பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, September 30, 2013

பெருந்தலைவர் காமராஜ்



பெருந்தலைவர் காமராஜ் ஒரு சகாப்தம். எளிய குடும்பத்தில் பிறந்து உழைப்பு, தியாகம், ஏழை எளியவர்களுக்காக பாடுபட்டது போன்ற அவருடைய சேவையை எப்படி மறக்க முடியும். மக்கள் நலனுக்காகத்தான் சட்ட திட்டங்கள் என்பதை செயல்வடிவம் கொடுத்துக் காட்டியவர். அவருடைய மறைவு தினம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி. அவர் நினைவை போற்றுவோம். அவர் வழியைப் பின்பற்றுங்கள் என்று அவர் சார்ந்த இயக்கத்தாரிடம் வேண்டுகோள் வைப்போம்.


1 comment:

துரை செல்வராஜூ said...

தாங்கள் வழங்கிய பதிவு பழைய நினைவுகளைக் கிளறி விட்டது!.. என் தந்தை சாப்பிடாமல் மூன்று நாட்கள் இருந்தது நினைவுக்கு வருகின்றது. பெருந்தலைவர் ஒரு சகாப்தம் - உண்மைதான்!..