பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, January 7, 2012

முல்லைப் பெரியாறும் சிறாரும்


  முல்லைப்  பெரியாறும் சிறாரும் 
 

புருனெய் தனுசுக்கும் வேண்டுமோ அறிமுகம்?
இதோ அவர் கவிதை.








செம்மொழியும் இளமொழியும்
முத்தமிடும் மண்ணில் 
மணியோசை கேட்கிறது- யானை வருமோ?
இடியோசை கேட்கிறது- மழை வருமோ?
மதம் அடங்குமோ? பிழை முடியுமோ?


பெரிய மனுஷன் பென்னி 
சேகரித்து தந்தான் தண்ணி-அன்று  
அந்நியனுக்கு இருந்தது அக்கறை -இன்று 
 அநியாயத்திற்கு  அழைப்புவைக்குது  அக்கரை.

"ஒழிக" ஒருபக்கம்
"மரியட்டே" மறுபக்கம்
அரபிக்கடலும் வங்கக்கடலும் -தீ 
கொள்ளும்  காலமோ ?

சிவகிரியும் சதுரகிரியும்  
அறியும் அந்த நீர்வலம் என்னவென்று.  
முல்லையும் பெரியாரும்  
அறியும் அந்த நீர்வளம் யாதென்று.  

யார்வளம் காண- நீர்வளம்  களமானது? 
இந்த  நீர்பலமே - இங்கு      
பசுமைக்கு அணையாவிளக்கு-அதை 
யாருமறிய அணையே நீ விளக்கு. 

எமக்கொரு உறவாய் நீர்  பிறந்தீர். 
எமக்கென்று இருக்கும் நீர் பிரித்து
நீரின் எல்லை குறைப்பது நியாயமா?
நீர் எல்லைதாண்டுவது  நியாயமா?
  
-தனுசு -

1 comment:

Unknown said...

///யார்வளம் காண- நீர்வளம் களமானது?
இந்த நீர்பலமே - இங்கு
பசுமைக்கு அணையாவிளக்கு-அதை
யாருமறிய அணையே நீ விளக்கு.////

உண்மைதான்
விலக்க வேண்டியவைகளை விளங்காதவர்கள் கூடி
விலக்காமல் இருப்பதன் கொடுமை...
நதிநீர்களை இணைத்தால் இந்த சதிகள்
யாவும் மறையாதோ....