இல்லை என்பதால் ஒருவன் வந்து நம்மிடம் பிச்சை கேட்கிறான். அது நம்மிடம் இருந்தால் நமக்குப் போக மிகுதியை அவனுக்குக் கொடுப்பதுதானே முறை. உனக்குத்தான் உடலில் தெம்பு இருக்கிறதே உழைத்தால் என்ன என்று பலரும் கேட்பர். இருந்தால் கொடுப்போம், இல்லையென்றால் இல்லை என்று பதில் சொல்லிவிடுவோம். எதற்காக அவனிடம் விவாதம். இல்லாதவன் கேட்டால் மனமும் இருந்து பொருளும் இருந்தால் கொடுப்போம், அப்படிக் கொடுப்பது நம் கடமை.

59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
எல்லாம் இல்லை இல் இல்லோர்க்கே.
ஒருவனுக்கு மனம் கோணாமல் நடந்து கொள்ளும் நல்ல குணவதி மனைவியாக அமைந்திருக்கிறாள். வீட்டில் எந்த குறையும் இல்லாமல் இல்லறம் நடத்துகிறாள். கணவனின் குணம் அறிந்து நடந்து கொள்கிறாள். விருந்தினரை முகம் கோணாமல் உபசரித்து அனுப்புகிறாள். இல்லம் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் கணவனைப் பார்த்துக் கொள்கிறாள் என்றால் அவன் எல்லா நன்மைகளையும் பெற்றவனாக இருப்பான். அத்தகைய சிறப்புக்கள் எதுவும் இல்லாதவள் ஏறுக்கு மாறாக நடந்து கொண்டு, சதாசர்வ காலமும் கணவனிடமும் குடும்பத்தாரிடமும் பூசலிட்டுக் கொண்டிருப்பவள் மனைவியாக அமைந்து விட்டாலோ கேட்கவே வேண்டாம், அவன் எல்லாம் பெற்றிருந்தும் ஒன்றும் இல்லாதவனே. ஆகவே 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'.

60. தறுகண் யானை தான்பெரிது ஆயினும்
சிறுகண் மூங்கில் கோற்கு அஞ்சுமே.
யானை மிகப் பெரிய மிருகம். அருகில் செல்லக்கூட அஞ்சுவர். கோயில்களில் அந்த யானையை நிறுத்திக் கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம் அதை பிச்சை எடுக்க வைத்துக் கொண்டிருப்பர். அத்தனை பெரிய யானை முடியாது என்று மறுத்துவிடலாமே. அப்படிச் செய்வதில்லை, அந்தப் பாகன் கையில் வைத்திருக்கும் அந்தச் சிறு மூங்கில் குச்சியைக் காட்டி அவன் சொல்வதை யெல்லாம் அந்தப் பெரிய யானை அடிபணிந்து செய்துகொண்டிருக்கிறது. ஒரு ரூபாய் காசை வாங்கிக் கொண்டு காசு கொடுத்தவன் தலையில் தன் துதிக்கையை வைத்து ஆசிர்வதிக்கிறது. மூங்கில் கோலை வைத்துக் கொண்டு அதை ஏவிக் கொண்டிருப்பவனை அது ஒன்றும் செய்வதில்லை.

இந்த 6ஆம் பகுதியை எழுதும்போது மனம் வலிக்கிறது. அமங்கலமான செய்திகளைச் சொல்லி நியாயங்களை இப்படிக் குரூரமாகச் சொல்லியிருக்க வேண்டாம். என்ன செய்வது, தமிழிலக்கியம் ஆயிற்றே! உள்ளதை உள்ளபடி சொல்லிவிடுவோம் என்று சொல்லியிருக்கிறேன், மனக் கிலேசத்துடன்.







Sunday, June 9, 2013

வெற்றிவேற்கை (5)

வெற்றிவேற்கை (5)

இது ஐந்தாவது பகுதி. நாற்பத்தியொன்று முதல் ஐம்பது வரையிலான வரிகளுக்கு விளக்கங்களைப் பார்ப்போம். இந்த விளக்கங்கள் எவரொருவர் எழுதியதின் மறுபதிப்பும் இல்லை. ஆகவே படிக்கும் அன்பர்களுக்கு வேறு நல்ல விளக்கம் தோன்றினாலும் எழுதி அனுப்புங்களேன்!

41. யானைக்கு இல்லை தானமும் தருமமும்.
ஒருவனைப் பார்த்து, இவனுக்குக் கை நீளம் என்று சொன்னால் என்ன பொருள்? அவன் திருடுவான் என்பது பொருள் அல்லவா? ஆக கை நீளமாக இருந்தால் திருடுவான் என்பதோ, அல்லது தான தருமங்கள் செய்வான் என்பதோ அல்ல. கை நீளம், கை குட்டை இவற்றுக்கும் அவனுடைய செயல்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. யானைக்குத் துதிக்கை நீளம். அதனால் அது தானங்களையும் தருமங்களையும் வாரி வாரி மற்றவர்க்குச் செய்கிறதா? இல்லையே! அது போல ஒருவன் கொடுக்கும் தன்மை உடையவனைப் போல வெளியில் தோன்றினாலும், அல்லது அப்படியொரு தோற்றத்தை உண்டாக்கி வைத்திருந்தாலும், அவன் உண்மையில் தான தருமம் ஆகிய அறச் செயல்களில் ஈடுபடாதவனாக இருக்கலாம். வாயால் பேசுகையில் அவன் வானளாவ பேசினாலும், அவனது ஈகை ஒருவழிப் பாதையாகத்தான் இருக்கும், அதாவது வருமானத்தை மட்டும் குறிவைத்திருப்பான், அவன் கையிலிருந்து எதையும் பிறருக்குத் தர மாட்டான். அப்படியும் பலர். ஒருவனது புறத் தோற்றம் செயல்கள் இவற்றைக் கொண்டு அவனது ஈகைக் குணத்தைக் கண்டுபிடிக்க முடியாது.

42. பூனைக்கு இல்லை தவமும் தயையும்.
இப்படியொரு சொல்லடை வரக் காரணம் என்ன? ஞானியர்கள், தவசியர்கள் ஆகியோர் கண்களை மூடி தனியிடத்தில் தியானத்தில் ஈடுபட்டிருப்பர். அப்படிப்பட்டவர்களின் மனம் இறைவன் மீது படிந்திருக்கும். புறவுலக நடவடிக்கைகளிலோ, அல்லது சுற்றிலும் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிகளிலோ கவனம் கொண்டிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் அறவழியினைப் பின்பற்றுபவர்களாவும், எவ்வுயிரும் தன்னுயிர் போல் போற்றுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் பூனையைப் பாருங்கள். அது உட்கார்ந்திருக்கும்போது கண்களை மூடி தியானத்தில் இருப்பது போலக் காட்சியளித்தாலும் அது தியானத்திலா இருக்கிறது? ஞானியர், தவசியர் மனங்களைப் போல அந்தப் பூனையின் மனதில் தயை, இரக்கம், கருணை இவைகளா குடிகொண்டிருக்கின்றன? எதைத் திருடலாம், எந்தப் பொருளை பிறர் ஏமாந்த சமயம் கவர்ந்து கொள்வது என்பது பற்றியும், சின்னக் குருவி, கிளி போன்ற பறவைகள் ஏமாந்த சமயம் தயை இன்றி அவற்றைப் பிடித்து உண்ணவும் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் அந்த பூனை. மனிதருள்ளும் இப்படிப்பட்டவர் இருக்கலாம், அதனால் அத்தகையோரிடம் எச்சரிக்கை உணர்வோடு இருப்பது நலம்.

43. ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்.
உலகில் பிறப்பு இறப்பு, ஆன்மா, உயிர், பரம்பொருள் என்று வாழ்வின் உண்மைகளை உணர்ந்தவன் ஞானி. அப்படிப்பட்ட ஞானிகள் இவ்வுலகில் ஏராளமாகக் கிடைக்கும் புற இன்பங்களில் நாட்டம் இருக்காது. அது போலவே எதிர்கொள்ளும் துன்பங்களாலும் மனம் வாடுவதில்லை. இதெல்லாம் இருளும், பகலும் போல இன்பமும் துன்பமும் அடுத்தடுத்து வரும் செயல்கள் என்பதை உணர்ந்து இரண்டுக்கும் தன்னை அலட்டிக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட ஞானியர்க்கு இன்பம் என்றும் ஒன்றும் கிடையாது, துன்பங்களும் அவன் உணர்வதில்லை.

44. சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும்:
சிதல், சிதலை ஆகிய சொற்களுக்குக் கரையான் என்று பொருள். இந்தக் கரையான் கூட்டம் கூட்டமாக ஒரு பொருளின் மீது மண்ணால் கூடு அமைத்து அதனுள் இருக்கும் பொருளைச் சிறுகச் சிறுக அரித்துத் தின்றுவிடும். அது தான் அரித்துத் தின்று கொண்டிருக்கும் பொருள் செல்வந்தர் வீட்டுப் பொருள் என்றோ, வறியவன் ஒருவனது உடைமை என்றோ புரிந்து கொண்டா அதன் செயலைச் செய்கிறது. கரையான்களுக்கு அது அரித்துத் தின்னும் பொருள்தான் முக்கியமே தவிர, அது யாருடையது என்பதல்ல, அல்லவா? கீழ்மக்கள் இருக்கிறார்களே அவர்களும் அந்தக் கரையானைப் போன்றவர்கள்தான். ஒரு பெரும் பணக்காரன் காரில் வைத்துவிட்டுப் போன வைர, தங்க நகைகளை மெள்ளக் கிளப்பிக் கொண்டும் போகிறான். வறியவன் ஒருவன் தன் மகள் திருமணத்துக்காக கடன் வாங்கி வந்த பணத்தையும் திருடிக் கொண்டு போகிறான். செல்வந்தன் போட்டுக் கழற்றிய பட்டு வேட்டியையும் அது தின்றுவிடும், ஏழையின் எளிய கிழிந்த ஆடையையும் அது அரித்துத் தின்றுவிடும். அதற்கு அந்த வேற்றுமைகள் கிடையாது. அது போல இழிந்தவனுக்கும் செல்வந்தரா, வறியவனா, பெருமை உடையவனா, இளைத்தவனா என்பது பொருட்டல்ல. மனிதருள் கரையான்கள் அவர்கள்.

45. முதலைக்கு இல்லை நீத்தமும் நிலையும்.
நீர்நிலைகளில் அமிழ்ந்து தன்னை மறைத்துக் கொண்டும், கரையில் காணமுடியாத இடத்தில் மறைந்தும் வாழும் பிராணி முதலை. கொடுமையான விலங்கு. தான் வந்து தங்கியிருக்கும் இந்த நீர்நிலை ஆழமானதா, அல்லது ஆழமில்லாத இடமா என்பதெல்லாம் அதற்குப் பொருட்டல்ல. அதற்கு வேண்டியது நீர் நிலைகள் அவ்வளவே. தீயவர்களும் அப்படித்தான். அவர்களுக்கு இந்தச் செயல் செய்யத் தக்கது, இவை செய்யத் தகாதவை என்ற பாகுபாடே கிடையாது. எந்தக் கொடுமையான செயலையும் ஈவு இரக்கமின்றி செய்து முடிப்பவர்கள் அவர்கள்.

46. அச்சமும் நாணமும் அறிவிலார்க்கு இல்லை.
பகுத்துணர்ந்து பார்த்து இவை நல்லவை இவை தீயவை என்பதை உணராதவர்கள் மூடர்கள். பகுத்தறியும் அறிவு அவர்களுக்குக் கிடையாது. ஒரு செயலைச் செய்வதால் தங்களுக்கு பழிபாவம் வந்து சேரும் என்பதையெல்லாம் எண்ணிப் பார்ப்பது கிடையாது. பிறர் செய்ய நாணும் காரியங்களையும் அறிவில்லாதவர்கள் கண்மூடித் தனமாகச் செய்துவிடுவார்கள். அவர்களுக்கு ஏது அச்சமும் நாணமும்.

47. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை.
பண்டிகை தினங்கள் ஊரே கோலாகலமாகக் கொண்டாடுகின்ற நேரம். விதவிதமான உணவு வகைகள். புத்தாடைகள். உறவும் நட்பும் கலந்து பேசி மகிழும் காட்சிகள். இவைகள் பொதுவாக மக்கள் மத்தியில் விசேஷ தினங்களில் கடைப்பிடிக்கும் வழிகளாகும். ஆனால் உடல் நலம் குன்றி நலிந்தவர்களோ அல்லது ஏழ்மையின் பிடியில் கட்டுண்டு கிடக்கும் நலிந்த மக்களோ இதுபோன்ற திருவிழா, பண்டிகை நாட்களில் அப்படியெல்லாம் கொண்டாடவும், மனம் மகிழவும் வழியில்லாதவர்களாக இருப்பதால், அவர்களுக்கு எந்த நாளும் ஒரே மாதிரியான நாளே. விழாவும், பண்டிகையும் அவர்களுக்கு எந்த வகையிலும் மகிழ்ச்சி தருவதில்லை.

48. கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.
கேள் என்பது உறவையும் நட்பையும் குறிக்கும் சொல். கிளை என்பது சுற்றத்தாரைக் குறிக்கும். பொதுவாக மனிதர்களுக்கு உறவினர்களும், நண்பர்களும் இருப்பார்கள். நன்மை தீமைகளில் பங்கு கொள்பவர்கள் இவர்கள். அவசரம் என்றால் கைகொடுத்து உதவுபவர்கள் இவர்கள். கிளை என்றால் சுற்றம். சுற்றத்தார் எண்ணிறந்த பேர் இருப்பர். ஒரு விசேஷ காரியம் என்றால் சுற்றத்தார் வந்து சூழ்ந்து கொள்வார்கள். ஒருவன் நன்றாக, வசதியோடு வாழ்ந்து வரும் வரை இதுபோன்ற உறவும், சுற்றமும், நட்பும் நம்மைச் சுற்றி இருந்து கொண்டிருப்பார்கள். மாறாக நன்றாக வாழ்ந்தவன் வீழ்ந்து விட்டாலோ, நல்ல நிலைமை மாறி வறியவனாக மாறிவிட்டாலோ, ஒருத்தன் கிட்டே நெருங்க மாட்டான். திரும்பிக்கூட பார்க்க மாட்டான். அதனால்தான் சொல்கிறார், வாழ்ந்து கெட்டவனுக்கு கேளிரும் இல்லை, கிளைகளும் இல்லை என்று.

49. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா.
வாழ்க்கையை சக்கரத்துக்கு ஒப்பிடுவர். நாற்பது ஆண்டு காலம் வாழ்ந்தவனுமில்லை, நாற்பதாண்டுகள் தாழ்ந்தவனுமில்லை என்றொரு பழமொழி நம் ஊர்களில் சொல்வதுண்டு. உடைமை என்பது செல்வம், ஒருவனுக்கு உடைமையானவை. வறுமை என்பது அப்படிப்பட்ட செல்வம் எதுவும் இல்லாத நிலை. வறுமையோ, செல்வமோ ஒரேயிடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடுவதில்லை. சக்கரம் எப்படி கீழ் மேலாகவும், மேல் கீழாகவும் மாறி மாறி சுழன்று கொண்டிருக்குமோ அது போலவே இவ்விரு நிலைமையும் மாறிமாறித்தான் வரும். அதனால் செல்வந்தன் செறுக்கடைவதோ, வறியவன் துன்புறுவதோ தேவையில்லை.

50. குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்.
முந்தைய பாடலின் கருத்தை வேறு விதமாக வலியுறுத்தும் வரிகள் இவை. ஆள், படை, கொடி, யானை, அம்பாரி, அதன்மேல் வெண்கொற்ற குடை இவைகளோடு ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்த நிலைமை மாறி, தன்னுடைய நாடு, குடி, படை அனைத்தையும் இழந்து பராரியாய் நடை தளர்ந்து வேற்றூர் சென்றாலும் செல்லலாம். அப்படிப்பட்ட நிலைமைக்கு       ஒருவன்  ஆளாவது ஒன்றும் புதிது அல்ல. செல்வந்தன் ஏழ்மை நிலைமையை அடைவதும், ஏழை செல்வந்தனாவதும் மாறி மாறி நடக்கக்கூடியவைகளே. ஆக, வாழ்வில் எதுவும் நிரந்தரம் அல்ல என்பது கருத்து.