பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, December 20, 2015

இலலோ ப்ரணதார்த்திஹர

                          
                         

 ராகம்: அடாணா                                                                  ஆதி தாளம்                                  .         ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் திருவையாறு ஐயாறப்பர் மீது பாடியது.

                                                               பல்லவி
                        இலலோ ப்ரணதார்த்திஹருடனுசு பே...
                        ரெவரிடிரே சங்கருடனி நீ
                                                            அனுபல்லவி
                        தலசி காகி சிரகாலமு பமுன
                        தண்ட மிடின நாயெட தயலேதா யெ
                                                               சரணம்
                        கர சரணயுரமு நொஸலு புஜமுலு
                        தரணி சோகம் ரொக்கக லேதா
                        சரண மனுசு மொரலிட லேதா பஞ்..
                        சநதீச த்யாக ராஜனுத நீ

பொருள்:  அடிபணிந்து வணங்குவோர்தம் துயரங்களைத் தீர்த்து வைப்பவன் என்றும், நலன்களையெல்லாம் தருபவன் என்றும் இந்த உலகத்தில் யார் உனக்குப் பெயரிட்டது?
உன்னையே நினைத்து உள்ளம் உருகி நீண்ட காலமாக நின் திருப்பாதங்களில் பணிந்து வணங்கி வரும் என்மீது உனக்குச் சிறிதுகூட தயை இல்லாமல் போய்விட்டதே!

கை, கால், மார்பு, நெற்றி, தோள் ஆகிய எல்லா உறுப்புகளும் தரையில் பட உன்னை நான் பணிந்து வணங்கவில்லையா?

நீயே எனக்கு அடைக்கலாம் என்று உன்னிடம் நான் முறையிடவில்லையா? இந்தத் தியாகராஜனால் வணங்கப்படும் ஐயாறப்பா! பிரணதார்த்திஹரனே!


       

No comments: