tag:blogger.com,1999:blog-3694373417575703986.post2520233141052055701..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: சித்தக்கடல்Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-69752425506301673072012-12-22T07:35:10.078-08:002012-12-22T07:35:10.078-08:00////பராசக்தீ! ஒவ்வொரு கணமும் எனது சித்தம் சலிக்கும...////பராசக்தீ! ஒவ்வொரு கணமும் எனது சித்தம் சலிக்கும் முறைகளை அப்போதப்போது பொய்மையில்லாமலும் வஞ்சகமில்லாமலும் எழுதுவதற்கு எனக்குத் தைரியம் கொடுக்க வேண்டும்.////<br /><br />இந்த மகாகவி எத்தனை உரிமையை அன்னை பராசக்தியிடம் எடுத்துக் கொள்கிறான் பாருங்கள். பராசக்தீ என்று ஒரு நண்பனை உரிமையோடும்... சில நேரங்களில் குழந்தைகள் (என் மகன் கூட அப்படி அவனது அம்மாவை அழைப்பதை கவனிக்கிறேன்) உரிமையோடு பெற்றவளை சற்று அதட்டினார் போல அழைப்பது. அதற்கு அந்த அன்பு மிக்கத் தாய் புன் முறுவலோடு அவளும் இவனை அதட்டினார் போன்று சிரித்தவாறு, என்னாடா!!!!!.... என்று வருவாள்! அப்படியாகத் தான் இந்த தாய் மகன் உறவு இருந்திருக்கிறது.<br /><br />////குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாகிவிட்டது. இரண்டு மாதகாலம் இரவும் பகலுமாக நானும் செல்லம்மாளும் புழு துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை. இருவருக்கும் எப்போதும் சஞ்சலம், பய, பயம், பயம்! சக்தி உன்னை நம்பித்தான் இருந்தோம். நீ கடைசியாகக் காப்பாற்றினாய், உன்னை வாழ்த்துகிறேன்////<br /><br />அடுத்து என் குழந்தையை வியாதியில் இருந்து காத்தாய் எங்களையும் காத்தாய்.... அதற்கு அவன் நன்றி கூறவில்லை எத்தனை உரிமையோடு பெருமைப் பட அதற்கு நான் உன்னை வாழ்த்துகிறேன் என்கிறான். எத்தனை அன்னியோன்யம் நெருக்கம். <br /><br />பிறகு அவளை சீண்டுகிறானாம்!!..<br /><br />////மஹாசக்தீ, நீயிருப்பதை எவன் கண்டான்? உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான்? இந்த உலகம் - சரி! இப்போது உன்னை வையமாட்டேன். என்னைக் காப்பாற்று, உன்னைப் போற்றுகிறேன் /////<br /><br />அவன் அழைக்கும் போதே அவளை எந்தளவுக்கு தீர்க்கமாக நம்பி இருக்கிறான் என்பதை முதல் வார்த்தையே ''மஹாசக்தீ'' என்பதே சொல்லும். அடுத்ததாக நீயும் உனக்கும் அறிவு இருப்பதை யார் கண்டார் என்பவன்.... சரி சரி நான் உன்னை இப்போது வையமாட்டேன் என்கிறான். அவளே இல்லையென்று சந்தேகம் வருமாயின் அவளை ஏன்? அப்படி உயர்வாக விழிக்க வேண்டும். இல்லையென்று முடிவுக்கு வந்தவன் சரி சரி நான் இப்போதுன்னை வைய மாட்டேன் என்கிறான்.<br /><br />இப்படி அவளோடு அன்பாகவும், அதிகாரம் செய்தும் அவளைச் சீண்டியும் இருக்கும் காட்சி அவளிடம் இவன் கொண்ட நெருக்கத்தை நம்மால் உணர முடிகிறது. இதற்கு மேலாக அவன் செய்தது போல் சித்தம் (விருப்பம்) அதுவானால் புத்தியும் அதுவே ஆகும், புத்தியே அதுவானால் அறிவும் அதுவே ஆகும். இந்த ஒருத்துளி அறிவு அந்தப் பெருங்கடலாவதும் அப்படியே என நம்பி துணிந்து ஏகாந்தத்திலே இருக்க கடுமையாக முயற்சித்து பிறகு வெற்றியும் பெற்று இருப்பதை வேறு சில பாடல்களிலே காணவும் முடிகிறது. இருந்தும் இறைவனின் விருப்பம் எதுவென்று யாரறிவார். அப்படி ஓளி பெற்றவர்களை கருவியாகக் கொண்டு அவர்களின் அந்த ஜீவ முக்திப் பெற்ற ஆத்மாவை அந்த பரம் பொருள் இயக்குகிறது என்றும் வேறொரு இடத்திலேக் குறிப்பிடுகிறான் பாரதி.<br /><br />இதிலே கவனிக்க வேண்டிய ஓன்று, அதுவே என்னை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்த்கிறது. எத்தனை இளவயது, அதில் எத்தனை ஏழ்மை, வறுமை, கொடுமை, வியாதி அத்தனையையும் ஒரு பக்கமாக வைத்து விட்டு இவன் எப்படி இப்படி முக்திக்கு பேரொளியில் கலப்பதைப் பற்றிய சிந்தனையிலே ஆழ்ந்தான் என்பது தான் அது. ஆனால் அத்தனைக்கும் ஈடு கொடுத்து அவனோடு இருந்து அவனுக்கு ஆறுதலாக இருந்த அந்த தாயை, செல்லம்மாவை என்னவென்று சொல்லிப் புகழ்வது. <br /><br />இவனுக்கு பால்ய திருமணம் மாத்திரம் நடக்காமல் இருந்திருந்தால் இவன் பெரும் துறவியாகி இன்னொரு விவேகானந்தராக மீண்டும் உலகை வலம் வந்து உலக நன்மைக்கு இன்னும் பல காரியங்கள் ஆற்றி இருப்பான் என்பதை உறுதியாக நம்ப வழி இருக்கிறது. அந்தப் பேரொளியில் கலப்பதே பிறவியின் லட்சியம் என்னும் வேதாந்தக் கருத்தை ஆழ்மனதிலே பதித்தே செயலும் புரிந்து வெற்றி பெற்று இருக்கிறான் பாரதி.<br /><br />நல்ல தொருப் பதிவு, பகிர்விற்கு நன்றிகள் ஐயா!<br /><br />வாழ்க வளர்க பாரதியின் புகழ்! <br />Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com