பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, November 10, 2015

குச்சிப்புடி

                                                            குச்சிப்புடி
                                   நன்றி:   கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா

Vempatti Sinna Sathyam garu

                            குச்சிப்புடி  (தெலுங்கு: కూచిపూడి) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசமாநிலத்தில் வளர்ந்த ஒரு பண்டைய நடன நாடக வடிவமாகும். இது தென்னிந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஒரு நடன வகையாகும். ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிப்புடி என்னும்கிராமத்தின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது.

Bhavana

கருநாடக இசையோடு இவ்வகை நடனம் ஆடப்படுவது வழக்கமாகும். அதோடு மிருதங்கம்வயலின்புல்லாங்குழல் மற்றும் தம்புரா ஆகிய இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படலாம். இது 7ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் புகழ்பெறத்தொடங்கியது.


Kuchipudi artist Achutha Manasa 

நெடுங்காலமாக  இந்த நாட்டிய நாடகத்தை ஆந்திராவின் கோவில்களில்ஆடிவந்தார்கள். காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு இடைக்காலத்தில்  இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே ஆடப்பட்டதாகத் தெரிகிறது.
                                                          Balathiripurasundari
தற்காலத்தில் ஆடப்படும் குச்சிப்புடி ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது
இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள புராணக் கதைகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்தநடனம்.
                                                               
நாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்கோ ஒரு செய்தியைத் தரும் ஊடகமாகவும் இந்த குச்சிப்புடி நடனம் செயற்பட்டிருக்கிறது
. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச்சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம். 

இந்த நாட்டிய இசையில் கருவிகளாக ஹார்மோனியம்கஞ்சீராபுல்லாங்குழல்வீணை மற்றும் வயலின்பயன்படுத்தபடுகிறது. மேலும், வாய்ப்பாட்டு பாடுபவர் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப்பாட, நட்டுவனார் ஜதி சொல்ல, குச்சிப்பிடி நடனம் அரங்கேறும்.
                                                           Manju Bhargavi
குச்சிப்பிடி நடனத்தின் அங்கங்கள் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்கு பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையுடனும் ஆடுவதுண்டு.


Raja & Radha

ஆந்திரப் பிரதேசத்தில் மையமாகக் கொண்டு இந்த நடனக் கலை இந்தியா முழுவதும் ஆடப்பட்டு நடனக் கலையில் ஒரு சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது. இந்த குச்சிபுடி நடனக் கலையில் தற்காலத்தில் சிறந்து விளங்கும் பல கலைஞர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் ஜீவன் நமது கலைகளில்தான் இன்னமும் உயிர்ப்புடன் இருந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த அற்புத நடனக் கலையை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் அந்தக் கலைஞர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி எப்போதும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
வெம்பட்டி சின்ன சத்யாம் குச்சிபுடி நடன குருவாக மிகச் சிறப்பான பணிகளைச் செய்தவர். இவருடைய மாணவி மஞ்சு பார்கவி “சங்கராபரணம்” திரைப்படத்திலும் மிகச் சிறப்பாக நடித்தவர்.

