பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, October 24, 2013

பெண் விடுதலை

மகாகவி பாரதியார் "பெண் விடுதலை" எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரைகளை இப்போது பார்க்கலாம். இவை எத்தனை முறை படித்தாலும் பயனுள்ளதாகவும், இன்றைய சூழ்நிலையில் ஒப்பிட்டுப் பார்க்கவும் பயன்படும் என்பதால் இதனை இங்கு கொடுக்கிறோம். முதலில் பகுதி 1.


மாதர் - பெண் விடுதலை (1)

இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குச் சீட்டுக்கொடுத்தாய்விட்டதென்று சில தினங்களின் முன்பு 'ராய்டர்' தந்திவந்தது. 'அதைப்பற்றிய பத்திராதிபர் குறிப்பொன்று ''ஸ்திரீகளின்ஐயம்'' என்ற மகுடத்துடன் சுதேசமித்திரன் பத்திரிகையில்எழுதப்பட்டிருந்தது. நேற்று மாலை நானும் என்னுடையசினேகிதர் சிரோமணி ராமராயரும் வேறு சிலருமாகஇருக்கையில் மேற்படி தேதி (அதாவது ''ஸ்திரீகளின் ஜயம்''எழுதியிருந்த) சுதேசமித்திரன் பத்திரிகையைக் கையில்"எடுத்துக்கொண்டு மோட்டு வீதி கோபாலய்யர் பத்தினிவேதவல்லி அம்மை வந்தார்.
வேதவல்லி அம்மைக்கு நாற்பது வயது. தமிழிலும்இங்கிலீஷிலும் உயர்ந்த படிப்பு. ஸமஸ்கிருதம் கொஞ்சம்தெரியும். இவளுடைய புருஷன் கோபாலய்யர் பெரிய சர்க்கார்உத்தியோகத்திலிருந்து விலகி பணச்செருக்கு மிகுந்தவராய் தமதுபத்தினியாகிய வேதவல்லியுடனும் நான்கு குழந்தைகளுடனும்சௌக்கியமாக வேதபுரத்தில் வாழ்ந்துவருகிறார். வேதவல்லிக்குஅவர் விடுதலை கொடுத்து விட்டார். எங்கும் போகலாம்,யாருடனும் பேசலாம். வீட்டுச் சமையல் முதலிய காரியமெல்லாம்ஒரு கிழவி பார்த்துக்கொள்கிறாள். வேதவல்லி அம்மை புஸ்தகம்,பத்திரிகை, சாஸ்திர ஆராய்ச்சி, பொதுக்கூட்டம் முதலியவற்றிலேகாலங்கழித்து வருகிறார்.
வேதவல்லி வரும்போது நான் ராமராயர்முதலியவர்களுடன் வேதவியாசர் செய்த பிரம்ம சூத்திரத்திற்குசங்கராச்சாரியர் எழுதின அத்வைத பாஷ்யத்தை வாசித்து அதன்சம்பந்தமாகத் தர்க்கித்துக் கொண்டிருந்தேன். அந்தச்சமயத்தில் வேதவல்லியார் வந்தனர். (ஒருமை பன்மை இரண்டும்பெண்களுக்கு உயர்வையே காட்டும்) வேதவல்லிக்கு நாற்காலிகொடுத்தோம். உட்கார்ந்தாள். தாகத்துக்கு ஜலம் கொண்டுவரச்சொன்னாள். பக்கத்திலிருந்த குழந்தையை மடைப்பள்ளியிலிருந்து"ஜலம் கொண்டு கொடுக்கும்படி ஏவினேன். அதனிடையே,வேதவல்லி அம்மை 'என்ன சாஸ்திரம் ஆராய்ச்சிசெய்கிறீர்கள்?' என்று கேட்டாள். சங்கரபாஷ்யம் என்றுசொன்னேன். வேதவல்லி சிரித்தாள். 'சங்கர பாஷ்யமா! வெகுஷோக். இந்துக்களுக்கு இராஜ்யாதிகாரம் வேண்டுமென்றுசொல்லித்தான் மன்றாடப்போய் ''அன்னிபெஸண்ட்'' வலைக்குள்மாட்டிக்கொண்டாள். அவள் இங்கிலீஷ்கார ஸ்திரீ. நம்முடையதேசத்து வீராதிவீரராகிய ஆண்பிள்ளைச் சிங்கங்கள் சங்கரபாஷ்யம் வாசித்துப்பொருள் விவரித்துக் கொண்டிருக்கிறார்கள்.க்ஷோக்! ஷேக்! இரட்டை ஷேக்!' என்றாள்.
ராமராயருக்குப் பளிச்சென்று கோபம் வந்துவிட்டது.'சரிதானம்மா, நிறுத்துங்கள். தங்களுக்குத் தெரிந்த ராஜயுக்த்திகள்பிறருக்குத் தெரியாதென்று நினைக்க வேண்டாம்' என்றார்.
இதைக் கேட்டவுடன் ராமராயர், ''நான் வீட்டுக்குப்போய்விட்டு வருகிறேன்'' என்று சொல்லி எழுந்து நின்றார்.நான் இரண்டு கட்சியையும் சமாதானம் பண்ணிக் கடைசியாகவேதவல்லியம்மை பொதுப்படையாக ஆண் பிள்ளைகளைஎவ்வளவு கண்டித்துப் பேசியபோதிலும் ராமராயரைச்சுட்டிக் காட்டி ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாது என்றுதீர்மானம் செய்துகொண்டோம். அப்பால் வேதவல்லிஅம்மையின் உபந்யாஸம் நடக்கிறது:-
''ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிற் சேர்ந்து"பாடுபடாதவரையில், இங்குள்ள புருஷர்களுக்கு விடுதலைஏற்பட நியாயமில்லை. இந்தத் தேசத்தில் ஆதிகாலத்துப்புருஷர் எப்படி யெல்லாமோ இருந்ததாகக் கதைகளில்வாசித்திருக்கிறோம். ஆனால் இப்போதுள்ள புருஷரைப் பற்றிப்பேசவே வழியில்லை. ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிலேதலையிட்டால் அன்னி  பெஸண்டுக்கு ஸமானமாக வேலைசெய்வார்கள். இங்குள்ள ஆண் பிள்ளைகள் வேதாந்தவிசாரணைக்கும் குமாஸ்தா வேலைக்கும் தான்உபயோகப்படுவார்கள். ராஜ்ய க்ஷேமத்தைக் கருதிதைர்யத்துடன் கார்யம் நிறைவேறும்வரை பாடுபடும் திறமைஇத்தேசத்துப் புருஷருக்கு மட்டு. ஸரோஜினி நாயுடு எவ்வளவுதைரியமாகப் பேசுகிறார்கள், பார்த்தீர்களா? உலகத்தில் எங்குமேபுருஷரைக் காட்டிலும் ஸ்திரீகள் அதிக புத்திசாலிகள் என்றும்,தைரியசாலிகள் என்றும் தோன்றுகிறது. மற்ற தேசங்களில்எப்படியானாலும், இங்கே பெண்ணுக்குள்ள தைர்யமும்புத்தியும் ஆணுக்குக் கிடையாது. இங்கிலாந்தில் பெண்கள்ஆண் பிள்ளைகளை வசப்படுத்தி எவ்வளவு சுலபமாகச்சீட்டு வாங்கி விட்டார்கள்.
ஹோ! ஹோ! அடுத்த தடவை இங்கிருந்துகாங்கிரஸ்காரர் இங்கிலாந்திற்கு ஸ்வராஜ்யம் கேட்கப்போகும்போது, அங்குள்ள புருஷரைக் கெஞ்சினால் போதாது.ஸ்திரீகளைக் கெஞ்சவேண்டும். அதற்கு இங்கிருந்து புருஷர்மாத்திரம் போனால் நடக்காது. இந்த தேசத்துப் புருஷர்களைக்கண்டால் அங்குள்ள ஸ்திரீகள் மதிக்கமாட்டார்கள். ஆதலால்,காங்கிரஸ் ஸபையார் நமது ஸ்திரீகளை அனுப்புவதே நியாயம்.எனக்கு இங்கிலீஷ் தெரியும். என்னை அனுப்பினால் நான்"போய் அங்குள்ள பெண் சீட்டாளிகளிடம் மன்றாடிஇந்தியாவுக்கும் சீட்டுரிமை வாங்கிக் கொடுப்பேன். பெண்பெருமை பெண்ணுக்குத் தெரியும். உங்களிடம் சொல்லிப்பிரயோஜனம் இல்லை' என்று சொன்னாள்.
ராமராயர்:- 'வேறு விஷயம் பேசுவோம்' என்றார்.தான் பாதி பேசும்போது, ராமராயர் தடுத்துப் பேசியதிலிருந்து,அந்த வேதவல்லி அம்மைக்குக் கோபம் உண்டாகி, 'நான்இவரைக் குறிப்பிட்டு ஒன்றும் சொல்லுவதில்லை யென்றும்,இவர் சும்மாயிருக்கவேண்டும் என்றும், ஆரம்பத்தில்செய்யப்பட்ட தீர்மானத்தை இவர் அதற்குள்ளே மறந்துவிட்டார்' என்று சொல்லி வெறுப்புடன் எழுந்து போய்விட்டார்.
நான் எத்தனையோ சமாதானம் சொல்லியும்கேட்கவில்லை. ''ராமராயர் இருக்கும் சபையிலே தான்இருக்கலாகாது'' என்று சொன்னாள். அந்த அம்மை சென்றபிறகு ராமராயர் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.'என்ன சொல்லுகிறீர்?' என்று கேட்டேன். 
ஸ்திரீகளுக்கு விடுதலை கொடுப்பது மிகவும்அவசியத்திலும் அவசியம் என்று ராமராயர் சொன்னார். பிறகுமறுபடி சங்கர பாஷ்யத்தில் இறங்கி விட்டோம்.


1 comment:

இராஜராஜேஸ்வரி said...

பாரதியாரின் அருமையான கட்டுரைப்பகிர்வுக்கு நன்றிகள்

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_17.html