பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, March 27, 2013

Gopalakrishna Bharathiyar


சற்றே விலகியிரும்...


ராகம் : பூரிகல்யாணி
தாளம் : ரூபகம்


பல்லவி
சற்றே விலகியிரும் பிள்ளாய் சந்நிதான மறைக்குதாம் நீ 

அநுபல்லவி
நற்றவம்புரிய நம்மிடம்திரு நாளைப்போவார் வந்திருக்கிறார் 

சரணம்
சாதி முறைமை பேசுறான் தன்னையிகழ்ந்தும் ஏசுறான் 
கோதிலா குணமுடையோன் கோபங்கொண்டால் தாளமாட்டோம் [சற்றே] 

வேதகுலத்தைப் போற்றுறான் விரும்பிவிரும்பி யேற்றுறான் 
பூதலத்தி லிவனைப் போலே புண்யபுருட னொருவனில்லை [சற்றே] 

பத்தியில்கரை கண்டவன் பார்த்துப்பாத்து உண்டவன் 
சித்தங்குறையில் நமது செல்வம் முற்றுங்குறையும் [சற்றே]

No comments: