பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, October 16, 2013

தஞ்சை ராமையாதாஸ் பாடல்கள்

"ஆ"னா விலாசம்.

தஞ்சை ராமையாதாஸ் பிரபலமான திரைப்படக் கவிஞர். அவருடைய பாடல்கள் பல மக்கள் மனங்களில் நிலையாக இடம் பெற்றவை. அவர் "மணமகள்" திரைப்படத்துக்காக எழுதி இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் அவர்கள் பாடிய இந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள்.

"ஆனா விலாசந்தானப்பா உலகில் பெரியது
அதற்கிணையானது வேறேதப்பா
மூனாப் பசங்களையும் நானா விதங்களிலும்
முன்னேறச் செய்கிறதும் முதலாளி ஆக்குறதும் - ஆனா விலாசம்
கச்சேரி பண்ணுகிற கலிகால பாகவதர்
சிட்சை கற்கும் பெண்மணிகள் சிநேகம் பிடிக்கிறதும் - ஆனா விலாசம்
அத்தர் செண்டு வியாபார் அபகரித்து வாழ்கிறதும் - ஆனா விலாசம்
சங்கீத குயில்களும் சதிராடும் மயில்களும்
சர்வண்டுப் பயல்களெல்லாம் சபையேறிப் பேசுவதும் - ஆனாவ்லாசம்
பானா டூனாத் தெரியாத ரவுடிப் பசங்களெல்லாம்
மேனாட்டுக்காரன் போல வெளிச்சம் போட்டுத் திரியறதும் - ஆனா விலாசம்
சொந்த முயற்சியில்லா தொழில் செய்ய பயிற்சி யில்லாதவன்
சந்தர்ப்ப வசதியினால் தனவந்தன் ஆகிறதும் - ஆனா விலாசம்.

2. "மாப்பிள்ளை" படம். பாடல் தஞ்சை ராமையாதாஸ்.

ஆண்: டோசு கொடுக்க வேணும் - சரியான
டோசு கொடுக்க வேணும்
மோசமான எந்த கேசுக்கும் - தகுந்த
டோசு கொடுக்க வேணும்.
பெண்: மூன்று மணிக்கொரு வேளை தவறாமே
டோசு கொடுக்க வேண்டும்.
இருவரும்: டோசு கொடுக்க வேணும் - சரியான
டோசு கொடுக்க வேணும்.
பெண்: இருந்தது போனது நிலைமை
தெரியாத புதுப்பணக்காரனுக்கும் - முன்னே
ஆண்: ஏழைப் பாட்டாளி வாழ்வைக் கெடுத்திடும்
இரக்கமே இல்லாத இரும்புப் பெட்டிக்கும்
இருவரும்: டோசு கொடுக்க வேணும் - சரியான
டோசு கொடுக்க வேணும்.
ஆண்: கலத்துக்குத் தகுந்த ஜால்ரா போட்டுவரும்
கபோதி பசங்களுக்கும் - இந்த

பெண்: காரியம் சாதிக்க - சொந்த காரியம் சாதிக்க
கோளு மூட்டிவரும் காக்கா பசங்களுக்கும்
டேக்கா கொடுத்து நல்ல - டோசு கொடுக்க வேணும்.
ஆண்: வஞ்சகமாகவே வட்டிக்கு வட்டி வாங்கும்
யோக்கியனுக்கும்
பஞ்ச காலத்திலும் பதவி மோகத்திலும்
மிஞ்சி விளையாடும் லஞ்ச பிடாரிக்கும்
டோசு கொடுக்க வேணும் - சரியான டோசு கொடுக்க வேணும்.
பெண்: கள்ள மார்க்கெட்டில் கொள்ளையடிக்கும்
கனதனவான்களுக்கும் - அசல்
ஆண்: கட்சி பேரைச் சொல்லி - பல
கட்சி பேரைச் சொல்லி காசை பறிச்சிடும்
பச்சோந்தி கும்பலுக்கும் பிராடு பசங்களுக்கும்
டோசு கொடுக்க வேணும் - சரியான டோசு கொடுக்க வேணும்.

3. "மாப்பிள்ளை" படம். பாடல்: தஞ்சை ராமையாதாஸ்.

கண்ணும் கருத்துமா குடும்பம் நடத்த தெரியணும்
பெண்கள் கடமையை பெரிசா நினைக்கணும் - கண்ணும்
கால நெலைமையை தெரிஞ்சு வாழணும் - இங்கே
புரிஞ்சு வாழணும்.
காசு பணம் வந்தாலும் வீணே
கண்டபடி துள்ளாம தானே கச்சிதமா
குடும்பம் நடத்தத் தெரியணும் - பெண்கள்.
கடைமையை பெரிசா நினைக்கணும்.

தொட்டு தாலிகட்டியவன் முட்டாளாயிருந்தாலும்
கட்டுப்பட்டு ஆகணுமே கண்ணியமா வாழணுமே
மட்டு மரியாதையுடன் தொண்டு செய்ய வேண்டும்
தொண்டு செய்ய வேணும்.
கஷ்டத்திலும் கணவனோடு கலந்து வாழ வேணும்
மனம் மகிழ்ந்து வாழ வேணும்.

ஆங்கிலம் கற்றாலும் அதனால் ஆயிரம் வந்தாலும் - பதவிகள்
ஆயிரம் வந்தாலும் - ஆடம்பரத்தாலே வீண் ஆடம்பரத்தாலே
ஏழைகளை அவமதிக்காதே
எண்ணற்ற கற்றாலும் பெண்களுக்குப் பின்புத்தி என்றாலும்
ஆடவர்கள் ஏளனம் செய்தாலும் - அந்த
ஏட்டுச் சுவடிக் கிடம் கொடுக்காமலே
நாட்டுக்கு நன்மையை செய்திட வேணும் (ஆங்கிலம் கற்றாலும்)
பக்தியாலே தெய்வ சக்தியாலே - செய்த
பாவமெல்லாம் போகுமே - பதி
திருப்பத மலரடி அனுதினம் வணங்கிட.













2 comments:

துரை செல்வராஜூ said...

அதிர்ஷ்டம் - ’’ஆனா விலாசம்!..’’. ஒற்றைச் சொல் விளையாடல். அந்த காலத்தில் எல்லாம் இசையோடு நீதியை சொல்லிக் கொடுத்தார்கள்!.. இன்றைக்கு?...

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பாடல்கள்..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!