பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, July 28, 2011

தஞ்சை ராமையாதாஸ்

இவருடைய வரலாற்றைப் பார்க்குமுன்பாக, இவர் திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்களை முதலில் பார்ப்போம். இந்தப் பாடல்களின் முதலடியைக் கேட்டவுடன், அடடா! இதை எழுதியது அவரா? என்று ஆச்சரியப்படுவீர்கள். காரணம் பொதுவாக இவர் எழுதிய பாடல் என்றால், "ஜாலிலோ ஜிம்கானா" என்றெல்லாம் இருக்கும் என்கிற எண்ணம்தான். நாடகங்களுக்கு ஆசிரியராக இருந்த இவர் பின்னாளில் திரைப்படப் பாடல்களை எழுதி வந்தார். இவர் வரலாறு முழுமையாகக் கிடைக்கவில்லை, கிடைத்ததும் வெளியிடுகிறோம். இப்போதைக்கு அவர் எழுதிய சில பாடல்களை மட்டும் பார்க்கலாம்.

அமுதவல்லி
"ஆடைகட்டி வந்த நிலவோ" -- இது அமுதவல்லி என்ற படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் டி.ஆர்.மகாலிங்கம், பி.சுசீலா பாடியிருக்கிறார்கள்.
மாயா பஜார்
"ஆகா, இன்ப நிலாவினிலே"-- மாயா பஜார் என்பது படம். பாடியது கண்டசாலா.
"கல்யாண சமையல் சாதம்” -- மாயா பஜார் பாடியவர்கள் திருச்சி லோகநாதன், இசை: கண்டசாலா
"கண்ணுடன் கலந்திடும் சுபதினமே" -- மாயா பஜார், பாடியவர் பி.லீலா
"நீதானா என்னை அழைத்தது" -- மாயா பஜார், பாடியோர் கண்டசாலா, பி.சுசீலா

குலேபகாவலி
"ஆசையும் என் நேசமும்" -- இசை எம்.எஸ்.வி., ராமமூர்த்தி (விக்கலுடன் பாடும் பாட்டு)
"அச்சு நிமிர்ந்த வண்டி, ஆளை குடை சாய்க்கும் வண்டி" -- சந்திரபாபு
"அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்" -- டி.எம்.செளந்தரராஜன்
"கையைத் தொட்டதும் மெய்யைச் சிலிர்க்குதே" -- டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா
"மாய வலையில் வீழ்ந்து மதியை இழந்து" -- டி.எம்.செளந்தரராஜன்
"மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ" -- ஏ.எம்.ராஜா, ஜிக்கி
"நான் சொக்கா போட்ட நவாபு" -- ஜிக்கி
"நாயகமே, நபி நாயகமே, நலமே அருள் நாயகமே" -- எஸ்.சி.கிருஷ்ணன்
"வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே" -- திருச்சி லோகநாதன், பி.லீலா
"வித்தார கள்ளியெல்லாம் விறகு வெட்டப் போகையிலே" -- டி.எம்.செளந்தரராஜன்.

பாதாள பைரவி
"அமைதி இல்லாதென் மனமே" -- கண்டசாலா, பி.லீலா
"என்னதான் உன் பிரேமையோ" -- கண்டசாலா

அனார்கலி
"ஆனந்தமே, என்னாளும் காணாத ஆனந்தமே"--இசை: ஆதிநாராயண ராவ், பாடியவர்: ஜிக்கி
"ஜீவிதமே சபலமோ" - பாடியவர் ஜீக்கி
"கனிந்த" -- கண்டசாலா, ஜிக்கி
"ஓ அனார்கலி, அகில ஜோதியாய் பிறந்தாய்" -- கண்டசாலா
"பார்தனிலே முடிவு கண்டேன்" -- ஜிக்கி
"ராஜசேகரா என் மேல் மோடி செய்யலாகுமோ" -- கண்டசாலா, பி.சுசீலா
"சிப்பாயீ.... அன்பே நீ வாராயோ" -- ஜிக்கி

மணாளனே மங்கையின் பாக்கியம்
"அழைக்காதே ... நினைக்காதே ... அவைதனிலே" -- பி.சுசீலா
"தேசுலாவுதே தேன்மலர் மேலே" -- கண்டசாலா, பி.சுசீலா

சம்பூர்ண ராமாயணம்
"இன்று போய் நாளை வாராய்" -- இசை: கே.வி.மகாதேவன். பாடியவர் சிதம்பரம் ஜெயராமன்

அடுத்த வீட்டுப் பெண்
"கண்களும் கவி பாடுதே" -- இசை:ஆதிநாராயணராவ், சீர்காழி & பி.பி.ஸ்ரீநிவாஸ்
"கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே" -- பி.பி.ஸ்ரீநிவாஸ்
"கன்னித் தமிழ் மணம் வீசுதே" -- பி.சுசீலா
"மலர்க்கொடி நானே மலர்ந்திடுவேனே" -- பி.சுசீலா
"மன்னவா, வா, வா, மனமகிழ வா" -- பி.சுசீலா
"பிரேமையின் ஜோதியினால், பேரின்பம் எங்கும் பொங்கும்" -- பி.சுசீலா

அம்பிகாபதி
"கண்ணே உன்னால்" - இசை ஜி.ராமநாதன். பாடியவர் என்.எஸ்.கிருஷ்ணன்

தஞ்சை ராமையா தாஸ் அவர்களுடைய வரலாறு அறிந்தவர்கள் அதனைத் தெரிவிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன். இந்த வலைப்பூவில் அதை வெளியிட விழைகிறேன். நன்றி.









1 comment:

சிவகுமாரன் said...

இந்தப் பட்டியலில் சில பாடல்களை (உம். ஆடைகட்டி வந்த நிலவோ) பட்டுக்கோட்டையார் எழுதியதென நினைத்தேன்.
பகிர்வுக்கு நன்றி.
ஆமாம் .... தேசுலாவுதே என்றால் என்ன பொருள் ?