 Few Kuchipudi Artists: 
எல்லூரு: திரு கே.வி.சத்யநாராயணா. 
குண்டூர்: கோக்கா விஜயலக்ஷ்மி, மகம்காளி சூர்ய நாராயண சர்மா, செளம்யாஸ்ரீ பாஸகர், ஐதராபாத் அச்சுத மனஸா, அஜய் ஸ்ரீநிவாஸ் சக்ரவர்த்தி, அலேக்யா புஞ்லா, ஆனந்த் ஷங்கர் ஜெயந்த், அனுபமா கைலாஷ், அனுராதா ஜோன்னலகட்டா, ஆதிநாரீஸ்வரம் வெங்கட், பாகவதலு சேதுராம், தேவரகொன்டா ஸ்ரீநிவாஸ், எக்கிரல வேதவதி, கீதா மாதுரி, ஜானகி, ஜ்வாலா ஸ்ரீகலா, கலா கிருஷ்ணா, கொத்தபள்ளி பத்மா, மடலி உஷா காயத்ரி, எஸ்.மாதவிமாலா, மதுரிமா நர்லா, நூபுரா ஜெய்ஸ்வால், வி.பத்மா கல்யாண், பசுமர்தி மிருத்ஞ்சய சர்மா, பசுமர்தி வெங்கடேஸ்வர சர்மா, பெரினி ரவி தேஜா, பிரதிமா சாகர், எம்.வி.ரமணி, ரேணுகா உதய், எம்.சந்தியா சந்தியா ராஜு, சஞ்சய்குமார் ஜோஷி, சாரதாம்பா கிள்ளி, சரளகுமாரி, சத்ய நரசிம்ம சாஸ்திரி, சிவராஜ் சுக்கா, எம்.எஸ்.சிவராஜு, ஷோபா நாயுடு, கே.சி.ஸ்ரீவாணி, கே.உமா ராம ராவ், டி.வருண், வேதாந்தம் சித்தேந்திர வரபிரசாத், விஜயலக்ஷ்மி பர்குலா, யசோதா தாகூர், எல்லேஸ்வரபு சலபதி சாஸ்திரி, 
கிருஷ்ணா மாவட்டம்: சிந்தா ரவி பாலகிருஷ்ணா, பசுமர்த்தி கேசவ பிரசாத், பசுமர்த்தி மிருத்யம் ஜயா சர்மா, சாம்பசிவராவ் டெகேலா, தாடேபள்ளி சத்யநாராயண சர்மா, வேதாந்தம் ராதே ஷ்யாம், வேதாந்தம் வெங்கட நாகசலபதி, வெம்பட்டி லக்ஷ்மண குமார், வெம்பட்டி சத்ய ப்ரசாத், எல்லேஸ்வரபு ஸ்ரீநிவாசலு, 
நெல்லூர்: ஆதர்ஷ், 
ராஜமுந்திரி: ஒய்.லலிதா சிந்தூரி, 
செகந்திராபாத்: ஜெட்டி மார்கண்டேய ஷர்மா, பசுமர்த்தி சாய் தீபிகா, பாவனி ஸ்ரீலதா, பி.ரமா தேவி, சரளா தேவி பெத்தடா, ஸ்வப்னா திருனாகரி, ஸ்வாதி சோம்நாத், உமா காத்யாயனி வீருபோத்லா, உமா வெங்கடேஸ்வரலு, 
விஜயவாடா: அஜய் குமார், பாகவதுலு ஸ்ரீநிவாச சர்மா, பி.கெளரி குமார், ஜோஷிலா சீதாராம சாஸ்திரி, லதா மன்சூஷா, மஞ்சுஷா வெங்கட ராமகிருஷ்ணன்,  பேரா கெளரி, கே.சாரதா ராமகிருஷ்ணா, பி.வி.என்.செளம்யா, பி.ஹெச்.ஸ்ரீநிவாச சர்மா, வேதாந்தம் வெங்கட நாகசலபதி ராவ், 
விசாகப்பட்டினம்: அடப கமலாஸ்ரீ, ஆதித்ய புல்லி பிரம்மம், வி.ஆர்.ஆர். அர்ஷிதா, பங்காரய்யா உப்புலுரி, வி.எஸ்.என்.எஸ்.காமேச்வர ராஒ, கே. நீலிம ராஜு, என்.என்.வி. சத்யபானு, சுவர்ண பாப்பு, எலமன்சிலி ஹனுமந்த ராவ் ஆகியோர் இவர்கள் தவிர வேறு பல கலைஞர்களும் உள்ளனர். 


1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஓர் அருமையான கலையைப் பற்றிய அழகான பகிர்வு. பல புதிய செய்திகளைத் தெரிந்துகொண்டேன். நன்றி.