பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, August 7, 2011

கட்டுரைப் போட்டி


கட்டுரைப் போட்டி



மகாகவி பாரதியாரின் 90ஆவது நினைவு நாள்
கருத்தரங்கக் கட்டுரைப் போட்டி


பாரதி அன்பர்களுக்கு ஓர் அறிவிப்பு:

மகாகவி பாரதியாரின் 90ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி திருவையாறு பாரதி இயக்கம் ஒரு கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. கருத்தரங்கத்தில் பங்குபெற விரும்புவோர் கட்டுரைகளை மின்னஞ்சல் மூலமாகவோ, அஞ்சல் வழியிலோ கீழ்கண்ட முகவரிகளுக்கு அனுப்பலாம்.அவற்றிலிருந்து சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து கருத்தரங்கில் படிக்க ஏற்பாடு செய்கிறோம். தேர்ந்தெடுக்கப்படாத மற்ற கட்டுரையாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விழா திருவையாற்றில் 2011 செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெறும்.

விதிமுறைகள்:
1. கட்டுரை சுமார் பத்து மணித்துளிகளுக்குள் படித்து முடிக்கும்படி A/4 அளவுள்ள காகிதத்தில் 5 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.

2. கட்டுரை பாரதி பற்றியோ, அவரது படைப்புகள் பற்றியோ ஏதாவதொரு நிகழ்ச்சி அல்லது தலைப்பு பற்றி மட்டும் இருக்க வேண்டும்.

3. போட்டியின் விதிமுறைகளுக்கு பாரதி இயக்கத்தின் முடிவே இறுதியானது.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

1. மின்னஞ்சல் முகவரி:- privarsh@gmail.com 

2. அஞ்சல் முகவரி: தலைவர், பாரதி இயக்கம், 19, வடக்கு வீதி, திருவையாறு
தஞ்சை மாவட்டம் 613204

No comments: