பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, November 20, 2013

T.P. ராஜலக்ஷ்மி அவர்களின் நூற்றாண்டு விழா

தமிழ்த்திரை உலகின் முதல் கதாநாயகி
    

                   T.P. ராஜலக்ஷ்மி அவர்களின்
                                       நூற்றாண்டு விழா
                       இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா

அன்புடையீர்!

வணக்கம். இந்திய நாத்தின் கலை, கலாச்சாரம், நாகரிகம் மற்றும் அரசியல் இவைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வந்துள்ள இந்திய சினிமா அதன் நூற்றாண்டு விழாவினை கொண்டாடி வருகிறது. அத்துடன் இணைந்து தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி, முதல் பெண் திரைப்பட இயக்குனர், "சினிமா ராணி" எனும் விருது பெற்ற திருமதி T.P.ராஜலக்ஷ்மி அவர்களின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இசை, நா
கம், சலனப்படம், பேசும்படம் என அவர் சென்ற இங்களிலெல்லாம் சாதனைகள் நிகழ்த்திய அந்தப் பெருமைக்குரிய பெண்ணின் நூற்றாண்டு விழா அவர் பிறந்த திருவையாறு நகரத்தில் கொண்டாடப் படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திருமதி T.P.ராஜலக்ஷ்மி அவர்களின் திருமகள் திருமதி கமலா மணி அவர்கள் பாராட்டப் படவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் அவர் நடித்த சில படக்காட்சிகளும், வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும் வெளியிடப் படவிருக்கின்றன. பெருமை மிகு இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.


நாள்: 23-11-2013 சனிக்கிழமை மாலை 4.30 மணி
இடம்: A.N.S. திருமண மண்டபம், பேருந்து நிலையம் அருகில், திருவையாறு.

நிகழ்ச்சி நிரல்:
23-11-2013 சனிக்கிழமை:

மாலை 4.30 மணி: படக்காட்சி "சினிமாராணியின் சினிமா"
மாலை 5.15 மணி: திரை இசை அரங்கு.
தேனிசைச் செல்வன் திரு ராஜாஸ்ரீவர்ஷன்

மாலை 6.00 மணி பாராட்டரங்கம்:

வரவேற்புரை: திரு வெ.கோபாலன், இயக்குனர்,
பாரதி இலக்கியப் பயிலகம்.

தலைமை: முனைவர் குமாரசாமி தம்பி
ரான் சுவாமிகள்
கட்டளை விசாரணை, தருமையாதீனம், திருவையாறு.

சிறப்புரை: திரு
டெல்லி கணேஷ், திரைப்படக் கலைஞர்.

டி.பி.ராஜலக்ஷ்மி அவர்களின் வாழ்க்கை வரலாற்று இதழை வெளியிட்டு வாழ்த்துரை:
திரு இரா. முத்து, அரசு கலை பண்பாட்டுத் துறை 

பாராட்டுரை: தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக நாடகத்துறை முன்னாள் தலைவர்
திரு சே. இராமானுஜம் அவர்கள்.

ஏற்புரை: திருமதி டி.பி.ராஜலக்ஷ்மி அவர்களின் புதல்வியார்
திருமதி கமலா மணி அவர்கள்.
நன்றியுரை: திரு நீ.சீனிவாசன், செயலாளர், பாரதி இயக்கம்.
அனைவரும் வாரீர்! 
அழைப்பின் மகிழ்வில்
பாரதி இலக்கியப் பயிலகம் - பாரதி இயக்கம், திருவையாறு
மரபு பஃவுண்டேஷன், தில்லைஸ்தானம்.

1 comment:

துரை செல்வராஜூ said...

விழா இனிதே நிகழ்வுற எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் பொழிவானாக!..