பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, June 13, 2017

கவி காளமேகத்தின் சில பாடல்கள்.

கவி காளமேகத்தின் சில பாடல்கள்.

பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்துஎடுத்துப் போகிறதே பார்!

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்.

அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பரிய மாமன் உறிதிருடி; - சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத் தானுக்குஇங்கு
எண்ணும் பெருமை இவை.

தாண்டி ஒருத்தி தலையின்மேல் ஏறாளோ?
பூண்டசெருப் பால்ஒருவன் போடானோ? - மீண்டு ஒருவன்
வையானோ? விவ்முறிய மாட்டானோ? தென்புலியூர்
ஐயா,நீ ஏழைஆ னால்.

வாதக்கால் ஆம்தமக்கு; மைத்துனர்க்கு நீரிழிவுஆம்;
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக் கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறிவார் வேறூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?

வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டுஒருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கஇக் காசினியில்
அல்ஆர் பொழில்தில்லை அம்பல வாணற்குஓர் அன்னைபிதா
இல்லாத தாழ்வுஅல்ல வோஇங்ங னேஎளிது ஆனதுவே.

முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்கப்
பின்னே இருந்துஇரண்டு பேர்தள்ள - எந்நேரம்
வேதம்போம் வாயான் விகடரா மன்குதிரை
மாதம்போம் காத வழி.

ஏய்ந்த தனங்கள் இரண்டும் இரு பாகற்காய்
வாய்ந்தஇடை செக்குஉலக்கை மாத்திரமே - தேய்ந்தகுழல்
முக்கலம்சிக் கும்பிடிக்கும் மூதேவி யாள்கமலைக்
குக்கல்இச்சிக் கும்கலைச்சிக் கு.

வாழ்த்து திருநாகை வாகுஆன தேவடியாள்
பாழ்த்த குரல்எடுத்துப் பாடினாள் - நேற்றுக்
கழுதைகெட்ட வண்ணான்கண் டேன்கண்டேன் என்று
பழுதைஎடுத்து ஓடிவந்தான் பார்.

தருக்குலவு கண்ணமங்கைத் தானத்தார் எல்லாம்
திருக்குளத்து மீன்ஒழியத் தின்று - குருக்கொடுக்கும்
தம்பிமார் என்று இருந்தோம்; நாட்டில் அழிகூத்தி
தம்பிமா ராய்இருந்தார் தாம் !

மாடுதின்பான், பார்ப்பான் மறைஓது வான்குயவன்
கூடிமிக மண்பிசைவான், கொல்லனே - தேடி
இரும்புஅடிப்பான்; செக்கான் எண்ணெய்விற்பான்; வண்ணான்
பரும்புடைவை தப்பும்;பறை.