பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, October 25, 2013

பெண் விடுதலை (3)

மாதர் - பெண் விடுதலை (3)

நிகழும் காளயுக்தி வருஷம் சித்திரை மாதம்31-ம் தேதி திங்கட்கிழமை யன்று மாலை புதுச்சேரியில்ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி வீட்டில் திருவிளக்கு பூஜைசெய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு ஸ்திரீகள் கூடி விளக்குபூஜை முடித்துப் பாட்டுகள் பாடினர். அப்பால் ஸ்ரீ வ.வே. சுப்பிரமணிய அய்யரின் பத்தினியாகிய திருமதிபாக்கியலக்ஷ்மியம்மாள் பின்வரும் உபன்யாஸம்புரிந்தனர்:-
ஊக்கம்
சகோதரிகளே,
பெண் விடுதலை முயற்சிக்கு இந்த ஊர்"ஸ்திரீகள் தகுந்த படி உதவி செய்யவில்லையென்று நாம்மனவருத்தப்பட்டு நம்முடைய நோக்கத்தைத் தளரவிடக்கூடாது. நாம் செய்யும் கார்யம் இந்த ஒரூர் ஸ்திரீகளுக்குமாத்திரமேயன்று; பூமண்டலத்து ஸ்திரீகளுக்காக நாம்பாடுபடுகிறோம்.
உலகமெங்கும் விடுதலை யருவிநீர் காட்டாறுபோலே ஓடி அலறிக்கொண்டுவரும் ஸமயத்தில் நீங்கள்நாவு வறண்டு ஏன் தவிக்கிறீர்கள்?
ஸகோதரிகளே, தயங்காதீர்கள், மலைக்காதீர்கள்.திரும்பிப் பாராமல் நாம் செய்யவேண்டிய எந்தக்கார்யத்தையும் நிறைவேற்றும் வரை - நம்முடையலக்ஷ்யத்தை அடையும் வரை - முன் வைத்த காலைப்பின் வைக்காமல் நடந்து செல்லுங்கள். பேடிகளாயிருந்தால்திரும்புங்கள்.
நாம் கொண்ட காரியமோ பெரிது. இதற்குப்பெரிய இடையூறுகள் நிச்சயமாக நேரிடும். ஆனால்நீங்கள் பயப்படக் கூடாது.
'பயமே பாபமாகும்' என்று விவேகாநந்தர்"சொல்லியதை மறவாதீர்கள். நந்தனார் விடுதலைக்குப் பட்டசிரமங்களை நினைத்துப் பாருங்கள்.
உங்களில் ஒவ்வொருவருடைய கொள்கைகளைஇன்று வாய் விட்டு விஸ்தாரமாகச் சொல்லிவிடுங்கள்.மனதிலுள்ள பயம், வெட்கம் என்ற பேய்களை தைர்யவாளால் வெட்டி வீழ்த்திவிட்டு பாரத ஸஹோதரிகள்பாரதமாதாவுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதே என்னுடையப்ரார்த்தனை. ஓம் வந்தே மாதரம்.
ஸ்ரீரங்கப் பாப்பா
பிறகு ஸ்ரீமான் மண்டயம் ஸ்ரீநிவாஸாசாரியார்குழந்தை ரங்கா பின் வரும் உபந்யாஸத்தை படித்தது:-
அநாகரீக ஜாதியார்
இந்தியாவில் முன்பு ஆரியர் குடியேறு முன்னேஇருந்த பூர்வீக ஜனங்கள் கருநிறமாகவும் சப்பை மூக்காகவும்இருந்தார்கள்; நாகரீகமற்ற பேதை ஜனங்கள். அவர்களுடையசந்ததியார் இப்போது சில குன்றுகளின் மீதும் சில"கனிகளிடையிலும் வஸிக்கின்றனர். இந்த வகுப்பைச் சேர்ந்தஜூலாஸ் குலக் என்ற ஜாதி ஒன்று இப்போது ஒரிஸ்ஸாதேசத்தில் இருக்கிறது. துரைத்தனத்தார் அந்த ஜாதிக்குஇனாமாகத் துணி கொடுத்துக் கட்டிக் கொள்ளும்படி செய்து,துணி கட்டிக் கொள்வோருக்கு வெகுமதி கொடுத்துத் துணிகட்டும் நாகரீகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்கள். இதுவரை அந்த ஜாதியார் இவைகளைஉடைபோல் உடுப்பது வழக்கம். இந்த அநாகரீக ஜாதியிலுள்ளமனுஷ்யர் கூடப் பெண்களை மிருகங்கள் மாதிரியாகவேநடத்துகின்றனர்! ஆதலால், நம்முடைய ஆண் மக்கள் நம்மைக்கீழாக நடத்துவது தங்களுடைய உயர்ந்த அறிவுக்குலக்ஷணமென்று நினைத்தால் சரியில்லை. நம்மைக் காட்டிலும்ஆண் மக்கள் சரீர பலத்தில் அதிகம். அதனால் நம்மைஇஷ்டப்படி ஸஞ்சரிக்க வொட்டாமலும் பள்ளிக்கூடம் போய்படிக்கவொட்டாமலும் தடுக்க முடிந்தது. இதனால் அவர்கள்நம்மைவிட மேலென்று நினைத்துக்கொள்ளுதல் தவறு.

அப்பால் மேற்படி கூட்டத்தில் சகுந்தலா பின்வரும்பாட்டுப் பாடினாள்.
சீனபாஷையில் 'சீயூ சீன்' என்ற ஸ்திரீ பாடியபாட்டின் தமிழ் மொழி பெயர்ப்பு.
விடுதலைக்கு மகளி ரெல்லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவமென்றே
திட மனத்தின் மதுக் கிண்ணமீது
சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம்
" உடையவள் சக்தியாண் பெண்ணிரண்டும்
ஒரு நிகர் செய் துரிமை சமைத்தாள்,
இடையிலே பட்ட கீழ் நிலை கண்டீர்
இதற்கு நாமொருப்பட்டிருப்போமோ?           (1)
திறமையா லிங்கு மேனிலை சேர்வோம்.
தீய பண்டை யிகழ்ச்சிகள் தேய்ப்போம்
குறைவிலாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண் களெனி லவரோடும்
சிறுமை தீர நந்தாய்த் திரு நாட்டைத்
திரும்ப வெல்வதிற் சேர்ந்திங் குழைப்போம்
அற விழுந்தது பண்டை வழக்கம்
ஆணுக்குப் பெண் விலங்கெனு மஃதே         (2)
விடியு நல்லொளி காணுதி நின்றே
மேவு நாக ரீகம் புதிதொன்றே!"     
கொடியர் நம்மை யடிமைக ளென்றே,
கொண்டு தாமுதலென்றன ரன்றே!
அடியொடந்த வழக்கத்தைக் கொன்றே
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர் நந்தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர் துணிவுற்றே.               (3)
அப்பால் சில பெண்கள் பேசினர். மங்களப் பாட்டுடன்'மஞ்சள் குங்கும'க் கூட்டம் முடிவு பெற்றது.


No comments: