பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, November 4, 2010

கலியின் விளைவு

கலியின் விளைவுகளை மகாகவி பாரதி குறிப்பிடுகிறார்.

"மிகப் பொன் உடையோன், மிக அதைச் சிதறுவோன்
 அவனே வலியனாய் ஆணைதான் செலுத்துவன்.
 பாத்திரம் தவறிப் பைம்பொன் வழங்கலே
 தவம் என முடியும், தையலார் நாணிலாது
 ஆட்சியை விரும்புவர். அவனியை ஆள்வோர்
 குடிகளின் உடைமையைக் கொள்ளையிட்டு அழிப்பர்,
 பொய்யுரை கூறி வணிகர்தம் பொருளைக்
 கவர்வர், இவ்வுலகத்தின் இறுதியின் கண்ணே
 மக்களின் அறன் எலாம் மயங்கி நின்றிடுமால்
 பொருட் காப்பு என்பது போய்ப் பெரும் கேடுறும்."

No comments: